tag:blogger.com,1999:blog-255939732009-07-18T02:52:17.303+05:30யுவகிருஷ்ணாயுவகிருஷ்ணாhttp://www.blogger.com/profile/04524693633714401444yuvakrishna@gmail.comBlogger18125tag:blogger.com,1999:blog-25593973.post-38159792194253184632009-07-18T00:33:00.004+05:302009-07-18T01:00:39.947+05:30வேலுபிரபாகரனின் காமக்கதை!<a href="http://1.bp.blogspot.com/_bEe2H0J8xQk/SmDRWZehDkI/AAAAAAAAAA4/0jpa0X_cvhU/s1600-h/kadhal+kadhai.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 328px;" src="http://1.bp.blogspot.com/_bEe2H0J8xQk/SmDRWZehDkI/AAAAAAAAAA4/0jpa0X_cvhU/s400/kadhal+kadhai.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5359513739297099330" /></a><br />காதல் என்ற சொல்லுக்கு எந்த பொருளுமில்லை. பெண்ணின் உடல் மீதான ஈர்ப்பும், காமமுமே நம் சமூகத்தில் காதல் என்று சொல்லப்படுகிறது. இந்த காதல் என்ற கருமாந்திரம் இல்லாவிட்டால் இந்தியர்கள் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு முன்பே பல்பை கண்டுபிடித்து ஆட்டு ஆட்டுவென்று ஆட்டியிருப்பார்கள் என்ற சிந்தனையை உரக்கச் சொல்லவே காதல் கதை என்ற செல்லுலாய்டு குப்பையை கொட்டியிருக்கிறார் வேலுபிரபாகரன்.<br /><br />சென்சார் இப்படத்தைப் போட்டுக் குதறியதில் எந்த தப்புமேயில்லை. பாடாவதி படத்தை திரும்ப திரும்ப சோர்வடையாமல் போட்டுப் பார்த்து வெட்டித்தள்ளிய சென்சார் அதிகாரிகளுக்கு கலாச்சார அமைச்சகம் சம்பள உயர்வு கொடுக்கலாம். பாடல் காட்சிகளிலும், ஏனைய காட்சிகளிலும் தாராளமாக செமி நியூட். படத்தில் நடித்த நடிகைகளுக்கு மார்பகம் குறித்த பிரக்ஞையே சற்றும் இல்லை என்பதால் தமிழ் சினிமா ஹாலிவுட் அளவுக்கு சைஸில் பெருத்து விட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.<br /><br />காதல் மற்றும் காமம் குறித்த வேலுபிரபாகரனின் உளறல்களுக்கு இடையே பகுத்தறிவுப் பிரச்சாரக் கொடுமை. ஒரு காட்சியில் வேலுபிரபாகரன் பெரியார் வேடத்தில் தோன்றிப் படுத்துகிறார். பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கிறது? கொஞ்சமும் சரக்கில்லாத மூன்றாந்தர இந்த பிட்டுப் படத்தை எடுத்துவிட்டு இத்தனை நாளாக ஊடகங்களில் வேலு பிலிம் காட்டிக் கொண்டிருந்தது ரொம்பவும் ஓவர். ரஜினிகாந்த் இப்படத்துக்கு பொருளாதார ரீதியாக உதவியிருந்தால் அதைவிட நகைச்சுவை வேறெதுவுமில்லை.<br /><br />ஹீரோயின் ஷெர்லினின் கண்கள் மட்டும் ஆறுதல். முதல் படமென்றாலும் திறந்த மனதோடே கேமிராவை அணுகியிருக்கிறார். பாபிலோனா உள்ளிட்ட மற்ற கட்டைகளும் தங்கள் திறமையை சிறப்பாகவே வெளிக்காட்டியிருக்கிறார்கள். இவர்களின் இடுப்புக்கும், மார்புக்கும் ஸ்பெஷல் லைட்டிங் அமைப்பதிலேயே கேமிராமேனின் மொத்தக் கவனமும் இருந்திருக்கிறது.<br /><br />பெண் உடல் மீதான கிளர்ச்சி இளைஞர்களுக்கு இருப்பதாலேயே நாட்டில் நடைபெறுகிற குற்றங்களில் எண்பது சதவிகிதம் பாலியல் குற்றமாக இருக்கிறது என்று முதல் காட்சியிலேயே பாடம் போதிக்கும் வேலுபிரபாகரன் இப்படம் மூலமாக தீர்வு எதையும் முன்வைக்கவில்லை. மாறாக மேலும் பாலியல் குற்றங்கள் முன்பைவிட தீர்க்கமாக நடைபெற உந்துசக்தியாக இப்படத்தின் காட்சிகளை அமைத்திருக்கிறார். வரைமுறையற்ற காமத்துக்கு சுதந்திரம் கோருகிறார். இந்த கண்ணறாவியைப் பார்த்துவிட்டு எந்த மாதிரியான விவாதம் சமூகத்தில் கிளம்பும் என்று அவர் எதிர்பார்க்கிறாரோ புரியவில்லை.<br /><br />பிரபல கவர்ச்சி நடிகையை வேலுபிரபாகரன் திருமணம் செய்துகொண்டு சில நாட்கள் வாழ்ந்திருக்கிறார். அவர் மீது கொண்டது காதலல்ல, வெறும் காமம் என்றுணர்ந்து விலகியிருக்கிறார். பிறகு வேறொரு பெண்ணிடம் காதல்வசப்பட்டு.. மன்னிக்கவும் காமவசப்பட்டு, பின்னர் ஏமாற்றப்பட்டிருக்கிறார். எனவே காதல் என்பது பொய், காமம் என்பதே மெய் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். இப்படியாக சொந்தவாழ்வில் ஏற்பட்ட சில காம, காதல் குளறுபடிகளால் மனம் குழம்பி ‘வேலுபிரபாகரனின் காதல் கதை' என்று படமெடுத்து மக்களையும் குழப்ப கிளம்பியிருக்கிறார்.<br /><br />ஆர்ட் டைரக்ஷன் தவிர்த்து தொழில்நுட்பரீதியாகவும், உள்ளடக்க ரீதியாகவும் மகா மகா மட்டமான படைப்பு இது. ஒரு மேட்டர் படத்துக்கு எப்படி இசையமைக்க வேண்டுமோ, அப்படியே கச்சிதமாக இசையமைத்திருக்கிறார் இசைஞானி. தியேட்டரில் எக்ஸ்ட்ரா பிட் ஓட்டாதது ஒன்றுதான் பாக்கி. மற்றபடி முழுநீல வண்ணப்படம். அரங்கு நிறைந்து ஓடுகிறது. இதுபோதாதா வேலுபிரபாகரனுக்கு?<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-3815979219425318463?l=www.luckylookonline.com'/></div>யுவகிருஷ்ணாhttp://www.blogger.com/profile/04524693633714401444yuvakrishna@gmail.com2tag:blogger.com,1999:blog-25593973.post-81628377973038770022009-07-17T02:25:00.000+05:302009-07-18T02:26:42.561+05:30உங்களில் யார் அடுத்த நயன்தாரா?<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SkSzWbF3mdI/AAAAAAAACQs/XwOJy9EBxmM/s1600-h/image..jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 283px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SkSzWbF3mdI/AAAAAAAACQs/XwOJy9EBxmM/s400/image..jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5351599455033858514" /></a><br /><b><span class="Apple-style-span" style="font-size: large;">போ</span></b>னமாதத்தில் ஒரு நாள் அதிகாலை ஏழரை மணிக்கு, லுங்கி கட்டிக்கொண்டு லைட்டான மேக்கப்பில் சத்யன் டீ ஸ்டால் வாசலில் இருந்த பொட்டீக்கடையில் குமுதம் ரிப்போர்ட்டர் (Branding.. Branding) வாங்கப் போயிருந்தேன். தினத்தந்தியைப் புரட்டிக் கொண்டிருந்த அவர் பப்ளிக் கக்கூசில் க்யூவுக்கு நிற்கும் அவசரத்தோடு சொன்னார்.<br /><br />“தம்பி.. ஒரு நிமிஷம் நில்லு! மேட்டர் கேள்விப்பட்டியா?” - அண்ணாச்சி சரியான சரக்கு வண்டி. முந்தைய நைட்டு அடித்த ஓல்டு மாங்க் கப்பு கப்பென்று அசுகந்தமாய் தேநீர்க்கடை முழுக்க பரவியது. டீ குடித்துக் கொண்டிருந்த சிலர் வாந்தி வரும் முகபாவத்தை காட்டினார்கள்.<br /><br />“சொல்லுங்கண்ணே!” ஜூனியர் விகடனில் செல்போன் டவர் பிரச்சினைக்கு போட்டோவோடு பேட்டி கொடுத்ததிலிருந்து - அந்தப் பேட்டியால் வேறு பிரயோசனமில்லை. இன்னும் ஏகப்பட்ட டவர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் தொடர்ந்து நிறுவப்படுகிறது என்பது வேறு விஷயம் - மடிப்பாக்கத்தில் நிஜமாகவே நான் ஒரு செலிபிரிட்டி. எந்த பொதுப்பிரச்சினையாக இருந்தாலும் ட்ராபிக் ராமசாமியிடம் சொல்லுவது போல சிலபேர் என்னிடம் சொல்கிறார்கள்.<br /><br />“நம்ம ஊரு ரொம்ப கெட்டுப்போச்சி. நைட்டுலே என்னென்னவோ அசிங்கம் நடக்குது!”<br /><br />ஆஹா. ’மேட்டர்’ நழுவி டீயில் விழுதே. கலர் போட்டோவோடு இன்னொரு ஜூ.வி. பேட்டி.<br /><br />“என்னாச்சுண்ணே!”<br /><br />“நம்ப குளம் வத்திப் போச்சுல்லே. வத்திப் போனது இந்த பொறுக்கி பயலுங்களுக்கு வசதியாப் போச்சி”<br /><br />மடிப்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு அருகில் குளம் என்ற பெயரில் ஒரு மட்டமான குட்டை உண்டு. சோழர் காலத்தில் ஓதீஸ்வரர் கோயில் குளமாக இருந்தது மட்டுமே அக்குளத்துக்கு எஞ்சி நிற்கும் பெருமை. குளத்தைச் சுற்றி குடியிருப்புகள் ஏற்பட்டு, கழிவுகள் அசால்ட்டாக குளத்துக்கு திருப்பி விடப்படுவதால் அது குளமா இல்லை கூவமா என்று குடியிருப்புச் சங்கங்களால் பட்டிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது.<br /><br />பல ஏக்கர் பரப்பளவு வாய்ந்தது என்பதால், அதை ஆட்டை போட்டு துட்டாக்கிவிடலாம் என்ற ஆசை லோக்கல் அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது. எனவே தற்காலிகமாக குப்பை கொட்டி குப்பை மேடாக்கி மடக்கிப் போடும் திட்டத்தோடு இருக்கிறார்கள். மழைக்காலங்களில் மட்டும் மழைநீர் தூய்மையாக பொழிந்து, குளத்தில் தேங்கி ஓரிருநாட்களில் அசுத்தமாகிவிடும்.<br /><br />அக்டோபர் தொடங்கி ஏப்ரல் வரை கருமையான நீர் குளத்தை அலங்கரிக்கும். எருமைகளுக்கு இக்காலக்கட்டம் கொண்டாட்டமானது. பச்சையான ஆகாயத்தாமரை இலைகளை கருப்பாக எங்காவது பார்த்திருக்கிறீர்களா? மடிப்பாக்கத்தில் மழைக்காலத்தில் பார்க்கலாம். இப்படிப்பட்ட கொடூரக்குளத்தை நம்பியும் விறால் மீன்கள் வளருகிறது என்பது இயற்கைக்கே சவால் விடும் விஷயம். மீன்பாடி வண்டியில் மூட்டை மூட்டையாக பிடித்துக் கொண்டு போகிறார்கள்.<br /><br />மடிப்பாக்கத்தின் தன்னிகரில்லா தெருநாய்களின் வேடந்தாங்கலும் இந்த குளமே. நாள் முழுக்க தெருக்களில் போவோர் வருவோரை கடித்துவிட்டு, இரவுகளில் ‘இன்னபிற’ மேட்டர்களுக்காக நாய்கள் மாநாடு இங்கே நடக்கும்.<br /><br />இச்சிறப்புகள் வாய்ந்த குளத்தைப் பற்றிதான் நம்ம அண்ணாச்சி சொல்லிக் கொண்டிருக்கிறார்.<br /><br />105 டிகிரி வெயிலில் சாக்கடைநீரும் கூட வற்றிப்போக, குப்பைமேட்டுக்கு இடையில் கான்க்ரீட் கொட்டி பசங்க சில பேர் போனமாதம் கிரிக்கெட் பிட்ச் அமைத்து விளையாடி வருகிறார்கள். உண்மையிலேயே நல்ல பசங்க. அந்தப் பசங்களைதான் இவர் பொறுக்கிப் பசங்க என்கிறாரோ என்று சந்தேகம் வந்தது. மேலும் சரக்கு வண்டி அண்ணாச்சி தொடர்ந்தார்.<br /><br />“நேத்து நைட்டு சுமாரா பண்ணிரண்டரை, ஒரு மணி இருக்கும். நாய்ங்க ரொம்ப மோசமா ஊளையிட்டிக்கிட்டிருந்திச்சி. திடீர்னு எல்லாமே சைலண்ட் ஆயிட்டதாலே தூக்கம் களைஞ்சிப்போயி வெளியே வந்தேன்”<br /><br />இந்த நாய்கள் ஊளையிடல் பற்றி இடைசெருகியே ஆகவேண்டும். குளிர்காலமான கார்த்திகை மாதத்தில் துணைதேட ஊளையிடுகின்றன. இரவுகளிலும் அனல் வீசும் மே, ஜூன் மாதங்களில் ஊளையிட காரணமேயில்லையே என்று நீங்கள் நினைக்கலாம். தின்ற குப்பை ஜீரணமாகாமல் ஊளையிடுகின்றன என்பது என்னுடைய அறிவியல் கண்டுப்பிடிப்பு.<br /><br />வெளியே வந்த அண்ணாச்சி கண்டினியூகிறார்.<br /><br />“அதுக்கு முன்னாடி லைட்டா ஆட்டோ சத்தம் கேட்டுச்சி. குளத்துக்கு நடுவுலே பசங்க கிரிக்கெட் ஆட பிச்சி போட்டிருக்கானுங்க இல்லே. அங்கே ஒரு ஷேர் ஆட்டோ நின்னுச்சி. நாலு தடிப்பயலுக எறங்கி பிஸ்கட் பாக்கெட்டை பிரிச்சி நாய்ங்களுக்கு போட்டு சைலண்டு ஆக்கிட்டிருந்தானுங்க”<br /><br />“ம்.. ஒருவேளை தண்ணியடிக்க வந்திருப்பானுங்களோ”<br /><br />“அப்படி வந்திருந்தானுங்கன்னா நானும் போயி ஒரு பெக் அடிச்சிருக்க மாட்டேனா? பின்னாடியே ஒரு பொண்ணு எறங்கிச்சிப்பா. அப்புறமென்ன நடக்கக்கூடாத அசிங்கமெல்லாம் நடந்தது. எல்லா கருமத்தையும் தூரமா ஒளிஞ்சி நின்னு பார்த்தேன்”<br /><br />“நெஜமாவா அண்ணாச்சி? நம்ம ஊருப்பசங்க பொண்ணு மேட்டர்லே எல்லாம் இவ்ளோ மோசமில்லையே? யாராவது வெளியூரு ஆளுங்களா இருக்கும்”<br /><br />“அட நீ ஒண்ணு. அந்தப் பசங்க நம்ம ரூட்லே ஆட்டோ ஓட்டுற பசங்கதான். எனக்கு தெரியாதா என்ன?”<br /><br />“அப்புறம்?”<br /><br />“தைரியத்தை வரவழைச்சிக்கிட்டு கடைசி வீட்டு கதவைத் தட்டி அந்த அம்மாவை கூப்பிட்டுக்கிட்டு போயி நியாயம் கேட்டேன்” - அண்ணாச்சி குறிப்பிடும் கடைசி வீட்டம்மா கிட்டத்தட்ட சொர்ணாக்கா மாதிரி இருப்பார். அவர் வீட்டு கதவைத்தட்டி கூப்பிடதான் அண்ணாச்சிக்கு தைரியம் தேவைப்பட்டதே தவிர, பொறுக்கிப்பசங்களிடம் போயி நியாயம் கேட்க தேவையான தில்லு அவரிடமே இருந்தது.<br /><br />“நல்ல வேளை செஞ்சீங்க?”<br /><br />“அடப்போப்பா. அவனுங்க அந்தம்மாவை நாங்க இன்னா உன் கைய புடிச்சா இழுத்தோம்னு சொல்லி பிரச்சினை பண்ணிட்டானுங்க. என்ன பண்ணுறதுன்னே தெரியலை” என்றார்.<br /><br />“கவலைப்படாதீங்க அண்ணாச்சி. தலைவரு கிட்டே சொல்லி ஏதாவது நடவடிக்கை எடுக்கலாம். இல்லேன்னா போலிஸுக்கு போவலாம்” என்றேன்.<br /><br /><br /><b><span class="Apple-style-span" style="font-size: large;">அ</span></b>ண்ணாச்சி சொன்னதை கேட்டதிலிருந்து ஒரு க்யூர்யாஸிட்டி (தமிழ்லே மிகச்சரியான வார்த்தை குறுகுறுப்பா?) இருந்தது. கையும், காண்டமுமாக பசங்களை சம்பந்தப்பட்ட குஜிலியோடு பிடிக்க வேண்டுமென்று. சில இலக்கியப் பணிகள் சுமையைக் கூட்ட அப்போதைக்கு மறந்துப்போனேன்.<br /><br />ஆனாலும் பராபரியாக நிறைய செய்திகள் தினமும் வந்துக்கொண்டிருந்தன. குட்டையில் எஞ்சியிருக்கும் தண்ணீரில் குஜிலியோடு பசங்க ஜலக்கிரீடை செய்வதாகவும், காலையில் போய் பார்த்தால் நிறைய நிரோத்து (எந்த பிராண்டாக இருந்தாலும் நம்ம ஆளுகளுக்கு அது நிரோத் தான்) விழுந்து கிடப்பதாகவும், சரக்கு பாட்டில்கள் உடைந்து சிதறிக் கிடப்பதாகவும் செய்திகள் வந்தவண்ணமே இருந்தன.<br /><br />போனவாரத்தில் ஒருநாள் முரளியை துணைக்கு அழைத்துக் கொண்டேன். முரளி என்னுடைய பாடிகார்ட்-கம்-நண்பன். பாடிகார்ட் என்று வார்த்தைக்கு சொன்னாலும் அவனுடைய பாடி கோழி பாடி. ஆனாலும் வாய் உதாரில் பெரிய ரவுடி போல பில்டப் கொடுக்கக்கூடிய சாமர்த்தியம் கொண்டவன். ஏற்கனவே இதே குளத்தில் நள்ளிரவில் பேய்கள் குளிப்பதாக பரவிய மர்ம வதந்தியை அவனுடைய உதவியால் கட்டுடைத்து பகுத்தறிவு சேவை செய்த புண்ணியம் எனக்குண்டு. இரவுகளில் யாரோ தண்ணீரை மொண்டு மொண்டு குளிப்பது போல சத்தம் வந்தது உண்மைதான். முரளியின் உதவியோடு புலன்விசாரணை செய்ததில் வெறிநாய்கள் வெறிதீர குளத்தில் உருண்டு, புரண்டு விளையாடியதால் ஏற்பட்ட சத்தம் அது என்பதை தரவுகளோடு பொதுமக்களுக்கு நிரூபித்தேன்.<br /><br />மனிதன் க்ளைமேக்ஸ் ரஜினி கணக்காக அன்று இரவு பதினோரு, பதினொன்றரை மணியளவில் காஸ்ட்யூம்ஸ், கேன்வாஸ் ஷூ எல்லாம் அணிந்தேன். அச்சந்தர்ப்பத்துக்கு பொருத்தமில்லாத தொப்பி ஒன்றும் ஸ்டைலுக்கு அணிந்துகொண்டேன். இடையில் ஒரு பாதுகாப்புக்காக காய்கறி வெட்டும் கத்தி ஒன்றை மறைத்து வைத்துக் கொண்டேன். அப்பாவின் அந்தக்காலத்து பெரிய டார்ச்சையும் எடுத்துக் கொண்டேன். முரளிக்கு சிக்னல் கொடுத்தேன். ஏதோ ஆந்தை அலறுகிறது என்று நினைத்து புரண்டு படுத்திருக்கிறான் மூதேவி.<br /><br />இவன்களை வைத்துக்கொண்டு புல்லு கூட புடுங்கமுடியாது என்று புலம்பியபடியே கதவைத்தட்டி எழுப்பி அழைத்துச் சென்றேன். நக்சல்பாரிகளுக்காக லால்கரில் போராடும் பழங்குடியினர் கெட்டப்பில் இருந்தான். மிகச்சரியாக சொல்லவேண்டுமானால் மருதுபாண்டி, வெள்ளைத்துரை மாதிரி லுங்கி கட்டிக்கொண்டு வெற்றுடம்பில் கருப்பு பெட்ஷீட் போர்த்தியிருந்தான். கையில் ஒரு டெர்ரர் லுக்குக்காக கோல் ஒன்றும் வைத்திருந்தான். அவனைப் பார்க்க எனக்கே கொஞ்சம் பயமாக இருந்தது.<br /><br />குளத்தை நெருங்கும்போது தூரத்தில் சிகரெட் நெருப்பு இரண்டு மூன்று தெரிந்தது. அவர்களிடம் போய் என்ன பேசப்போகிறோம் என்ற திட்டம் எதுவுமில்லை என்றாலும், ஏதோ ஒரு ஆர்வத்தில் இருவரும் பயணித்தோம். ஏற்கனவே இதே மாதிரி விவகாரத்தை (குஜிலி மேட்டர் அல்ல, வெறும் தண்ணி மேட்டர்) போலிஸ் ப்ரெண்ட்ஸ் துணையோடு சுமூகமாக தீர்த்துவைத்த அனுபவமும் எங்களுக்குண்டு.<br /><br />அருகில் நெருங்கியபோது கசமுசா சத்தம் எழுந்தது. நான்கைந்து பயல்கள் அவசரமாக எழுந்து நின்றார்கள். ஆட்டோ எதையும் காணவில்லை. இரண்டு மூன்று பைக்குகள் மட்டுமே.<br /><br />“அட நம்ம அண்ணண்டா” - நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தபோது பிறந்த பயல் ஒருத்தன் கையில் பீர்பாட்டிலோடு சொன்னான்.<br /><br />முரளி குரல் கொடுத்தான் “ஏண்டா ஊடுங்க இருக்குற எடத்துலே இதுமாதிரி குட்சிட்டு கும்மாளம் போட்டா வெளங்குமா? உங்க அப்பன் ஆயியெல்லாம் கேக்க மாட்டாங்களாடா?”<br /><br />“இல்லேன்னா. இன்னிக்கு மட்டும்தான். ஊர்லே இருந்து ப்ரெண்ட்ஸ் வந்திருந்தாங்க. பார்ட்டி கொடுக்கறோம். நீயும் கொஞ்சம் சாப்பிடுண்ணா” - தாகமாக இருந்தாலும், சின்ன பயல்களிடம் வாங்கி குடிக்க மனசு ஒப்பவில்லை. வாழ்த்து(?) சொல்லிவிட்டு நடையைக் கட்டினோம்.<br /><br /><br /><span class="Apple-style-span" style="font-size: large;"><b>இ</b></span>தெல்லாம் சரக்கு அண்ணாச்சி கிளப்பிவிட்ட வதந்தியாகதான் இருக்கணும். ஆனா சாட்சிக்கு கடைசி வீட்டு அம்மாவை வேறு அலிபியாக சேர்த்திருக்கிறாரே என்று குழப்பமாக இருந்தது. கடைசி வீட்டு அம்மாவும் கூட அவ்வப்போது சரக்கு சாப்பிடுவதை ஹாபியாக கொண்டிருக்கிறார் என்பதால் அவரது சாட்சியும் நம்புவதற்கில்லை என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.<br /><br />இன்று காலை அலுவலகத்துக்கு பைக்கில் வந்துக்கொண்டிருந்தேன். பெந்தேகொஸ்தே சர்ச் அருகில் சரக்கு அண்ணாச்சி கை காட்டி வண்டியை நிறுத்தினார்.<br /><br />“விஷயம் தெரியுமா தம்பி. நேத்து நைட்டு அந்த ஷேர் ஆட்டோ பசங்களுக்கும் அந்தப் பொண்ணுக்கும் துட்டு மேட்டருலே செம தகராறு. ஒரே சத்தம். அக்கம் பக்கம் யாரும் தூங்க முடியல”<br /><br />“இல்லியே அண்ணாச்சி. வெசாரிச்சி பார்த்ததுலே எப்பனாச்சுக்கும் சில பசங்க தண்ணி அடிக்கிறானுங்க. மத்த கலாட்டா ஏதுமில்லைன்னு சொல்றாங்களே?”<br /><br />“அப்ப நானென்ன பொய்யா சொல்றேன். வேணும்னா கடைசி வூட்டு அம்மாவை கேட்டுப் பாறேன்! நேத்து அவங்களும்தான் பாத்தாங்க!”<br /><br />ஷேர் ஆட்டோ அழகி குழப்பம் மறுபடியும் மனசை ஆக்கிரமிக்கிறது.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-8162837797303877002?l=www.luckylookonline.com'/></div>யுவகிருஷ்ணாhttp://www.blogger.com/profile/04524693633714401444yuvakrishna@gmail.com0tag:blogger.com,1999:blog-25593973.post-91649084215320254752009-07-16T02:42:00.000+05:302009-07-18T02:45:41.907+05:30மோகன் அண்ணா!<a href="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SDP9RBtQfZI/AAAAAAAAAwc/rAJAGpW1RyU/s1600-h/Barber.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SDP9RBtQfZI/AAAAAAAAAwc/rAJAGpW1RyU/s400/Barber.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5202780463500918162" /></a><br />எனக்கு சிறுவயதாக இருந்தபோது மடிப்பாக்கத்தில் முடிவெட்டும் கடை எல்லாம் இருந்ததாக நினைவில்லை. கன்னியப்பன் ஒவ்வொருத்தர் வீடாக வந்து முடிவெட்டி விட்டு செல்வார். ஞாயிற்றுக்கிழமைகளில் அவருக்கு வேலை அதிகம். பெருசுகள் எல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் முடிவெட்டிக் கொள்ளும் என்பதால் வாரநாட்களில் தான் பையன்களுக்கு முடிவெட்டுவார். அதுவும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எந்த பையனும் தலைநீட்ட வீடுகளில் அனுமதிக்கப்படாது என்பதால் மற்றக்கிழமைகளில் வந்து வெட்டிவிட்டு ரெண்டு ரூபாயோ, மூன்று ரூபாயோ வாங்கிச் செல்வார்.<br /><br />எனக்கு முடிவெட்டும் போது தலையை அசைத்துக்கொண்டே இருப்பேன். அவருக்கு வாகாக தலையை காட்டமாட்டேன். “சாவுற காலத்துலே சங்கரா, சங்காரான்னு கெடக்க வேண்டிய வயசுலே இவங்கிட்டே அவஸ்தைப் படுறேன்!” என்று புலம்பிக்கொண்டே வெட்டுவார். முடிவெட்டி முடித்ததும் கண்ணாடியைப் பார்த்து நொந்துவிடுவேன். அம்மா “ஷாட்டா வெட்டுங்க” என்று தான் கன்னியப்பனிடம் சொல்லியிருப்பார். கன்னியப்பனோ கிட்டத்தட்ட மொட்டையே அடித்துவிடுவார். மீண்டும் முடி வளர்ந்து ஒரு நிலைக்கு வர கிட்டத்தட்ட ஆறுமாதமாகிவிடும். ஒருநாள் திடீரென்று அந்த கன்னியப்பன் இறந்துப் போனார். கன்னியப்பனுக்கு நான்கு மகன்கள் என்பதாக நினைவு. கன்னியப்பனின் இரண்டாவது மகன் தான் மோகன் அண்ணா. மற்ற மகன்கள் வேறு வேறு தொழில்களுக்கு மாறிவிட மோகன் அண்ணா மட்டும் அப்பாவின் தொழிலை தொடர்ந்தார்.<br /><br />கன்னியப்பன் வீடு வீடாக சென்று நாவிதம் செய்து பெரியதாக சொத்து எதுவும் சேர்த்துவிடவில்லை. சம்பாதித்த கொஞ்ச நஞ்ச பணத்தையும் குடித்தே அழித்தார். மோகன் அண்ணா இளைஞராக இருந்ததால் கொஞ்சம் புத்திக் கூர்மையோடு செயல்பட்டார். கூட்ரோடில் ஒரு கடை வாடகைக்கு பிடித்து சுழலும் நாற்காலி போட்டார். கண்ணாடிக்கதவு போட்டு பச்சைக்கலர் ட்யூப் லைட்டை பொருத்தி நவீன மோஸ்தரில் ஒரு கடையை உருவாக்கினார். கன்னியப்பன் போல ரெண்டு ரூபாய், மூன்று ரூபாய்க்கெல்லாம் முடிவெட்டாமல் ஒரு வரையறுக்கப்பட்ட தொகையை தன் வேலைக்கு கூலியாக வாங்கினார் மோகன். ஊர் முக்கியஸ்தர்களுக்கு மட்டும் அவரவர் வீட்டுக்கே சென்று முடிவெட்டி விட்டு வருவார். மடிப்பாக்கத்தில் முதன்முதலாக சலூன்கடை வைத்தது மோகன் அண்ணா தான் என்று நினைக்கிறேன்.<br /><br />சலூன்கடை வைத்திருந்தது மட்டுமல்லாமல் மோகன் அண்ணாவுக்கு வேறு பணிகளும் இருந்தது. ஊரில் யார் இறந்தாலும் மரண அறிவிப்பினை ஊர்முழுக்க சொல்வது மோகன் அண்ணாவுக்கு சாதிரீதியாக கொடுக்கப்பட்ட பணி. அவர் தந்தை செய்துவந்த இந்தப் பணியை மோகன் அண்ணாவும் எந்த முகசுளிப்புமின்றி தொடர்ந்து செய்துவந்தார். கூடுதல் வருமானம் இதில் கிடைத்ததும் கூட அவர் இந்த பணியை விரும்பி செய்ய காரணமாக இருந்திருக்கலாம்.<br /><br />இழவு விழுந்த வீட்டில் செய்யவேண்டிய கருமாந்திரப் பணிகள் அனைத்தையும் மோகன் அண்ணா செய்யவேண்டியிருந்தது. தாசரி அழைத்துவருவதிலிருந்து பாடை கட்டுபவன், பறைமோளம் அடிப்பவன், பல்லாக்கு அலங்காரம் செய்பவன் என எல்லோரையும் ஒருங்கிணைத்து சுடுகாட்டில் பிணம் எரியும்வரை மோகன் அண்ணாவின் கடமைகள் தொடரும். பதினாறாவது நாள் காரியத்துக்கான ஏற்பாடுகளும் கூட மோகன் அண்ணாவின் மேற்பார்வையில் தான் நடக்கும். காரியத்துக்கு என்றிருக்கும் அய்யரை கூட்டிவருவதிலிருந்து குளத்தங்கரை மண்டபத்தை புக் செய்வது எல்லாமே மோகன் அண்ணாவே செய்வார்.<br /><br />யார் வீட்டுப் பக்கமாவது மோகன் அண்ணாவை பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம், எங்கேயோ எழவு விழுந்திருக்கிறது என்று. அய்யர் வீடுகளின் மரணம் ஏற்பட்டால் மோகன் அண்ணாவின் சாங்கியரீதியான வேலைகள் எதுவும் தேவைப்படாது என்றாலும் இறந்தவர் கொஞ்சம் ஊரில் பிரபலமான அய்யராக இருந்தால் எல்லோருக்கும் போய் துக்கச்செய்தி சொல்லுவார். இதற்காக அவர் காசு எதுவும் அய்யர் வீடுகளில் வாங்கமாட்டார். அவரவர் விருப்பப்பட்டு குவார்ட்டரோ, ஹாஃபோ வாங்கிக் கொடுத்தால் அது போதுமானது.<br /><br />சுபகாரியங்களின் போதும் மோகன் அண்ணாவின் தேவை மடிப்பாக்கம் வாசிகளுக்கு தேவைப்பட்டது. அதிகாலையில் மணமகனுக்கு எண்ணெய் நலங்கு வைப்பது போன்ற சடங்குகள் எல்லாம் மோகன் அண்ணாவுக்கு தான் எப்படி முறைப்படி செய்வது என்று தெரியும். கல்யாணத்தில் வண்ணாத்திக்கு துணி கொடுப்பது போன்ற சடங்குகள் கூட உண்டு. மடிப்பாக்கத்தில் யாருக்கு வண்ணான் - வண்ணாத்தியை எல்லாம் தெரியும்? மோகன் அண்ணா தான் எங்கேயோ போய், யாரையோ கூட்டி வருவார்.<br /><br />ஊரில் மக்கள்தொகை பெருக்கம் ஏற்பட்டு மரணவிகிதம் அதிகரிக்க அதிகரிக்க அவரால் அவர் தொடங்கிய சலூன் கடையில் அதிகமாக கவனம் செலுத்த முடியவில்லை. எப்போதும் கடையை மூடிவிட்டு சாவு செய்தி சொல்லும் வேலையில் பிஸியாக இருப்பார். வாடிக்கையாளர்கள் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட மற்ற முடிவெட்டும் நிலையங்களுக்கு செல்ல ஆரம்பித்தார்கள். அதே நேரத்தில் மோகன் அண்ணாவுக்கு குடிப்பழக்கமும் உச்சநிலைக்கு போயிருந்ததால் தொழில்நேரத்தில் குடித்துவிட்டு சொதப்பவும் ஆரம்பித்தார்.<br /><br />ஒரு கட்டத்தில் அவரால் சலூன் தொழிலை தொடர்ந்து செய்யமுடியவில்லை. கடையை இழுத்து மூடிவிட்டு தெரிந்தவர்களுக்கு மட்டும் அவரது அப்பாவைப் போல வீட்டுக்கு போய் சவரம் செய்ய ஆரம்பித்தார். நல்லவேளையாக அந்த இடைப்பட்ட காலத்தில் அவர் சம்பாதித்த பணத்தில் ஒரு சொந்தவீடு வாங்கியிருந்தார். இதன்பிறகு முழுக்க முழுக்க எங்காவது எழவு விழுந்தால் மட்டுமே சம்பாதிக்க முடிந்தது, சுபகாரியங்களில் வருமானம் ரொம்ப கம்மி. எப்போதாவது ரியல் எஸ்டேட் ப்ரோக்கர்களுக்கு தெரிந்த இடங்களை காட்டிவிட்டு மிகக்குறைவான கமிஷன் வாங்குவார்.<br /><br />குடிக்க கையில் காசில்லாத நேரத்தில் அவரது தொழில்பெட்டியை கையில் எடுத்துக்கொண்டு டிவிஎஸ்50யில் ஊரை ரவுண்டடிப்பார். “என்ன நாயக்கரய்யா தாடி விட்டிருக்கீங்க? திருப்பதி போறீங்களா?” என்று எதிர்படுபவரை கேட்பார். “அட அதெல்லாம் ஒண்ணுமில்லேப்பா. நேரமில்லே” என்று சொன்னால் உடனே கிடைக்கும் இடத்தில் உட்காரவைத்து ஷேவிங் செய்துவிடுவார். கொடுக்கும் காசை வாங்கிக் கொள்வார். ஒரு ‘கட்டிங்'குக்கு தேவையான துட்டு கிடைத்ததும் நேராக மதுக்கடைக்கு வண்டியை விடுவது அவர் வழக்கமாக இருந்தது. மோகன் அண்ணாவுக்கு அதிர்ஷ்டவசமாக பிறந்தது ரெண்டுமே பையன்கள். பையன்கள் சுமாராக படித்து, வளர்ந்து ஏதோ வேலை, வெட்டிக்கு போய் சம்பாதிக்கிறார்கள். அப்பா, தாத்தா செய்த தொழிலை தொடர அவர்களுக்கு விருப்பமில்லை.<br /><br />கடந்த ஞாயிற்றுக்கிழமை மோகன் அண்ணா செத்துப் போய் விட்டார். யார்யாரோ செத்தப் போதெல்லாம் ஊருக்கே செய்தி சொன்ன அவர் செத்துப் போனதை அக்கம்பக்கத்துக்கு சொல்லக்கூட ஆளில்லை. எதேச்சையாக அவர் வீட்டுப் பக்கமாக போனபோது தான் எனக்கே தெரிந்தது. மோகன் அண்ணாவுக்கு நாற்பத்தி ஐந்திலிருந்து ஐம்பதுக்குள் வயதிருக்கலாம். கொஞ்சம் ஒல்லியாக இருப்பார். எவ்வளவு தண்ணி அடித்திருந்தாலும் அண்ணன் சுறுசுறுப்பாக கில்லி மாதிரி சுழன்று சுழன்று வேலை பார்ப்பார். எனக்குத் தெரிந்து அவர் வாழ்நாளில் ஒரு லட்சம் லிட்டராவது மது அருந்தியிருப்பார் என்று நினைக்கிறேன். “இவ்ளோ தண்ணியடிக்கிறீங்களே? ஒடம்புக்கு ஏதாவது ஆயிடாது?” என்று கேட்டால் “தண்ணியால நான் சாவமாட்டேன்டா” என்பார். இப்போது கூட அவர் செத்ததற்கு மஞ்சக்காமாலையை தான் காரணமாக சொல்கிறார்கள்.<br /><br />மோகன் அண்ணா மரித்துப் போனதற்காக ஊரே வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது, “இனிமே யாராவது செத்தா இழவு வேலையை எல்லாம் யாரு பார்க்குறது?” என்று.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-9164908421532025475?l=www.luckylookonline.com'/></div>யுவகிருஷ்ணாhttp://www.blogger.com/profile/04524693633714401444yuvakrishna@gmail.com0tag:blogger.com,1999:blog-25593973.post-68106529945775977432009-06-23T07:35:00.003+05:302009-07-18T00:00:49.472+05:30’அவள்!’<a href="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/Sj86yU3fi_I/AAAAAAAACQU/6SAK-H6u0lU/s400/aval..jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/Sj86yU3fi_I/AAAAAAAACQU/6SAK-H6u0lU/s400/aval..jpg" border="0" alt="" /></a><br /><strong><span style="font-size:130%;">வி</span></strong>க்கித்துப் போயிருந்தான்.<br /><br />அப்படிப்பட்ட வார்த்தைகளை அவன் எதிர்ப்பார்க்கவேயில்லை.<br /><br />“நீ மட்டும் யோக்கியமா?”<br /><br />யோக்கியம், அயோக்கியம் வேறுபாடுகள் பார்க்கும் நிலையிலா அப்போதிருந்தான்?<br /><br />ப்ளாஷ்பேக் ஸ்டார்ட்ஸ்...<br /><br /><br /><strong><span style="font-size:130%;">வா</span></strong>ர்த்தைகளுக்கு வாய்ப்பின்றி காலைக் கட்டிக் கொண்டு அழுத மாமா.<br /><br />”நீங்கதான் எங்க குடும்ப தெய்வம்” - அழுதுகொண்டே அரற்றிய அத்தை.<br /><br />“மாமா நீங்க இந்த நேரத்துலே உதவலேன்னா குடும்பத்தோடு தூக்குப் போட்டுக்கிட்டு செத்துடுவோம்” - மாமா மகன்.<br /><br />தன்னை வளர்த்தெடுத்த குடும்பம் ஒப்பாரி வைத்து அழுவதைப் பார்த்து அவனும் அழுதான்.<br /><br />மூலையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தாள் ‘அவள்’<br /><br /><br /><strong><span style="font-size:130%;">உ</span></strong>லகமே மகிழ்ச்சியைக் கொண்டாடிய அந்த புத்தாண்டு இரவு அவளுக்கு மட்டும் துயர் தந்ததாய் இருந்தது.<br /><br />“உங்க மாமா குடும்ப கவுரவம் உங்களுக்கு முக்கியமானதா இருக்கலாம். அதுக்காக நான்?”<br /><br />“.................”<br /><br />இரண்டு நாட்களுக்கு முன்பாக மட்டுமே அவளுக்கு திருவேற்காட்டில் ரகசியத் தாலி காட்டியிருந்தான். இரண்டாண்டு தெய்வீகக் காதல். இன்னும் திருமணமானது ரெண்டு வீட்டுக்கும் தெரியாது.<br /><br />அழுதான். திரும்ப திரும்ப அழுதான். அழுகையைத் தவிர்த்து அவனிடம் வேறு ஆயுதமில்லை. ஆண் அழுவது அசிங்கம். அதைவிட அசிங்கம் வேறெதுவுமில்லை.<br /><br />அழுத அவனை வெறுத்தாள். வெறித்தாள், ’போய்த்தொலை’ என்ற மனோபாவத்தோடு.<br /><br /><br /><strong><span style="font-size:130%;">அ</span></strong>ழகான ஆண்குழந்தை.<br /><br />“அப்பனை உரிச்சு வெச்சிருக்கு” சொன்னபோது திடுக்கிடலாய் நிமிர்ந்தாள் ’அவள்’. அவனும் கூட.<br /><br />அவனுக்கும், அவளுக்கும், அவள் குடும்பத்துக்கும் மட்டும்தானே தெரியும் அப்பன் யாரென்பது.<br /><br />அவனுக்கு குழந்தை பிறந்தது என்று சுற்றம் கொண்டாடியது. யாரோ ஒருவனின் குழந்தைக்கு இனிஷியல் மட்டுமே தரவேண்டிய தன் விதியை நினைத்து மீண்டும் அழுதான். தனிமையில் அழுதான்.<br /><br /><br /><strong><span style="font-size:130%;">கு</span></strong>டும்பத்தோடு திருவேற்காடு போயிருந்தான். இனிஷியல் மகனை தோளில் சாய்த்திருந்தான்.<br /><br />ஆயிரம் கல்யாணம் நடத்திவைத்த அர்ச்சகருக்கு இவன் முகம் மட்டும் நினைவில் இருந்து தொலைக்க வேண்டுமா?<br /><br />“இதுதான் உன் ஆம்படையான்னா, அன்னைக்கு தாலி கட்டினியே? அந்தப் பொண்ணு யாருவோய்?”<br /><br />உண்மை விளங்கி திரும்பவும் மாமா அழுதார்.<br /><br />“உன் வாழ்க்கையையும் வீணடிச்சிட்டேனே?” தலையில் அடித்துக் கொண்டு அழுதார். சந்நிதியில் அழுதார். சுற்றி வேடிக்கைப் பார்ப்பவர்கள் குறித்த பிரக்ஞ்சை இன்றி அழுதார்.<br /><br />ச்சே. இந்த ஆளுக்கு அழமட்டும் தான் தெரியும்.<br /><br />’அவள்’ இம்முறை பார்த்தாள். வெறுப்போடு பார்த்தாள். கண்களில் தீக்கங்குகளை வைத்துப் பார்த்தாள்.<br /><br /><br /><strong><span style="font-size:130%;">“யா</span></strong>ரு போனுலே?”<br /><br />“யாரா இருந்தா உனக்கென்ன?” அவள்.<br /><br />பேருக்கு கணவன் - மனைவியாக இருப்பவர்கள் பேசிக்கொள்வது இப்படித்தானே இருக்கும்? உடலைப் பகிர்ந்துகொள்ள முடியாதவர்களால் உள்ளத்தை மட்டுமா பகிர்ந்துகொள்ள முடியும்?<br /><br />அடிக்கடி அவளுக்கு போன் வந்தது. குழந்தை அழுவதைக் கூட சட்டை செய்யாமல் போனில் பேசினாள். சிரித்து சிரித்துப் பேசினாள். ஒருவேளை தான் இனிஷியல் கொடுத்த குழந்தையின் உண்மை அப்பனோ?<br /><br /><br /><strong><span style="font-size:130%;">நே</span></strong>ரங்கெட்ட நேரத்தில் வீட்டுக்கு வந்தாள்.<br /><br />குழந்தையை க்ரெச்சில் சேர்த்திருந்தாள். எதையும் அவன் கேட்டதில்லை.<br /><br />ஒருநாள் பொறுக்கமாட்டாமல் கேட்டான்.<br /><br />”எங்கே போயிட்டு வர்றே?”<br /><br />லேசான வார்த்தைகளில் தொடங்கிய உரையாடல் சூடுபிடித்து உச்சத்தை அடைந்தது.<br /><br />அப்போதுதான் கேட்டாள் அவள்.<br /><br />“நீ மட்டும் யோக்கியமா?”<br /><br />முதல் பத்தியில் தொடங்கிய பிளாஷ்பேக் முடிவுக்கு வந்தது.<br /><br /><br /><strong><span style="font-size:130%;">வி</span></strong>டிந்த பொழுது மோசமான பொழுது.<br /><br />அவள் ஓடிவிட்டிருந்தால் குழந்தையோடும், கட்டியச் சேலையோடும்.<br /><br />குழந்தைக்கு உண்மையான இனிஷியல் ஒருவேளை கிடைத்திருக்கக் கூடும்.<br /><br />மாமா திரும்ப அழுதார். அவர் குடும்பமே சேர்ந்து அழுதது. அழுமூஞ்சிக் குடும்பம்.<br /><br />ஊரை காலி செய்தான். வீட்டை விற்றான். பணிமாற்றல் வாங்கினான்.<br /><br />“இன்னொரு கல்யாணத்துக்கு பொண்ணும் வேணும்னா பார்க்கட்டா?” விசும்பியபடியே கேட்ட மாமாவை முறைத்தான்.<br /><br /><br /><strong><span style="font-size:130%;">உ</span></strong>டல் வேட்கையோடு அங்கே போனவனுக்கு உள்ளம் வெடித்தது. சுக்கு நூறாய். சுக்கு ஆயிரமாய். சுக்கு லட்சமாய்.<br /><br />மூன்றாவது பத்தியில் பார்த்த ‘அவள்’ இவள்.<br /><br />சினிமா ஆசையில் ஓடிவரும் இளம்பெண்களுக்கும், குடும்பத்தை மறந்து திருட்டு காதல் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் சிலருக்கும் ஏற்படும் அதே கதி.<br /><br />பாவத்தை மறைக்க, மறுக்க என்ன செய்வதென்று புரியவில்லை.. தான் தோன்றித்தனமாக நடந்துகொண்டான்.<br /><br />அவளின் நகைகளை இவளுக்கு போட்டு அழகு பார்த்தான்.<br /><br />“இனிமே நீயே வெச்சுக்கோ” அவனுக்கே கேட்காமல் முணுமுணுத்தான்.<br /><br />அதன்பின் ஒருவரியும் பேசவில்லை இருவரும். முன்பு மனதால் இணைந்தவர்கள் இன்று உடலாலும் இணைந்தார்கள்.<br /><br />அவள் முகம் பார்த்தான்.<br /><br />அழுதான். திரும்ப திரும்ப அழுதான். அழுகையைத் தவிர்த்து அவனிடம் வேறு ஆயுதமில்லை. ஆண் அழுவது அசிங்கம். அதைவிட அசிங்கம் வேறெதுவுமில்லை.<br /><br />அழுத அவனை வெறுத்தாள். வெறித்தாள், இப்போதும் ’போய்த்தொலை’ என்ற மனோபாவத்தோடு.<br /><br /><a href="http://uyirodai.blogspot.com/2009/06/blog-post_22.html">உயிரோடை சிறுகதைப் போட்டிக்கு எழுதிய கதை!</a><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-6810652994577597743?l=www.luckylookonline.com'/></div>யுவகிருஷ்ணாhttp://www.blogger.com/profile/04524693633714401444yuvakrishna@gmail.com2tag:blogger.com,1999:blog-25593973.post-46038525783892461502009-06-23T02:27:00.000+05:302009-07-18T02:28:30.789+05:30பார்வை!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SkDEJfFIFUI/AAAAAAAACQk/kdzidvosdHs/s1600-h/vision..jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SkDEJfFIFUI/AAAAAAAACQk/kdzidvosdHs/s400/vision..jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5350492024557016386" /></a><br />ஆட்டோவிலிருந்து இறங்கும்போது உச்சிவெயில் உண்மையாகவே மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. பிளந்துவிட்ட மண்டையை ஈரக்கர்ச்சீப்பால் மூடினேன். சிகப்பான சென்ட்ரல் அடுப்பில் காணக்கிடைக்கும் தீக்கங்குகள் மாதிரி கனகனவென்றிருந்தது. கொடுத்ததை வாங்கிச் செல்லும் ஆட்டோ டிரைவர் வாய்ப்பது முன்னோர் எக்காலத்திலேயோ செய்த புண்ணியம். பயணச்சுமையை முதுகில் தாங்கிக் கொண்டு கிட்டத்தட்ட ஓடினேன். இரண்டு மணிக்கு கோவை எக்ஸ்பிரஸ். மணி ஒன்று நாற்பத்தி ஐந்து.<br /><br />சரியான நடைமேடை கண்டறிந்து, என் பெட்டியை அடைவதற்குள் சட்டை வியர்வையால் தொப்பலாகிவிட்டிருந்தது. சன்னலோரத்தில் அமர்ந்தேன். லேசான காற்று வியர்வையால் நனைந்த உடல்மீது பட்டது இதமாக இருந்தது. திறந்திருந்த சன்னல் வழியாக பார்வையை ஓட்டினேன். இருப்புப் பாதையில் தேங்கியிருந்த அழுக்கு நீரை இரு காக்கைகள் அருந்திக் கொண்டிருந்தன. அலகால் நீரை உறிஞ்சி வானத்தைப் பார்த்து காக்கைகள் நீரருந்தும் பாணியே அழகுதான்.<br /><br />என் பக்கத்தில் நாற்பது கூட்டல் வயதுடையவர் அமர்ந்தார். வெள்ளைச்சட்டை. கருப்பு கால்சட்டை. கையில் தினகரன். செய்தித்தாளைப் பிரித்தவாறே பேச ஆரம்பித்தார்.<br /><br />“ராஜபக்ஷேவை போட்டுத் தள்ளணும் சார்”<br /><br />“ஆமாங்க. டிவி பார்க்குறப்போவெல்லாம் மனசு பிசையுது” பதிலுக்கு பேசியாக வேண்டும். அதுதான் மரியாதை.<br /><br />“நான் சந்திரசூடன்ங்க. கோயமுத்தூரு. மெட்ராஸ் ஹைகோர்ட்டுலே லாயரா இருக்கேன்” உடனடியாக அறிமுகப்படுத்திக் கொண்டார். கைகொடுத்து என்னையும் அறிமுகப்படுத்திக் கொண்டேன்.<br /><br />ரயில் கிளம்பப் போவதாக இந்தி, ஆங்கிலம், தமிழில் கொஞ்சம் சுமாரான பெண்குரலில் அறிவிப்பு கொடுத்தார்கள். இஞ்சின் பெட்டியிலிருந்து ஹாரன் சத்தம் கேட்டது. பெட்டி இருக்கைகள் கிட்டத்தட்ட முழுமை அடைந்து இருக்க, எதிர் இருக்கை மட்டும் காலியாக இருந்தது கண்ணை உறுத்தியது.<br /><br />அவசர அவசரமாக ஒரு பெரியவரும், இருபத்தெட்டு முதல் முப்பது வயது மதிக்கத்தவனும் வந்து அமர்ந்தார்கள். அந்த மதிக்கத்தக்கவன் பெரியவரின் மகனாக இருக்கக் கூடும். எனக்கென்னவோ அவனைப் பார்த்ததுமே பிடிக்கவில்லை. சிலபேரை பார்த்ததுமே பிடித்துவிடும். பழகியவுடன் கசந்துவிடும்.<br /><br />அவன் முகம் வெறிகொண்ட வேங்கையைப் போல இருந்தது. அவனது கண்கள் என்னை மிகவும் துன்புறுத்தியது. அவன் ஒரு சைக்கோ என்று உள்ளுணர்வு உறுத்தியது. இவனோடு பழகினாலும் இவனைப் பிடிக்காது என்று தோன்றியது. பெரியவர் வெள்ளைச் சட்டையும், வேட்டியும் கொஞ்சம் அழுக்காக அணிந்திருந்தார். அவனோ கசங்கிப்போன சட்டையும், சாயம்போன கால்சட்டையுமாக நாகரிகத்துக்கு தொடர்பில்லாதவனாக இருந்தான்.<br /><br />பக்கத்திலிருந்த லாயரைப் பார்த்தேன். சகப்பயணியாக என்னை திருப்தியோடு பார்த்தவருக்கு எதிர் இருக்கை பயணிகள் அதிருப்தியை தந்திருக்கிறார்கள் என்பது பார்வையிலேயே தெரிந்தது.<br /><br />பெரியவர் ஒரு பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்தார். ரயில் கிளம்பியது. காணாததை கண்டவன் மாதிரி அந்த பிஸ்கட்டை பிடுங்கி கடித்தான் அவன். பிஸ்கட் துணுக்கு சிதறியது. வாயெல்லாம் துகள்கள். நிமிர்ந்துப் பார்த்த எனக்கோ அருவருப்பாக இருந்தது. லாயருக்கும் அதேபோல இருந்திருக்க வேண்டும். ஒரு டவல் துண்டினை எடுத்து முகத்தில் போர்த்திக்கொண்டு இருக்கையில் வசதியாக சாய்ந்தார். அனேகமாக தூங்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்.<br /><br />ரயில் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்க ஜன்னல் வழியாக காற்று ஜம்மென்று உள்நுழைந்தது. திடீரென்று அவன் உட்கார்ந்த நிலையில் குதித்தவாறே, “அப்பா.. அப்பா.. மரமெல்லாம் பச்சையா அழகாருக்குப்பா” என்று கொஞ்சம் சத்தமாக சொன்னான். பெரியவர் பதிலுக்கு “ம்” என்றார். ஒருவேளை மனநிலைப் பிறழ்ந்தவனோ?<br /><br />“அப்பா அங்கே பாருங்க. எவ்ளோ அழகாயிருக்கு!” குதூகலமான குரலில் கத்தினான். எரிச்சல் மண்டியது.<br /><br />பக்கத்திலிருந்தவர் துயில் களைந்து காதுக்கு பக்கத்தில் வந்து சொன்னார். “க்ராக்கு பய சார்!”<br /><br />திடீரென்று இருண்டதைப் போல தோன்றியது. சடசடவென்று மழைத்துளி விழுந்தது. வானம்தான் எவ்வளவு வேகமாக மாற்றத்துக்கு தயாராகிறது. ஜன்னலை மூட எழுந்தேன். அவன் முரட்டுத்தனமாக என் கையைப் பற்றி முறைத்தான். இச்சூழலில் அவனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் குழம்பி, உட்கார்ந்தேன். பெரியவரைப் பார்த்தேன். கெஞ்சும் தொனியில் ஒரு பார்வை பார்த்தார்.<br /><br />“அப்பா. மழை ஜோன்னு பெய்யுது. ஹைய்யா. ரொம்ப அழகா இருக்கு. சூப்பரா இருக்கு” என்னவோ மழையைப் பார்த்ததே இல்லை என்பது மாதிரி கத்தினான். பெட்டியில் இருந்த மற்றவர்கள் வித்தியாசமாக திரும்பிப் பார்த்தார்கள். பெரியவர் பாவமான தொனியிலேயே அமர்ந்திருந்தார்.<br /><br />ரயில்வேகத்தில் மழைத்துளி ஜன்னலுக்குள் புகுந்து என் சட்டையை நனைக்க, இதற்குமேல் பொறுக்க முடியாது என்ற நிலையில் ஜன்னலை மூட மீண்டும் எழுந்தேன்.<br /><br />”ஜன்னலை மூடாதீங்க!” முரட்டுக்குரலில் சொன்னான். எரிச்சல் எல்லை மீறிப் போனது.<br /><br />“ஏன் சார்? பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே இவனை சேர்த்து சரி செய்யுறதை விட்டுட்டு, வயசான காலத்துலே இப்படி கஷ்டப்படறீங்க?” பெரியவரிடம் கொஞ்சம் காட்டமாகவே கேட்டேன். அவனது முகம் இருளடைந்தது. இதெல்லாம் மட்டும் புரியும்.<br /><br />அவர் அமைதியாக சொன்னார்.<br /><br />“தயவுசெஞ்சு தொந்தரவுக்கு மன்னிச்சுடுங்க தம்பி. ஆஸ்பத்திரியிலிருந்து தான் வர்றோம். அவனுக்கு ஜூரம் வந்து பத்து வயசுலே பார்வை போயிடிச்சி. போனவாரம் தான் கண் தானம் மூலமா அவனுக்கு மறுபடியும் பார்வை கிடைச்சிருக்கு. மழையும், மரமும் அவனுக்கு புதுசாதான் தெரியும்”<br /><br />ஜன்னலை மூடாமலேயே லேசாக அதிர்ச்சியடைந்து இருக்கையில் சாய்ந்தேன். பக்கத்து சீட்டுக்காரர் குறட்டை விட்டுக் கொண்டிருந்தார். அவன் எதுவும் நடக்காதது போல மீண்டும் மழையை ரசிக்க ஆரம்பித்தான். கடந்துச்சென்ற டீனேஜ் பெண் ஒருத்தியின் டீஷர்ட்டில் ”Don't Judge Too Soon” என்று எழுதியிருந்தது.<br /><br /><i><span class="Apple-style-span" style="font-size:small;"><span class="Apple-style-span" style="color:#FF0000;">நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த ஆங்கில மின்னஞ்சல் சமாச்சாரத்தை தழுவி புனையப்பட்ட கதை.</span></span></i><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-4603852578389246150?l=www.luckylookonline.com'/></div>யுவகிருஷ்ணாhttp://www.blogger.com/profile/04524693633714401444yuvakrishna@gmail.com0tag:blogger.com,1999:blog-25593973.post-26218704237019372412009-06-18T02:29:00.000+05:302009-07-18T02:30:14.203+05:30+2<a href="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SCQOvR5W7jI/AAAAAAAAAvQ/FwxQOtJTWSc/s1600-h/result.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SCQOvR5W7jI/AAAAAAAAAvQ/FwxQOtJTWSc/s400/result.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198296075313016370" /></a><br />+2 ரிசல்ட் வெளியாகும் போதெல்லாம் இந்தப் பரபரப்பை நீங்களும் அனுபவித்திருக்கலாம். அலுவலகத்தில் கணினி இருக்கும் எல்லோரது மேஜையும் காலையிலேயே பரபரப்பாக இருக்கும். அலுவலக உதவியாளர்களில் ஆரம்பித்து மேலதிகாரிகள் வரையும் கூட “என் மச்சினிச்சி எழுதியிருக்கா, இந்தாங்க நம்பர், பாஸ் பண்ணிட்டிருப்பா.. ஆனா மார்க் என்னன்னு பாருங்க” என்பார்கள். நான் +2 தேர்வெழுதியபோது இணையம் அவ்வளவாக புழக்கத்தில் இல்லை. மாலைமுரசு அல்லது மாலைமலர் சிறப்பு பதிவைப் பார்த்துதான் நம்பர் வந்திருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.<br /><br />இன்றைய சூழலில் பார்த்தால் கிட்டத்தட்ட எல்லாருமே தேறிவிடுகிறார்கள். அப்போதெல்லாம் பத்துக்கு மூன்று பேர் அல்லது நாலு பேர் வெற்றிவாய்ப்பை இழந்துவிடுவார்கள். மறுநாள் காலை தினத்தந்தி பார்த்தால் ”மாணவன் தற்கொலை - பெற்றோர் கதறல்!” ரீதியிலான செய்திகளை நிறைய பார்க்கமுடியும்.<br /><br />பலவருடங்களுக்கு முன்பு நடந்தது என்றாலும் அந்த நாள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. காலை ஐந்தரை மணிக்கெல்லாம் அப்பா என்னை எழுப்புகிறார். அவர் நாலு, நாலரைக்கெல்லாம் எழுந்து கார்த்திகேயபுரம் பால் பூத்துக்கு சென்று பால் வாங்கிவருவது வழக்கம். நானோ ஏழரை, எட்டு மணிக்கு எழுந்து “அம்மா காப்பி ரெடியா?” என்று கேட்பேன்.<br /><br />“சீக்கிரம் எழுந்திருடா. இன்னைக்கு உனக்கு ரிசல்ட் வருது!”<br /><br />“ரிசல்ட் பதினொரு மணிக்கு தாம்பா வரும். கொஞ்ச நேரம் தூங்குறேனே?”<br /><br />“ச்சீ.. இன்னைக்கு கூட இவனுக்கு தூக்கமா? புள்ளைய பெத்துக்கறதுக்கு பதிலா ஒரு தொல்லைய பெத்து வெச்சுருக்கேன்! எழுந்துர்றா.. கோயிலுக்கு போவணும்!”<br /><br />வேண்டாவெறுப்பாக எழுந்தேன். குளித்து முடித்து அப்பாவின் சொல்படி பட்டை அடித்துக்கொண்டு தாத்தா - பாட்டி படம் முன்னால் நின்று பிரார்த்தனை செய்தேன். சாமி படங்களை ஏறிட்டும் பார்க்கவில்லை. அப்போதே எனக்குள் கடவுள் மறுப்பு சிந்தனை இருந்திருக்கிறது என்பதை நினைத்தால் இப்போது பெருமையாக இருக்கிறது. கல்யாண கந்தசாமி கோயிலுக்கு சைக்கிளில் உட்காரவைத்து அழைத்துப் போனார் அப்பா.<br /><br />“கடகராசி, ஆயில்ய நட்சத்திரம். பேரு குமரன். இன்னைக்கு ரிசல்ட் வருது. பாஸ் பண்ணனும்னு சொல்லி ஒரு அர்ச்சனை பண்ணுங்கோ சாமி!” அர்ச்சனைத் தட்டில் ஒரு இருபது ரூபாய்.<br /><br />நான் ஒழுங்காக எழுதி இருந்தால் பாஸ் செய்யப்போகிறேன். இதற்கு போய் கடவுளுக்கு லஞ்சம் கொடுக்க நினைக்கிறாரே அப்பா என்று கோபம் வந்தது. வேண்டா வெறுப்பாக நவக்கிரகங்களை அப்பாவோடு சுற்றினேன். கோயிலில் என்னைப் போல நிறைய மாணவர்களும், மாணவிகளும்.. என் அப்பாவைப் போல நிறைய அப்பாக்களும் வந்திருந்தார்கள். அன்றைக்கு கல்யாண கந்தசாமிக்கும், அர்ச்சனை செய்த அய்யருக்கும் நல்ல வசூல்.<br /><br />வீட்டுக்கு திரும்பும் வழியில் மூர்த்தி எதிர்பட்டார். அவர் ஒரு ஈழத்தமிழர். எங்கள் வீட்டுக்கு முன்பிருந்த ஒரு வீட்டில் குடியிருந்தார். சிறுவயதில் எப்போதோ ஒருமுறை அவரிடம் ”பெரியவன் ஆகி பிரபாகரன் மாதிரி துப்பாக்கியெல்லாம் வெச்சுப்பேன், கெட்டவங்களை சுடுவேன்” என்று சொல்லியிருந்தேன். அதனால் அவருக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும்.<br /><br />“என்ன சார்? குமாருக்கு இன்னைக்கு ரிசல்ட்டா?” ஜாலியாக கேட்டார்.<br /><br />“ஆமாம் மூர்த்தி. பையன் விளையாட்டுப் பையன் தான்னாலும், எப்படியாவது பாஸ் பண்ணிடுவான்!”<br /><br />அப்பாவுக்கு என் மீதிருந்த நம்பிக்கை பயம் கொடுத்தது. என்ன எழுதி கிழித்திருந்தேன் என்பது எனக்குத்தானே தெரியும்? நான் படித்தது காமர்ஸ் க்ரூப். தமிழ், ஆங்கிலம் மொழிகள் தவிர்த்து காமர்ஸ், எகனாமிக்ஸ், மேத்ஸ், அக்கவுண்டன்ஸி சப்ஜெக்டுகள் இருந்தது. பத்தாவது வரை தமிழ்வழிக்கல்வி படித்திருந்த என்னை தேவையில்லாமல் +1 சேரும்போது ஆங்கிலவழிக்கு மாற்றியிருந்தார் அப்பா.<br /><br />தமிழைப் பொறுத்தவரை எனக்கு பிரச்சினையில்லை. தமிழில் நான் தோல்வியடைந்தால் தான் அது அதிசயம். ஆங்கிலமும் பரவாயில்லை. காமர்ஸ், எகனாமிக்ஸ் இரண்டுமே கதை எழுதி சமாளித்துவிட்டேன். அக்கவுண்டன்ஸி பிட் அடித்திருந்தேன். மேத்ஸ் மட்டுமே எனக்கு பெருத்த சந்தேகத்தை விளைவித்தது, இரண்டு ஆண்டுகளாக மேத்ஸ் க்ளாஸ் அட்டெண்ட் செய்ததாக நினைவில்லை, ட்யூஷனும் வைத்துக்கொள்ளவில்லை. தேர்வெழுதும் போது எனக்கு முன்னால் அமர்ந்திருந்த ஆனந்தராஜ் ஒழுங்காக எழுதியிருந்தான் என்றால் நான் தேறிவிடுவேன், என்னைப் பார்த்து எழுதிய சிவராமனும் தேறிவிடுவான்.<br /><br />எட்டு மணிக்கு அப்பா அலுவலகத்துக்கு கிளம்பிவிட்டார். பதினொரு மணிக்காக நான் காத்திருக்க ஆரம்பித்தேன். மடிப்பாக்கம் கூட்டுரோடுக்கு பதினொரு மணிக்கு மாலைமுரசு வந்துவிடும். ஆனால் பத்தரை மணிக்கே செயிண்ட்தாமஸ் மவுண்டுக்கு பேப்பர் வந்துவிடும். சைக்கிளை எடுத்துக்கொண்டு செயிண்ட் தாமஸ் மவுண்டுக்கு சென்று பேப்பரை வாங்கிவிட தீர்மானித்தேன். உதவிக்கு பக்கத்து வீட்டு கோபாலையும் அழைத்துக் கொண்டேன்.<br /><br />பத்தேகால் மணிக்கு ரயில்வே ஸ்டேஷனில் இருந்தேன். அங்கிருந்த நியூஸ் பேப்பர் ஸ்டால் முன் பெரிய கூட்டம். ரஜினிபடத்தை முதல் நாள் பார்க்க க்யூவில் நிற்பதைப் போல டென்ஷன். பத்தரை மணிக்கு மாலைமலர் வந்தது. காசுகொடுத்து வாங்கிய பேப்பர் கசங்கி இருந்தது கொஞ்சம் கடுப்படித்தது. செங்கை-எம்.ஜி.ஆர் மாவட்ட முடிவுகளை பார்க்கத் தொடங்கினேன். என் ரெஜிஸ்டர் எண்ணை நினைவில் வைத்திருந்தாலும், பதட்டத்தில் மறந்துவிடுவேனோ என்று கையிலும் எழுதி வைத்திருந்தேன். கோபாலும் ஆர்வத்தோடு எண்களை பார்த்துக்கொண்டே வந்தான்.<br /><br />ம்ஹூம்... என் எண் மட்டுமல்ல, என் எண்ணுக்கு அருகிலிருந்த பல எண்கள் கண்ணுக்கு தெரியவில்லை. இருந்தால் தானே தெரிவதற்கு? வாழ்க்கையிலே முதல் தடவையாக பெரிய தோல்வி. விளையாட்டில் கூட தோற்க விரும்பாத என் மனம் உடைந்து, கண்கள் கலங்கியது. அப்பா எப்படியும் ரிசல்ட் பார்த்திருப்பார். வீட்டுக்கு வந்து மிதிப்பாரா தெரியவில்லை. அப்பா அடிப்பாரோ இல்லையோ கண்டிப்பாக அம்மாவிடம் அடி உண்டு.<br /><br />சோர்வாக சைக்கிளை மிதித்தேன். என்னைவிட கோபாலுக்கு தான் சோகம் அதிகமாக இருந்தது. வரும் வழியில் ஒரு சூப்பர் ஃபிகர் அவள் அம்மாவோடு எதிரில் வந்துகொண்டிருந்தாள். “தம்பி! ரிசல்ட்டு தானே? கொஞ்சம் பேப்பர் காட்டுப்பா!” என்று அத்தை (அழகான பெண்ணுக்கு அம்மாவெல்லாம் நமக்கு அத்தைதானே?) கேட்க, தாராளமாக பேப்பரை கொடுத்தேன். ஃபிகர் ஆர்வத்தோடு அது எண் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தது.<br /><br />“அம்மா. நான் பாஸ் ஆயிட்டேன்!” குதூகலமாக அந்த ஃபிகர் சொல்ல, எனக்கு வெறுப்பாக இருந்தது. போலியாக சிரித்தேன்.<br /><br />“ரொம்ப தேங்க்ஸ் தம்பி. நீ பாஸ் ஆயிட்டியா?” அத்தை கேட்க, ஃபிகர் எதிரில் என் கவுரவத்தை காத்துக் கொள்வதற்காக “பாஸ் ஆயிட்டேங்க..” என்று பொய் சொன்னேன்.<br /><br />நான் ஃபெயில் ஆனது குறித்து கூட எனக்கு பதட்டமில்லை, என்னோடு ஒண்ணாம் வகுப்பில் இருந்து கூட படித்த செந்தில் பாஸ் ஆகியிருக்கக்கூடாது என்று மனதுக்குள் வேண்டிகொண்டேன். அவனுடைய எண் வேறு எனக்குத் தெரியாது. நேராக செந்தில் வீட்டுக்கு சைக்கிளை விட்டேன். நல்லவேளையாக வீட்டில் தான் இருந்தான்.<br /><br />"மச்சான்.. பேப்பர் வந்துடிச்சாடா?” ஆர்வத்தோடு கேட்டான்.<br /><br />“ம்ம்.. வந்துருச்சிடா.. உன் நம்பர் என்ன?”<br /><br />“நானே பார்த்துக்கறேன். கொடுடா!” என்றான். அவனுடைய அம்மா எட்டிப் பார்த்தார்.<br /><br />”கிருஷ்ணா.. நீ பாஸ் ஆயிட்டியாடா?” அம்மா நிலைமை புரியாமல் கேள்வி கேட்டார்.<br /><br />எந்த பதிலும் சொல்லாமல், செந்தில் ரிசல்ட் என்ன ஆயிற்று என்று பார்த்துக் கொண்டிருந்தேன். என் நிலைமையே பரவாயில்லை. செந்தில் தேடிக்கொண்டே இருந்தான். இருந்த எல்லாப் பக்கங்களையும் புரட்டி, புரட்டி தேடினான். திருவண்ணாமலை மாவட்ட தேர்வு முடிவுகளையெல்லாம் கூட தேடிப் பார்த்தான்.<br /><br />“மச்சான். அது நம்ப டிஸ்ட்ரிக்ட் ரிசல்ட் இல்லேடா!”<br /><br />“பரவாயில்லை.. பார்த்துக்கலாம். ஏதாவது ப்ரிண்டிங் மிஸ்டேக் ஆகியிருக்காதா என்ன?” செந்திலின் பதில் எனக்கு மகிழ்ச்சியை வரவழைத்தது. பையனும் காலி. சூப்பர்!<br /><br />“செந்திலு! என்னாடா ஆச்சி?” செந்தில் அம்மா கேட்டார்.<br /><br />“பார்த்துக்கிட்டே இருக்கேம்மா!”<br /><br />“எத்தனை தடவை பார்த்தாலும் நம்பர் இருந்தாதானேடா தெரியும்?” <br /><br />செந்திலுக்கு சொல்ல விடையேதும் இல்லை. எங்கள் வகுப்பில் இருந்த இருபத்தாறு பேர்களில் பத்தொன்பது பேர் வெற்றிவாய்ப்பை இழந்துவிட்டார்கள் என்று புள்ளிவிவரம் தெரிவித்தது. பரவாயில்லை மெஜாரிட்டி எங்கள் பக்கம் தான்.<br /><br />ஆயினும் பின்னர் மதிப்பெண்கள் வந்தபிறகு கிடைத்த அதிர்ச்சி கொஞ்சநஞ்சமல்ல. மேத்ஸ் எக்ஸாம் ஆனந்தராஜை பார்த்து எழுதினேன். அந்த தறுதலை ஏகப்பட்ட அடிஷனல் ஷீட் வாங்கி எழுதினான். உலகத்திலே மேத்ஸ் எக்ஸாமை கற்பனை செய்து எழுதிய ஒரே நாயாக அவன் தான் இருப்பான். அந்த ராஸ்கலுக்கு கிடைத்த மார்க் இருநூறுக்கு பதிமூன்று. அவனைப் பார்த்து அட்சரம் பிசகாமல் எழுதிய அப்பாவியான நான் பெற்றதோ இருநூறுக்கு முப்பத்தொன்று. என்னைப் பார்த்து எழுதிய சிவராமன் எழுபது மதிப்பெண் பெற்று வெற்றியே பெற்றுவிட்டான். என்னத்தை தான் பேப்பர் திருத்தினான்களோ தெரியவில்லை.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-2621870423701937241?l=www.luckylookonline.com'/></div>யுவகிருஷ்ணாhttp://www.blogger.com/profile/04524693633714401444yuvakrishna@gmail.com0tag:blogger.com,1999:blog-25593973.post-43411847158958344242009-06-16T02:31:00.000+05:302009-07-18T02:32:10.036+05:30ஓட்ரா வண்டியை!<a href="http://4.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SD0CMjPyoDI/AAAAAAAAAxY/G6dqLXkegr0/s1600-h/summa.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SD0CMjPyoDI/AAAAAAAAAxY/G6dqLXkegr0/s400/summa.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5205319158953320498" /></a><br />இளையகண்ணனுக்கு வயது நாற்பது இருக்கலாம். நரைத்த தன் தலையை நன்கு மைபூசி மறைத்திருந்தாலும், சில இடங்களில் எட்டிப் பார்க்கும் நரையை ‘பித்த நரை' என்று சொல்லிக்கொள்வார். பழைய பாக்யராஜ் படங்களின் கதாநாயகிகள் அணிவது போல தடிமனான கறுப்பு ப்ரேம் கண்ணாடி. முதுமையால் மாறிப்போன தன் தோற்றத்தை இளமையாக காட்டிக்கொள்வதில் ஆர்வம் அதிகம். பாப் மியூசிக் பாடும் இளைஞர்கள் அணிவது போல ஒரு வட்டவடிவ தொப்பி. மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காத மனிதர் இளைய கண்ணன்.<br /><br />இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக பயணிப்பது அவருக்கு பிடிக்கும். வேகமாக செல்லும்போது முகத்தில் அறையும் சில்லென்ற காற்றுக்காக மட்டுமல்ல, இருசக்கர வாகனங்களில் செல்லும் சகப்பயணிய்களான நாகரிகமங்கைகளை கலைப்பார்வையோடு காணவும் அவருக்கு இந்த விருப்பமிருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ஓட்டுனர் உரிமம் வாங்கியிருந்தாலும், அரசு சட்டம் போடுவதற்கு முன்பே விலையுயர்ந்த ஹெல்மெட் வாங்கி விட்டார் என்றாலும், சைக்கிள் தவிர்த்து வேறெதுவும் ஓட்டத் தெரியாது என்பது அவரது அந்தரங்க சோகம்.<br /><br />பொல்லாதவன் பட தனுஷ் போல நகரில் இருக்கும் எல்லா இருசக்கர வாகன விற்பனை நிலையங்களுக்கும் சென்று புதியதாக வந்திருக்கும் வண்டி எது, எவ்வளவு விலை, எந்த வண்டியில் எவ்வளவு எரிபொருள் சேமிக்க முடியும் என எல்லா விவரங்களையும் தெரிந்து வைத்திருப்பார். நகரின் அனைத்து இருசக்கர வாகன விற்பனை நிலைய மேலாளர்களுக்கும் இவரை தெரியும். எப்படியும் வண்டி வாங்கப் போவதில்லை, வாங்கினாலும் ஓட்டத் தெரியாது, ஆனாலும் இறைவனை கேள்வி கேட்ட தருமி மாதிரி எதையாவது மாதாமாதம் புதியதாக கேட்டு கடுப்பேத்திக் கொண்டேயிருக்கிறார் என்பதால் நகரிலும், புறநகரிலும் இருக்கும் இருசக்கர வாகன விற்பனை நிலையங்கள் அனைத்திலும் 'இளைய கண்ணனுக்கு இங்கேவர அனுமதியில்லை!' என்று டிஜிட்டலில் பலகை வைத்திருக்கிறார்கள்.<br /><br />இளைய கண்ணன் அப்படியும் விடுவதாக இல்லை. தன் அடிப்பொடிகள் யாரையாவது வைத்து ‘கடைசியாக வந்த இருசக்கர வாகனம் எது? எவ்வளவு விலை? என்னென்ன புதிய வசதிகள்' என்று கேட்டுத் தெரிந்துவைத்துக் கொள்கிறார். இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கூட தங்கள் வாகனங்களை பற்றி இளையகண்ணனுக்கு தெரிந்த அளவுக்கு தெரியாது.<br /><br />தன்னை இளைஞனாக காட்டிக்கொள்ள அவர் செய்யும் இன்னொரு உபாயம் சுவாரஸ்யமானது. அவரை சுற்றி எந்நேரமும் இளைஞர்களாகவே இருப்பது போல பார்த்துக் கொள்வார். ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வாசல்களிலும், டீக்கடை பெஞ்சுகளில் “ஹேய் மாம்ஸ், ஹாய் மச்சிஸ்!” என்று பேசிக்கொண்டு சமீபத்தில் கல்லூரிப் படிப்பை முடித்த வாலிபன் போல தன்னைத் தானே அடையாளப்படுத்திக் கொள்வார்.<br /><br />இருசக்கர வாகனம் வைத்திருக்கும் இளைஞன் எவனாவது மாட்டினால் போதும், முன்னூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு நகர்வலம் வருவார். வண்டி ஓட்டுபவன் மனம் சோர்ந்துப் போய் அந்த வண்டியை விற்றுவிட்டு சைக்கிள் வாங்கிவிடலாமா என்று யோசிப்பான். வண்டியில் போகும்போது இருபக்கமும் பார்த்தவாறே வருவார். ஏதாவது பெண்கள் இருசக்கர வாகனங்களில் வந்துவிட்டால் போதும் தலைவர் குஷியாகி விடுவார். “மாப்புள்ளே, பேக் வியூல அசத்தலா இருக்கு. அந்த புள்ளை முகத்தை பார்க்கணும். வேகமா ஓட்ரா வண்டியை” என்று நாட்டாமை விஜயகுமார் மாதிரி ஆணையிடுவார். இவரது கதறல் முன்னால் போகும் புள்ளைக்கே கேட்டுவிடும். வயதானவர் என்பதால் இவரை திட்டாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் அப்பாவி இளைஞனை “பொறுக்கி!” என்று அந்த புள்ளை திட்டிவிட்டு, காறி உமிழ்ந்துவிட்டுப் போகும்.<br /><br />“இப்பவெல்லாம் எல்லாப் பொண்ணுங்களும் ஹெல்மெட் போட்டு முகத்தை மூடிக்குது. இல்லேன்னா துணியை எடுத்து தாலிபான் மாதிரி மறைச்சிக்குதுங்க...” என்று அவ்வப்போது வருத்தப்படுவார்.<br /><br />என்னுடைய போதாத நேரம், ஒருநாள் இளையகண்ணனிடம் நான் மாட்டிக் கொண்டேன்.<br /><br />“மாப்புள்ளே மவுண்ட்ரோடு போடா!”<br /><br />“என்னண்ணே அங்கே ஏதாவது வேலையா?”<br /><br />“சும்மா ஜாலியா போலாம்டா. நெறைய புள்ளைங்க ஸ்பென்சர்ஸ் வருவாங்க ஜாலியா சைட் அடிச்சிக்கிட்டே டைம்பாஸ் பண்ணலாம். அப்படியே ஈவ்னிங் பீச்சுக்கு போயிட்டோம்னா இன்னைக்கு பொழுது நல்லபடியா போகும்”<br /><br />“அண்ணே எனக்கு இதிலெல்லாம் ஆர்வமில்லைண்ணே” என்று முனகிக்கொண்டே வண்டியை கிளப்பினேன்.<br /><br />மதிய நேரம் என்பதால் அனல்காற்று முகத்தில் அறைந்தது. ஹெல்மெட் போட்டிருந்ததால் தலையில் வியர்வை வழிந்து நசநசத்தது. பில்லியனில் உட்கார்ந்திருந்த அண்ணனோ சாலையை ரசிக்க ஆரம்பித்துவிட்டார். “என்னாச்சி இன்னைக்கு சன் டிவியில் ஏதாவது விஜய் படமா? பொண்ணுங்க அவ்வளவா காணோமே?”<br /><br />தலையெழுத்தே என்று முணுமுணுத்துக் கொண்டு மிதமான வேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்தேன். எப்போதும் சிகப்பு நிற விளக்கு எரியும் நந்தனம் சிக்னலில் நிற்கவேண்டியதாயிற்று. என் வண்டிக்கு நான்கைந்து வண்டிகள் முன்பாக ஒரு கருப்புப்புடவை ஸ்கூட்டரில் ஒயிலாக அமர்ந்திருந்தது. அண்ணன் எப்படியோ எட்டிப் பார்த்துவிட்டார். “மாப்புள்ளே அந்த கருப்புப் புடவையை ஃபாலோ பண்ணுடா! செம கிளாமரா தெரியுது” என்றார்.<br /><br />பச்சை சிக்னல் கிடைத்ததுமே நானும் வண்டியை விரட்ட ஆரம்பித்தேன். ம்ஹூம், புயல் வேகத்தில் சென்ற கருப்புப் புடவையை தாண்டுவது அவ்வளவு சுலபமாக இல்லை. அடுத்த சிக்னல்.. அடுத்த சிக்னல்.. என்று இரண்டு மூன்று சிக்னல்களை தாண்டிதான் தேனாம்பேட்டையில் பிடிக்கமுடிந்தது. அண்ணன் கருப்புப் புடவையை பார்க்க வசதியாக சிக்னல் எல்லைக்கோட்டை தாண்டி வண்டியை நிறுத்தினேன். இருபதடி தூரத்தில் நின்றிருந்த போக்குவரத்துக் காவலர், இந்த வண்டியை மடக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தார்.<br /><br />முகத்தை பவுடர் போட்ட கர்ச்சீப்பால் துடைத்துக்கொண்டு தலையை ஸ்டைலாக, என்னவோ விருப்பமேயில்லாமல் திருப்புபவர்போல திருப்பி கருப்புப் புடவையை கண்டவர், “டேய், வண்டியை ஓட்ரா!” என்றார்.<br /><br />“என்னாச்சிண்ணே! சிக்னல் இன்னும் விழலை? எப்படி போவமுடியும்?”<br /><br />“எப்படியாவது போடா. ஃபைன் வேணும்னா நான் கட்டிக்கறேன். அந்த கருப்புப்புடவை வேற யாருமில்லே. உன்னோட அண்ணிதான்! வீட்டுலே பார்த்து சலிச்ச முகத்தை தான் இங்கேயும் பார்க்கணுமா? என்னை பார்த்துடப் போறா. சீக்கிரம் விடு”<br /><br />பாவம். லென்சு மாமா மாதிரி வீட்டில் என்ன ரீல் விட்டுவிட்டு ஊர் சுற்ற வந்தாரோ என்று எண்ணிக்கொண்டே ஆக்ஸிலேட்டரை முறுக்கினேன்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-4341184715895834424?l=www.luckylookonline.com'/></div>யுவகிருஷ்ணாhttp://www.blogger.com/profile/04524693633714401444yuvakrishna@gmail.com0tag:blogger.com,1999:blog-25593973.post-87100191606331059232009-06-15T02:32:00.000+05:302009-07-18T02:33:05.661+05:30தொழில் ரகசியம்!<a href="http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SCqDrhtQfRI/AAAAAAAAAvc/XxZG8dVZQ2g/s1600-h/IPL.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5200113503558466834" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SCqDrhtQfRI/AAAAAAAAAvc/XxZG8dVZQ2g/s400/IPL.jpg" border="0" /></a><br /><strong><span style="font-size:180%;">20 - 20</span></strong> என்.பி.எல். போட்டிகளில் ஆட்டம் முக்கியமான கட்டத்தை அடைந்திருக்கிறது. வைசாக் கிங்ஸ் அணியினருக்கு இது மிக முக்கியமான போட்டி. முதலில் ஆடிய மதுரை கில்லி அணியினர் நூற்று இருபது ஓட்டங்களுக்குள் சுருண்டு விட்டதால் வைசாக் கிங்ஸ் மிக சுலபமாக வெல்லக்கூடிய வாய்ப்பு இருந்தது. இன்னமும் ஐந்து ஓவர்கள் கைவசம் இருக்கிறது, ஆறு விக்கெட்டுகள் கைவசம் வைத்திருக்கும் வைசாக் அணி இன்னமும் இருபத்தி ஐந்து ரன்கள் மட்டுமே அடிக்க வேண்டும். இப்போட்டியில் வென்றால் தான் அரையிறுதிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு வைசாக் அணிக்கு கிடைக்கும்.<br /><br />பதினாறாவது ஓவரில் யாரும் எதிர்பாராத திடீர் திருப்பம். அதுவரை அதிரடியாக ஆடி ரன் குவித்துக் கொண்டிருந்த வைசாக் கிங்ஸ் கேப்டன் நகுல் ஆர்யா சிக்ஸருக்கு முதல் பந்தையே தூக்க, பவுண்டரி லைனில் இருந்தவர் மிக கவனமாக எல்லைக்கோட்டை தொடாமல் அந்த கேட்சை பிடித்தார். இருப்பினும் ஐந்துவிக்கெட்டுகள் கைவசம் இருப்பதால் வைசாக் வென்றுவிடும் என்றே அனைவரும் கருதினார்கள். மாறாக அதே ஓவரில் அடுத்தடுத்து முன்னணி வீரர்கள் எல்.பி.டபிள்யூ, போல்டு, ரன் அவுட் என்று பொறுப்பில்லாமல் அவுட் ஆக பதினேழாவது ஓவரில் பதினைந்து ரன்கள் வித்தியாசத்தில் மதுரை கில்லி அணி வென்று தன் அரையிறுதி வாய்ப்பை பிரகாசமாக்கி கொண்டது. சொந்த மைதானத்தில் தோல்வியை தழுவிய வைசாக் அணியினர் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு எதிரணியினருக்கு கைகுலுக்கினார்கள்.<br /><br />பத்திரிகையாளர்கள் வைசாக் அணியின் உரிமையாளரும், ஆசியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவருமான அஜய் புல்லையாவை சூழ்ந்துகொண்டார்கள்.<br /><br />“என்.பி.எல். போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக உங்கள் அணி தான் கோப்பையை வெல்லும் என்று சொன்னீர்களே? இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள்?”<br /><br />“என் அணி கோப்பையை வெல்லப்போவது இல்லை என்று சொல்லப் போகிறேன்!”<br /><br />“இருந்த அணிகளிலேயே மிக அதிக விலைக்கு அதாவது ஐநூறு கோடி ரூபாய்க்கு இந்த அணியை வாங்கியிருக்கிறீர்கள். இதர செலவுகளாக ஒரு இருநூற்றி ஐம்பது கோடி செலவழித்திருப்பீர்கள். பணம் வீணாகிவிட்டது என்று கவலை கொள்கிறீர்களா?”<br /><br />“ம்... நான் ஒரு தொழிலதிபர். பண இழப்பு எனக்கு வருத்தத்தை தரவில்லையென்று பொய் சொல்லமாட்டேன். அணியின் கேப்டன் நகுல் ஆர்யாவையும், பயிற்சியாளரையும் நம்பி தோற்றுவிட்டேன். நான் தேர்ந்தெடுத்த அணியை அவர்கள் இருவரும் ஒப்புக் கொண்டிருந்தால் என் அணி வென்றிருக்கும்!”<br /><br />“பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறீர்களே? மீதி இருக்கும் போட்டிகளில் இதனால் உங்கள் அணியின் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படாதா?”<br /><br />இதற்குள்ளாக புல்லையாவின் அந்தரங்க பாதுகாவலர்களும், உதவியாளர்களும் அவரை காருக்கு அழைத்துச் சென்றுவிட பத்திரிகையாளர்களின் மற்ற கேள்விக்கு அவரால் விடையளிக்க இயலவில்லை. பத்திரிகையாளர்கள் கூட்டமாக வைசாக் அணியின் கேப்டன் நகுல் ஆர்யாவை சூழ்ந்தார்கள்.<br /><br />“உங்களால் தான் வைசாக் அணி தோற்றதாக அணியின் உரிமையாளர் குற்றம் சாட்டுகிறாரே?”<br /><br />நகுலின் முகம் சிவந்தது. உதடுகள் துடிதுடித்தது. இருப்பினும் ஒரு நொடியில் தன்னை சரிசெய்துகொண்டு புன்னகைத்தவாறே, “அவர் ஒரு நல்ல தொழிலதிபர். இதைத்தவிர சொல்ல வேறொன்றுமில்லை” என்றவாறே மைதானத்தை விட்டு வெளியேறினான்.<br /><br /><br /><strong><span style="font-size:180%;">அ</span></strong>ஜய் புல்லையாவின் அந்தரங்க அலுவல் அறை அது. அவரது மகன் தேஜாவை தவிர வேறு யாருக்கும் அந்த அறைக்குள் செல்ல அனுமதியில்லை. தேஜா இருபது வயது இளமைப்புயல். பதினெட்டு வயதிலேயே ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கு தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் பொறுப்பேற்றவன். பிறந்ததிலிருந்தே குளிரூட்டப்பட்ட அறைகளில் மட்டுமே வாழ்ந்தவன் என்பதால் ரோஜாப்பூ நிறத்திலிருந்தான். தலை கலைந்திருந்ததை கைகளால் சரிசெய்தான். முகம் சற்று வாட்டமாக இருந்தது. கிரிக்கெட் ரசிகன் என்பதால் என்.பி.எல். போட்டிகளில் ஒரு அணியை தங்கள் குழுமம் வாங்குவது என்பது அவன் செய்திருந்த முடிவு.<br /><br />“அப்பா! விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜமானது. தோற்றவுடனேயே நம் அணித்தலைவரின் தலையை நீங்கள் உருட்டியது நாகரிகமானது அல்ல!” கொஞ்சம் சீற்றத்தோடே தந்தையிடம் சொன்னான்.<br /><br />“வெற்றி தோல்வியை சகஜமாக எடுத்துக் கொள்ள நாம் விளையாட்டு வீரர்கள் அல்ல. தொழிலதிபர்கள். நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு பல லட்சங்களை பெற்றுத்தரும் சக்தி வாய்ந்தது. விவரம் புரியாமல் வார்த்தைகளை விடமாட்டேன் தேஜா!”<br /><br />“புரியவில்லை அப்பா. இந்தப் போட்டிகளில் வென்றிருந்தால் நமக்கு ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்திருக்கும். இருப்பினும் இப்போதே கூட ஸ்பான்ஸர்கள் மூலமாக நாம் ஈட்டிய வருவாயை கணக்கெடுத்துப் பார்த்தால் நமக்கு நஷ்டம் எதுவுமில்லை. அப்படியிருக்க ஒரு பிரபல கிரிக்கெட் வீரரை நம் அணி தோல்விகளுக்கு பொறுப்பேற்க செய்ததில் நமக்கென்ன லாபம்?” நகுலின் தீவிர விசிறியான தேஜா தன் அபிமான வீரனுக்கு தன் தந்தையாலேயே ஏற்பட்ட அவமானத்தால் வருத்தத்தில் இருந்தான்.<br /><br />கனிவாக தன் மகனைப் பார்த்த புல்லையா, “உலகின் முதல் தொழில் எது தேஜா?”<br /><br />“விபச்சாரம்!”<br /><br />“இல்லை.. ஊழல்! சாத்தான் ஆதாம் மூலமாக செய்த ஆப்பிள் ஊழல் தான் உலகின் முதல் தொழில்!”<br /><br />“சரி!”<br /><br />“ஊழல் என்ற வார்த்தையை சமூகம் அருவருப்பாக நோக்கினாலும் கூட தொழில் செய்பவர்கள் ஊழல் செய்யாமல் எந்த தொழிலையும் செய்யமுடியாது. உண்மையில் சொல்லப்போனால் அரசுத்துறைகளில் நடக்கும் ஊழல்களைவிட பன்மடங்கு தனியார் துறைகளில் ஊழல் செய்து சம்பாதிக்க முடியும். சம்பாதிப்பது தானே நமது தொழில்?”<br /><br />“புரியவில்லை அப்பா. நம் அணித்தலைவர் அவமானப்படுத்தப் பட்டதற்கும் நீங்கள் கொடுக்கும் வியாக்கியானங்களுக்கும் என்ன தொடர்பு?”<br /><br />“பொறு. அதற்குதான் வருகிறேன். நம் அணியை ஐநூறு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறேன். ஏறத்தாழ இருநூற்றி ஐம்பது கோடி செலவழித்து விளம்பரப்படுத்தியிருக்கிறேன். நம் அணி வென்றால் நமக்கு ஆயிரம் கோடி ரூபாய் தான் வரும். அதே நேரத்தில் நம் அணி வெல்லும் என்று தொழில்முறை சூதாட்டக்காரர்கள் கட்டியிருக்கும் பந்தயத் தொகை எவ்வளவு தெரியுமா?”<br /><br />“ஐயாயிரம் கோடி ரூபாய் இருக்கலாம். இருந்ததிலேயே சிறந்த அணி நம் அணி என்பதால் இவ்வளவு பெரிய தொகை பந்தயம் கட்டப்பட்டிருக்கிறது. போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக பத்துக்கு எட்டு பேர் நம் அணிதான் கோப்பையை வெல்லும் என்றார்கள்”<br /><br />“நீ சொல்லுவது சரி. ஆனால் நம் அணி தோற்கும் என்று பண்ணிரெண்டாயிரம் கோடிக்கு பந்தயம் கட்டப்பட்டிருப்பது உனக்குத் தெரியுமா?”<br /><br />“தெரியாது அப்பா”<br /><br />“ஆம் மகனே. நம் அணி தோற்கும் என்று நம் ஆட்கள் மூலமாக நான் மட்டுமே பத்தாயிரம் கோடி ரூபாய் கட்டியிருக்கிறேன்! இப்போது சொல். நம் அணி தோற்றால் யாருக்கு லாபம்”<br /><br />வியப்போடு, “லாபம் இருக்கட்டும் அப்பா. நம் அணி வென்றிருந்தால் நமக்கு தானே கவுரவம்?”<br /><br />“கவுரவத்தை தூக்கி குப்பைத்தொட்டியில் போடு. இங்கே சம்பாதிப்பவன் தான் வெற்றி பெற்றவன். நிறைய பணம் சம்பாதித்தவனை கவுரவமும், புகழும் தானே தேடி வரும்! நம் மாநிலத்தில் இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெறப் போகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் ஆயிரம் கோடி அளவில் நான் நன்கொடை தரவேண்டும். நான் முப்பது ஆண்டுகளாக பாடுபட்டு சேர்த்தப் பணத்தை தரச்சொல்கிறாயா? ஊழல் செய்து சம்பாதிக்கும் பணத்தை தான் ஊழல்வாதிகளுக்கு தரமுடியும்!”<br /><br />“என்ன இருந்தாலும் நகுலின் பெயர் அசிங்கப்பட்டது எனக்கு நல்லதாகப் படவில்லை. அவர் நம்முடைய நல்ல நண்பர்!”<br /><br />“கவலைப்படாதே நகுலின் பெயர் பாதிக்கப்படாது. கடைசி இரு போட்டிகளில் அவன் சதம் அடிப்பான், இழந்த பெயரை மீட்டுக் கொள்வான். அதற்கும் நான் ஏற்பாடு செய்துவிட்டேன்!”<br /><br />“அதற்கும் கூடவா ஏற்பாடு?”<br /><br />“ம்ம்.. நகுல் நம் அணியின் தலைமை பொறுப்பேற்க நாலு கோடி பேசியிருந்தோம் இல்லையா? நமக்கு பத்தாயிரம் கோடி அளவிலான லாபத்தை அவன் தந்திருப்பதால் அவனுக்கு பேசியிருந்த தொகையை விட நூறு மடங்கு அதிகம் தருவதாக உறுதியளித்திருக்கிறேன். உனக்கு சந்தோஷம் தானே?”<br /><br />“சந்தோஷம் அப்பா!” நகுல் ஏன் தன் தந்தையை நல்ல தொழிலதிபர் என்று சொன்னான் என்று புரிந்ததால் அர்த்தத்தோடு சிரித்தான் தேஜா!<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-8710019160633105923?l=www.luckylookonline.com'/></div>யுவகிருஷ்ணாhttp://www.blogger.com/profile/04524693633714401444yuvakrishna@gmail.com0tag:blogger.com,1999:blog-25593973.post-60856351218625584222009-06-14T02:33:00.000+05:302009-07-18T02:36:01.524+05:30தேவதைகளும், கண்ணாடிகளும்!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SjXtzwJlqZI/AAAAAAAACPU/2Dq_XNyar3g/s1600-h/angel.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 270px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SjXtzwJlqZI/AAAAAAAACPU/2Dq_XNyar3g/s400/angel.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5347441605926562194" /></a><br />தேவதைகள் எப்போதும் அருள் மட்டுமே பாலித்துக் கொண்டிருப்பதில்லை. அவ்வப்போது அச்சுறுத்தவும் செய்கிறார்கள். வாடிகன் தேவதைகள் ஏஞ்சல்ஸ் & டிமான்ஸில் உலகை அச்சத்தில் ஆழ்த்தியது மாதிரி.<br /><br />போப்பாண்டவர் செத்துப் போகிறார். புதுப்போப்பை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் முக்கியமான நான்கு கார்டினல்கள் காணவில்லை. ஒரு ஆய்வுக்கூடத்தில் மிகமுக்கியமான ’வயல்’ (Vial) என்று சொல்லக்கூடிய விஷயம் ஒன்று கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது. அந்த வயலால் வாடிகன் அழிவதை தடுக்க அமெரிக்காவில் இருந்து புரொபசர் ஒருவர் கிளம்பிவருகிறார். அவர் நாத்திகர். அவருக்கும் வாடிகனின் புனிதர்கள் சிலருக்கும் அவ்வப்போது நாத்திக, ஆத்திக விவாதம் நடைபெறுகிறது.<br /><br />வாடிகனுக்கு புதியதாக வில்லன்கள் முளைத்துவிடவில்லை. அது முன்னூறு, நானூறு ஆண்டு பகை என்று புரொபசர் விளக்குகிறார். அவர்கள் பெயர் இலுமினாய்ட்ஸாம். அறிவியல் வெறியர்கள். மதஅடிப்படைவாத தீவிரவாதத்துக்கு எதிரான விஞ்ஞான தீவிரவாதிகள். கடத்தப்பட்ட கார்டினல் ஒவ்வொருவராக இலுமினாய்டிகள் கொன்றுகொண்டே வர, கடைசி கார்டினலையும் கொன்று விட்டு, அந்த வயல் மூலமாக வாடிக்கனையே அழிப்பது இலுமினாய்டுகளின் திட்டம்.<br /><br />புரொபசரால் கார்டினல்களை காப்பாற்ற முடிந்ததா? வயலால் வாடிகன் அழியாமல் காக்கமுடிந்ததா என்பதே படம். படம் முழுக்க ஹிட்ச்காக் பாணியில் திடீர் திடீரென பலர்மீது சந்தேகத்தின் நிழல் விழுகிறது. யார் குணச்சித்திரம்? எவன் துரோகி? எவன் வில்லன்? என்பது யாரும் எதிர்பாராத அடுக்கடுக்கான சஸ்பென்ஸ்.<br /><br />டான்பிரவுன் இந்த நாவலை எழுதியதுமே இதை தமிழில் தசாவதாரமாக உல்டா அடித்து எடுத்துவிட்டார்கள். ஹாலிவுட்காரர்கள் கொஞ்சம் சோம்பேறிகள். தசாவதாரம் வெளிவந்து ஒருவருடம் கழித்துதான் இப்படத்தை வெளியிட முடிந்திருக்கிறது.<br /><br />* - * - * - * - * - * - * - *<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SjXttNIeSRI/AAAAAAAACPM/0zfqSpnZ6b0/s1600-h/mirrors.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 270px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SjXttNIeSRI/AAAAAAAACPM/0zfqSpnZ6b0/s400/mirrors.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5347441493447428370" /></a>அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அவரவர் முக அழகை கண்ணாடிதான் வெளிக்காட்டும். முகத்தை மட்டுமன்றி பேய்களையும் கண்ணாடிகள் காட்டுவது பைபிள்கால சினிமா ஸ்ட்ரேட்டஜி. மிர்ரர்ஸ் திரைப்படமும் இதற்கு விதிவிலக்கல்ல.<br /><br />நியூயார்க் நகரில் டிடெக்டிவ்வாக பணியாற்றிய ஒருவர், ஒரு குற்றம் தொடர்பாக பணிநீக்கம் செய்யப்படுகிறார். வேறு பணி கிடைக்காத நிலையில் தீவிபத்தில் எப்போதோ எரிந்துப்போன மிகப்பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்றில் நைட் வாட்சேமனாக பணியாற்றி வயிற்றைக் கழுவுகிறார்.<br /><br />இரவு வேளைகளில் ரவுண்ட்ஸ் வரும்போது கிட்டத்தட்ட அழிந்துப்போன அந்த பிரம்மாண்ட கட்டத்தின் ஒரு பகுதியில் சில கண்ணாடிகள் மட்டும் பளிச்சென இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைகிறார். அக் கண்ணாடிகளுக்குள் அடைந்துக் கிடக்கும் ஆவிகள் அடுத்த சில நாட்களில் அவரது வாழ்க்கையில் ஆடும் பேயாட்டம் தான் மிர்ரர்ஸ். படத்தின் ஒலிப்பதிவு பயங்கரமானது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பயமென்னும் உணர்வை ஏற்படுத்திய படம் இது. இப்படத்தின் முடிவும் யாரும் எதிர்ப்பார்க்க இயலாதது.<br /><br />கடந்த வாரம் இந்தியாவில் வெளியாகியிருக்கும் இப்படம், கடந்த வருடமே ஹாலிவுட்டில் வெளியாகியிருக்கிறது. இது இந்தியாவில் வெளியாகுவதற்கு முன்பே இப்படத்தை அச்சு அசலாக, சில காட்சிகளோடு சேர்த்து 13பி என்று இந்தியிலும், யாவரும் நலம் என்று தமிழிலும் படமெடுத்து துட்டு பார்த்துவிட்டார்கள். இந்த அழகில் 13பி படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய யாரோ ஒரு கோயிந்து கேட்டிருப்பதாக இயக்குனர் பேட்டி வேறு தருகிறார்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-6085635121862558422?l=www.luckylookonline.com'/></div>யுவகிருஷ்ணாhttp://www.blogger.com/profile/04524693633714401444yuvakrishna@gmail.com0tag:blogger.com,1999:blog-25593973.post-27439407760204198682009-06-09T02:36:00.000+05:302009-07-18T02:37:48.301+05:30சில விளம்பரங்கள்!டிவி நிகழ்ச்சிகளின் போது இடையில் விளம்பரங்கள் வரும்போது சானல் மாற்றாதவராக நீங்கள் இருந்தால் இந்த விளம்பரங்களை கண்டிருக்கலாம்.<br /><br /><a href="http://1.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SCvVoxtQfSI/AAAAAAAAAvk/nduFFZ0b62Y/s1600-h/dog.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SCvVoxtQfSI/AAAAAAAAAvk/nduFFZ0b62Y/s400/dog.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5200485091244014882" /></a><br />வோடபோன் செல்பேசி சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவுக்கான விளம்பரம் அது. ஒரு புத்திசாலி நாய் தன் தோழியான குட்டிப்பெண்ணுக்கு சிறு சிறு உதவிகளை செய்யும். அந்த குட்டிப்பெண் மீன் பிடிக்கும்போது மீன்வலை கொண்டுவரும். காலுறையை தொலைத்துவிட்டு அப்பெண் தேடும்போது அதை தேடிக்கொண்டுவரும். டை கட்ட மறந்து பள்ளி பேருந்தில் ஏறிவிடுவாள். டையை எடுத்துக்கொண்டு பேருந்தின் பின்னாலேயே நாய் ஓடிவரும். ஒவ்வொரு விளம்பரமும் ‘சேவை செய்வதில் மகிழ்ச்சி' என்ற வாசகத்தோடு நிறைவடையும்.<br /><br />இந்த தொடர் விளம்பரங்களை சிந்தித்த கலைஞனின் படைப்புத்திறனை கண்டு வியந்திருக்கிறேன், பொறாமை கொண்டிருக்கிறேன். அன்றாட வாழ்வின் இயல்பான சம்பவங்களை முப்பது நொடி விளம்பரமாக மாற்றுவது மிக சவாலானது. பலரையும் கவர்ந்த விளம்பரங்கள் அவை.<br /><br /><br />ஆண்களின் உள்ளாடைகளுக்கான விளம்பரம் இது. ஒரு கட்டுடல் வாலிபன் குளித்துவிட்டு வெறும் உள்ளாடையோடு வெளியே வருகிறான். அவன் வரும் அதே நேரத்தில் அதே அறைக்குள் அவனது பெண் நண்பி நுழைகிறாள். அவன் கட்டுடலை பார்த்து மயங்கினாளோ இல்லையோ, அவனது உள்ளாடையை கண்டு மயங்கி கண்களில் காமத்தை காட்டுகிறாள். அறைக்கதவு மூடப்படுகிறது.<br /><br /><br />ஒரு நவீன தொலைக்காட்சிக்கான விளம்பரம் ஒன்று. மிகப்பெரிய அந்த தொலைக்காட்சியின் திரையை நோக்கி அரைகுறை ஆடையுடன் ஒரு அழகி வருகிறாள். தொலைக்காட்சியில் ஒரு ஆணின் உருவம் ஒளிபரப்பப்படுகிறது. தொலைக்காட்சியை நெருங்கும் அந்த அழகி ஒரு காதலனை காண்பது போல விரகதாபத்தை உதடுகளில் தேக்கி அருகில் வருகிறாள். அருகில் வந்தவள் உடலை ஒரு மாதிரியாக முறுக்கி தன் வனப்பை காட்டுகிறாள். அதாவது அந்த தொலைக்காட்சியின் வடிவம் செக்ஸியாக இருக்கிறதாம், ஒரு ஆணின் கட்டுடலுக்கு நிகரானதாக இருக்கிறதாம். அதைக்கண்டு அவள் காமவசப்படுகிறாளாம்.<br /><br /><br />ஒரு இளம் மனைவி தன் கணவனின் பெயரை உச்சரித்தவாறே வீட்டுக்குள் இருக்கும் ஒவ்வொரு அறையாக வருகிறாள். எங்குமே அவள் கணவனை காணவில்லை. தோட்டத்துக்கு முன்பாக இருக்கும் போர்டிகோவுக்கு வருகிறாள். ஒரு நாற்காலி தெரிகிறது. நாற்காலிக்கு பக்கவாட்டில் கணவனின் கையும், காலும் அலங்கோலமாக விரிந்து கிடக்கிறது. காப்பி கோப்பை சிதறிக் கிடக்கிறது. கிட்டத்தட்ட அவன் மரணித்துவிட்டதாக நினைத்து மனைவி ஓவென்று கதறியவாறே ஓடிவருகிறாள். கணவனோ வாக்மேனில் இசை கேட்டு மெய்மறந்திருக்கிறான். மனைவியின் கதறலை கேட்டு ஓடிவந்து அணைத்துக் கொள்கிறான். லைப் இன்சூரன்ஸ் செய்து தொலையுங்கள் என்பதற்கான விளம்பரம் இது.<br /><br /><br />மேற்கண்ட விளம்பரங்களில் வோடபோன் நிறுவனத்தின் விளம்பரம் மட்டுமே சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. ஒரு நாயை துன்புறுத்தி படம் பிடித்திருக்கிறார்கள் என்று யாரோ ஒரு விலங்குகள் நல ஆர்வலர் புகார் செய்ய, வோடபோன் நிறுவனத்துக்கு நோட்டிஸ் சென்றிருக்கிறது. வோடபோன் நிறுவனமும் எதுக்கு வம்பு? என்று தன் விளம்பரங்களை வாபஸ் வாங்கிக் கொண்டிருக்கிறது.<br /><br />நன்கு பயிற்சி பெற்ற ஒரு நாய் துன்புறுத்தல் ஏதும் செய்யப்படாமல், நாய்க்கு எந்த ஆபத்தும் இல்லாத வகையில் நடித்துக் கொடுத்திருக்கும் விளம்பரத்துக்கே இந்த கதியென்றால் இனிமேல் இயக்குனர் ராமநாராயணன் படமென்று எதையும் எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாக இம்சை அரசன் திரைப்படத்தில் குதிரைகள் பயன்படுத்தப் பட்டதால் படமே வெளிவரமுடியாத அவலநிலை ஏற்பட்டதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.<br /><br />விலங்குகளுக்கு இவ்வளவு பரிவு காட்டும் இந்திய அரசு நம் கதாநாயகர்களால் மிக மோசமாக பந்தாடப்படும், பல மாடிக்கட்டிடங்களின் உயரத்தில் இருந்து தூக்கிவீசப்படும் வில்லனின் அடியாட்கள் என்று சித்தரிக்கப்படும் மனிதர்களின் மீது கொஞ்சமாவது பரிவு காட்டியிருக்கிறதா என்று யோசித்துப் பார்க்கவேண்டும். திரைப்படங்களில் மட்டுமல்லாது விளம்பரங்களிலும் மிக ஆபத்தான ஸ்டண்ட் காட்சிகளில் மனிதர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். விலங்குகள் நல ஆர்வலர்களும் நாயோ, பூனையோ பாதிக்கப்பட்டால் மட்டும் தான் புகார் அனுப்புவார்கள் போலிருக்கிறது. சமூக விலங்கான மனிதனுக்கு அவர்களது நேசிப்பில் இருந்து விதிவிலக்கு அளித்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.<br /><br />அடுத்து நான் குறிப்பிட்டிருக்கும் இரு விளம்பரங்களும் மிக மிக அபத்தமானது. விளம்பரப்படுத்தப்பட்ட பொருளை வாங்கும் வகையில் எந்த வகையில் இவ்விளம்பரங்கள் பார்வையாளனை ஊக்குவிக்கிறது என்று தெரியாமல் தாவூ தீர்ந்துக் கொண்டிருக்கிறேன். ஷகீலா பட போஸ்டர்களை கிழித்து, சாணம் அடிக்கும் பெண்ணுரிமைப் போராளிகள், எஃப் டிவிக்கு தடை விதிக்கக் கோரிய ஃபெமினிஸ்டுகள் கண்ணில் இந்த விளம்பரங்களெல்லாம் இதுவரை கண்ணில் படவில்லை போலிருக்கிறது. அதனால் தானோ என்னவோ இன்னமும் யாரும் இவ்விளம்பரங்களில் பெண்களும், அவர்களது உணர்வுகளும் கொச்சைப்படுத்தப்பட்டிருப்பது குறித்து எந்த கவலையும் படவில்லை.<br /><br />கடைசி விளம்பரம் மிகக்கொடூரமானது. மனித உணர்வுகளோடு, மன பலகீனத்தோடு விளையாடுவது. இன்சூரன்ஸ் விளம்பரங்களுக்கு உலகளவில் ஒரு சட்டம் உண்டு. விளம்பரத்தை காணும் பார்வையாளரை இன்சூரன்ஸ் எடுக்கச் சொல்லி வற்புறுத்தாத அளவுக்கு விளம்பரம் அமைய வேண்டும். அதனால் தான் இன்சூரன்ஸ் விளம்பரங்களில் Insurance is the subject matter of solicitation என்ற வாசகம் கட்டாயமாக இடம்பெறுகிறது. மாறாக இவ்விளம்பரமோ மரணம் குறித்த அச்சத்தை மிக மோசமாக பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகிறது.<br /><br />சிகரெட் மற்றும் மது விளம்பரங்களுக்கு நம் நாட்டில் தடையுண்டு. தொலைக்காட்சி விளம்பரங்களோ அல்லது ஹோர்டிங் மற்றும் பத்திரிகை விளம்பரங்களோ இவற்றுக்காக செய்யப்படக்கூடாது. ஆனாலும் நீங்கள் இவ்விளம்பரங்களை பரவலாக காணலாம். அதே பிராண்டிங்குக்கு, அதே பெயரில் விளம்பரம் செய்யப்பட்டாலும் அவை மியூசிக் சிடி என்றோ, மினரல் வாட்டர் என்றோ எனர்ஜி டிரிங்க் என்ற தயாரிப்புப் பெயரிலோ தொடர்ந்து விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.<br /><br /><a href="http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SCvVuRtQfTI/AAAAAAAAAvs/Le7rTW4WJCU/s1600-h/ogilvy.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SCvVuRtQfTI/AAAAAAAAAvs/Le7rTW4WJCU/s400/ogilvy.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5200485185733295410" /></a>எதற்கு தடை விதிப்பது? எதை அனுமதிப்பது? எதை யார் திடீரென்று எதிர்ப்பார்கள்? போன்றவை குறித்த தெளிவான மனநிலை இந்தியர்களுக்கு இல்லை. இந்த கோக்குமாக்கு மனநிலையை வெளிநாட்டவர்கள் மிக கேலியாக பார்க்கிறார்கள் என்பதையும் நாம் அறிவதில்லை. விளம்பர உலகின் தந்தை என்று அறியப்படுபவர் டேவிட் ஓகில்வி. இவர் எழுதிய ‘ஓகில்வி ஆன் அட்வர்டைஸிங்' என்ற புத்தகம் உலகளவில் விளம்பர நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கான பைபிள் என்று போற்றப்படுகிறது. அப்புத்தகத்தை வாசிக்காதவர்கள் யாரும் விளம்பரத்துறையில் முழுமையாக பணிபுரிய இயலாது. அந்தப் புத்தகத்திலேயே இந்தியா குறித்த நையாண்டி மறைமுகமாக இடம்பெற்றிருக்கிறது.<br /><br />முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக பாரிஸ் நகரின் நெரிசல் மிகுந்த போக்குவரத்து சிக்னல் ஒன்றில் அந்த ஹோர்டிங் பலரின் கவனத்தையும் கவர்ந்தது. ஒரு பெண் நிற்கிறாள், அவளை பின்புறமாக படமெடுத்திருக்கிறார்கள். அவள் மேல்கச்சையும், கீழே ஒரு உள்ளாடையும் மட்டும் அணிந்திருக்கிறாள். “அடுத்த வாரம் இதே இடத்தை பாருங்கள். நான் இந்த ஆடைகளை கூட துறந்திருப்பேன்” என்றொரு வாசகம் அச்சிடப்பட்டிருக்கிறது.<br /><br />அவ்விளம்பரத்தை கண்ட பலர் ஒருவாரம் காத்திருந்து, அடுத்த வாரம் அதே விளம்பரத்தை காண்கிறார்கள். சொன்னபடியே அந்த பெண் ஆடையில்லாமல் இருக்கிறாள். ஆனால் பின்புற அழகு மட்டுமே தெரிகிறது. மீண்டும் ஒரு வாசகம் “அடுத்த வாரம் பார்த்தீர்களென்றால் நான் திரும்பி நிற்பேன்”. பின்புறத்தையே பார்த்து சூடானவர்கள் முன்புறத்தை காண கொலைவெறியோடு ஒருவாரம் காத்திருக்க நேர்ந்தது.<br /><br />அவர்கள் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. விளம்பரம் மாற்றப்பட்டு அந்தப் பெண் ஆடையில்லாமல் இருப்பது போன்ற படம் அச்சிடப்பட்டு வாசகம் இவ்வாறாக அமைந்தது “நாங்கள் உங்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை என்றுமே மீறுவதில்லை”. வாசகத்துக்கு கீழே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றிருந்தது.<br /><br />சமீபத்தில் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்திய புள்ளிராஜா ரக விளம்பரங்களுக்கெல்லாம் முன்னோடி இந்த விளம்பரம். இவ்வகை விளம்பரங்களை teaser ads என்பார்கள். நம் வசதிக்காக தமிழில் 'சீண்டல் விளம்பரங்கள்' என்று மொழிபெயர்த்துக் கொள்ளலாம். இவ்விளம்பரத்தை உருவாக்கியவர் ஓகில்வி. இவ்விளம்பரம் சம்பந்தமாக ‘ஓகில்வி ஆன் அட்வர்டைஸிங்' புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பவர் “இதுபோன்ற விளம்பரங்களை என்னால் உலகின் எந்த நாட்டில் வேண்டுமானாலும் வெளியிடமுடியும், ஒரே ஒரு நாட்டைத் தவிர, அந்நாடு இந்தியா!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.<br /><br />இப்போது தடைகோரப்பட்ட வோடபோன் நாய் விளம்பரத்தை எடுத்த விளம்பர நிறுவனம் ஓகில்வி உருவாக்கிய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.<br /><br /><br />ஓக்கே சீரியஸ் போதும், சமீபத்தில் என்னைக் கவர்ந்த விளம்பரங்களுள் ஒன்றை சொல்கிறேன். சன் டிடிஎச்-காக எடுக்கப்பட்டிருக்கும் விளம்பரம் தொழில்நுட்ப அளவிலும், உள்ளடக்க அளவிலும் மிக தரமாக எடுக்கப்பட்டிருக்கிறது. “வீட்டுக்கு வீடு சன் டைரக்ட்” என்ற வரிகளோடு தொடங்கும் கலக்கல் பீட் பாடல் சூப்பராக இருக்கிறது. பதிவு செய்த குரலை அப்படியே ஒலிபரப்பாமல் கம்ப்யூட்டரில் ஏதோ தில்லாலங்கடி வேலை செய்திருப்பதால் குரலில் கஞ்சா தடவிய போதை இருக்கிறது. தமன்னா இவ்வளவு அழகா? என்று வியக்க வைக்கிறது இவ்விளம்பரம். சினிமாவில் கூட யாரும் தமன்னாவை இவ்வளவு அழகாக காட்டியதில்லை. நடனம் இசைக்கு ஏற்றவாறு ஜாடிக்கேத்த மூடி மாதிரி செம ஃபிட் ஆக இருக்கிறது. விளம்பரத்தில் திருஷ்டி படிகாரம் மாதிரி பாலச்சந்தரின் ஆஸ்தான நடிகையான ரேணுகா வருகிறார். அவர் சம்பந்தப்பட்டவற்றை மற்றும் அகற்றி, இன்னமும் கொஞ்சம் தமன்னாவை எக்ஸ்ட்ராவாக காட்டினால் செம சூப்பராக இருக்கும்!!<br /><br />இதுமாதிரி நிறைய விளம்பர டெக்னிக்குகளையும், விளம்பரங்களையும் பற்றி தமிழில் முழுமையாக அறிந்துகொள்ள <a href="http://www.luckylookonline.com/2008/11/blog-post_25.html">“சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்”</a> நூலை வாங்கி பயனடையுங்கள் :-)<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-2743940776020419868?l=www.luckylookonline.com'/></div>யுவகிருஷ்ணாhttp://www.blogger.com/profile/04524693633714401444yuvakrishna@gmail.com0tag:blogger.com,1999:blog-25593973.post-10602396300955235362009-06-08T02:39:00.000+05:302009-07-18T02:40:36.346+05:30குறிகள்!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SizBEb-eWAI/AAAAAAAACOM/L6Hyupjjgz8/s1600-h/spring.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 268px;" src="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SizBEb-eWAI/AAAAAAAACOM/L6Hyupjjgz8/s400/spring.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5344859139755366402" /></a><br />பசுமரங்கள் சூழ்ந்த, நீலநீர் நிறைந்த அழகான ஏரி. நடுவில் ஒரே ஒரு இல்லம். அந்த இல்லத்தில் வசிப்பது ஒரு வயதான குருவும், குழந்தைப் பருவ சீடனும்.<br /><br />குழந்தைப் பருவம் குதூகலப் பருவம். ஞானத்தை கற்பவனாக இருந்தபோதிலும் குழந்தைப் பருவத்துக்கே உரிய குதூகலம் அந்த சீடனுக்கும் இருந்தது. ஓடையில் ஓடும் ஒரு மீனைப் பிடிக்கிறான். அதன் உடலை கயிறால் கட்டி, கயிறின் மறுமுனையில் ஒரு கல்லை கட்டுகிறான். மீண்டும் ஓடையில் விடுகிறான். கல்லை இழுத்துச் செல்ல மீன் சிரமப்படுவதை கண்டு கைக்கொட்டி சிரிக்கிறான். இதே கதி ஒரு தவளைக்கும், ஒரு பாம்புவுக்கும். சீடனின் சேட்டைகளை மறைந்து நின்று கவனித்துக் கொண்டிருக்கிறார் குரு.<br /><br />இரவானதும் சீடன் தூங்கிக் கொண்டிருக்கிறான். ஒரு பெரிய கல்லை எடுத்து சீடனின் முதுகோடு சேர்த்து கட்டி வைத்து விடுகிறார் குரு. காலையில் எழும் சீடக்குழந்தை கல் தனக்கு பாரமாக இருப்பதாகவும், கழட்டும்படியும் குருவிடம் கேட்கிறான். நேற்று நீ பாம்புக்கும், தவளைக்கும், மீனுக்கும் எதை செய்தாயோ, அது எவ்வளவு சிரமமானது என்பதை உணர்கிறாயா? அந்த மூன்று உயிரில் எது மரணித்தாலும் இன்று நீ முதுகில் சுமக்கும் கல்லை, இதயத்தில் வாழ்நாள் முழுக்க சுமக்க நேரிடும் என்கிறார்.<br /><br />- நேற்று, வலைப்பதிவர்களுக்காக சென்னையில் திரையிடப்பட்ட <a href="http://www.imdb.com/title/tt0374546/">’ஸ்ப்ரிங், ஸம்மர், பால், விண்டர் அண்ட் ஸ்ப்ரிங்</a>’ படத்தில் இடம்பெற்ற காட்சிகளில்...<br /><br />* - * - * - * - * - * - * - *<br /><br />ஏற்கனவே பலமுறை நாம் கேட்ட, வாசித்த நீதிதான் இது. எதை விதைக்கிறோமோ, அது வளரும். குரு அந்த சீடனுக்கு சாதாரண கல்லை தான் கட்டினார். நம்மைப் போன்றவர்கள் முதுகில் நியாயமாகப் பார்க்கப் போனால் பல்லாவரம் மலை அளவுக்கான பெரிய பாறையை வாழ்நாள் முழுக்க சுமக்க வேண்டும்.<br /><br />ஒரு காமிக்ஸை வாசிப்பது மாதிரி இப்படம் சொல்லவரும் விஷயத்தை மிக எளிமையாக சொல்லிவிடுகிறது. அதையும் தாண்டி படத்தில் குறியீடுகள் இருக்கிறது, பனுவலியல் அராஜகத்துக்கு எதிரான காட்சிகள் இருக்கிறது, விஷயங்களை கட்டுடைக்கிறது என்று படம் பார்த்தவர்கள் ஏதேதோ சொல்கிறார்கள். பிரச்சினையில்லை.<br /><br />படத்தின் ஒரு ‘பிட்’டில் உணர்ச்சிவசப்பட்டு படம் பார்த்துக்கொண்டிருந்த ஆசிஃப் அண்ணாச்சி, “அடடே. அருமையா படம் பிடிச்சிருக்காடே!” என்று மனமாரப் பாராட்டினார். அதே காட்சியை, அவருக்கு அடுத்த இருக்கையில் இருந்து பார்த்த ஹரன்பிரசன்னா, “அபச்சாரம். சிவ. சிவா” என்று தன்னுடைய (அ)திருப்தியை வெளிப்படுத்தினார். ஒரே காட்சிக்கான நேரெதிர் எக்ஸ்ட்ரீம் கார்னர்களில் வெளிப்படுத்தப்பட்ட ‘அபாரம்’, ‘அபச்சாரம்’ சொற்கள்தான் எனக்கென்னவோ இப்படத்துக்கான முக்கியமான குறியீடாகப் படுகிறது.<br /><br />பிரதி நேரடியாக சொல்ல வரும் விஷயம், அதை உள்வாங்குபவனுக்கு, பிரதியை உருவாக்கிய ஆசிரியன் சிந்தித்த வகையிலேயே புரிந்தால் போதுமானது. மறைமுகமாக அழகியலோடு உணர்த்தப்படும் குறியீடுகள் உள்வாங்குபவனின் மனநிலைக்கும், கொள்கைக்கும் ஏற்ப வேறு வேறு வகைகளில் புரிந்துகொள்ளப்பட வாய்ப்பிருக்கிறது. எனவே குறியீடுகள் ஏதும் தேவைப்படாமலேயே உள்வாங்குபவனை புரியவைக்கும் வகையில் எடுக்கப்படும் படம் உலகப்படம் என்பதாக எடுத்துக் கொள்ளலாம். பிரதியும் சாகவேண்டாம், ஆசிரியனும் சாகவேண்டாம், வாசகனும் செத்துத் தொலைக்க வேண்டாம்.<br /><br />* - * - * - * - * - * - * - *<br /><br />இப்பதிவின் தலைப்பில் ஏதோ வார்த்தைப்பிழை இருப்பதாக புத்தி சொல்கிறது. மனசு மறுக்கிறது.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-1060239630095523536?l=www.luckylookonline.com'/></div>யுவகிருஷ்ணாhttp://www.blogger.com/profile/04524693633714401444yuvakrishna@gmail.com0tag:blogger.com,1999:blog-25593973.post-58599095681640238542009-06-08T02:37:00.000+05:302009-07-18T02:38:49.622+05:30அரசியல்!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/Si37MU5ztZI/AAAAAAAACOU/XXJqcU2zoEM/s1600-h/image.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/Si37MU5ztZI/AAAAAAAACOU/XXJqcU2zoEM/s400/image.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5345204521946822034" /></a><br /><b><span class="Apple-style-span" style="font-size:large;">அ</span></b>ந்தக் காலத்தில் அவர் அதிரடியான பெயர் பெற்ற அரசியல்வாதி. பருவமழை பொய்த்து அந்த ஆண்டில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சம் வரலாற்றுப் பிரசித்திப் பெற்றது. அவர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்ததால் அவர் தொகுதி மக்கள் தினமும் அவர் வீடு தேடி வந்து தண்ணீருக்காக தாங்கள் படும் பாட்டை புலம்பிவிட்டு செல்வார்கள்.<br /><br />சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் பேசிப்பார்த்தார். முடிஞ்சவரைக்கும் தண்ணியை மக்களுக்கு கொடுக்கறோம். இதுக்கு மேல இருந்தாதானே தரமுடியும்? என்றார்கள். உடனே தன் சொந்தப் பணத்தை செலவு செய்து தொகுதி முழுக்க லாரிகளில் தினமும் சப்ளை செய்தார் அவர். ஒருநாள் இருநாள் அல்ல. அடுத்து மழைக்காலம் வந்து தண்ணீர் சப்ளை சீராகும் வரை கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு இந்தப் பணியை செய்துக் கொண்டிருந்தார்.<br /><br />அரசாங்கத்தாலேயே முடியாத வேலையை தனிநபராக செய்த அவர் இன்றளவும் அப்பகுதி மக்களால் தெய்வமாக போற்றப்படுகிறார்.<br /><br /><br /><b><span class="Apple-style-span" style="font-size:large;">மு</span></b>ன்னாள் முதல்வர் அப்பகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, அவரது முயற்சியில் கட்டப்பட்ட காய்கறி மார்க்கெட் அது. மார்க்கெட் வந்துவிட்டாலே அதைசார்ந்து நடைபாதை வியாபாரிகளும் உருவாகிவிடுவது வழக்கமான ஒன்று. அந்த மார்க்கெட்டை சுற்றிலும் நூற்றுக்கணக்கான நடைபாதை வியாபாரிகள் உருவாகிவிட மார்க்கெட்டில் கடை வைத்திருந்த கடை முதலாளிகள் பிரச்சினை செய்ய ஆரம்பித்தார்கள்.<br /><br />மார்க்கெட்டை கட்டித் தந்த அந்த சட்டமன்ற உறுப்பினர் அப்போது முதல்வராக இருந்தார். நடைபாதை வியாபாரிகள் முழுக்க அவரது கட்சிக்காரர்கள் என்பதால் மார்க்கெட் முதலாளிகளால் இவர்களை அரசியல்ரீதியாக அசைக்க முடியவில்லை. அரசியல் செயலிழக்கும் நேரங்களில் அதிகாரிகளே முதலாளிகளுக்கு துணை. அப்பகுதி காவல்நிலைய அதிகாரிகளோடு பேசினார்கள். தரவேண்டியதை தந்தார்கள். இதைத் தொடர்ந்து தினமும் நடைபாதை வியாபாரிகள் மீது அதிகாரப்பூர்வமான வன்முறை தொடர ஆரம்பித்தது.<br /><br />ஐந்துக்கும், பத்துக்கும் தினமும் நடைபாதைகளில் கூவிக்கூவி விற்பவர்கள் அனாதைகள் ஆனார்கள். முதல்வரோ அயல்நாட்டு சிகிச்சைக்கு சென்றிருந்தார். எதிர்பாராவிதமாக இவர்களுக்கு ஆதரவாக காவல்துறையை எதிர்த்து போராட்டம் நடத்த வந்தவர் அப்பகுதியில் இருந்த பிரபலமான எதிர்க்கட்சிக்காரர்.<br /><br />பல பேரை சந்தித்தார். நடைபாதை வியாபாரிகளின் அவலத்தை கோட்டை வரை எதிரொலித்தார். காவல்துறை மேலதிகாரிகளை தினமும் பார்த்து பேசினார். ஒருவழியாக நடைபாதை வியாபாரிகளுக்கு நீதி கிடைத்தது. மார்க்கெட்டிற்குள் இருக்கும் கடைகளின் வியாபாரத்தை பாதிக்காதவாறு அவர்களுக்கு போதிய இடம் மார்க்கெட்டை சுற்றி வழங்கப்பட்டது.<br /><br />கட்சி பாகுபாடு பார்க்காமல் தங்கள் வாழ்வாதாரத்துக்கு வகை செய்த அந்த எதிர்க்கட்சிக்காரருக்கு ஏதாவது செய்யவேண்டுமே என்ற ஆவலில் வியாபாரிகள் சிலர் அவரிடம் கேட்டார்கள். “அண்ணே உங்களுக்கு என்ன வேணுமோ சொல்லுங்க. செய்யுறோம்”. அவர் பதிலளித்தார். “ஃபில்டர் வைக்காத ஒரே ஒரு சிகரெட்டு மட்டும் வாங்கிக் கொடுங்கப்பா. ஒரு வாரமா பேசிப்பேசி தொண்டை வரளுது”.<br /><br /><br /><b><span class="Apple-style-span" style="font-size: large;">இ</span></b>ன்றைய துணைமுதல்வர் அவர். பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக வேளச்சேரி பகுதி மக்களுக்கு அவர் பக்கத்து வீட்டுக்காரர். வேளச்சேரி செக்போஸ்ட் அம்மன் கோயிலை தாண்டி அவரது கார் வந்துகொண்டிருக்கிறது. கன்னிகாபுரம் பகுதியில் ஒரு வீட்டில் சாவு விழுந்திருக்கிறது. வாசலில் பிணத்தை வைத்து உறவினர்கள் கதறிக் கொண்டிருக்கிறார்கள். கார் கண்ணாடி வழியாக அவர் பார்க்கிறார். பால்மணம் மாறா குழந்தைகள் இருவரும் ஒரு இளம்பெண்ணும் கதறுவதை கண்டதுமே இறந்தவரின் மனைவியும், குழந்தைகளும் என்பதை உணர்கிறார். உடனே காரை நிறுத்தச் சொல்கிறார்.<br /><br />அந்த சாவு வீட்டுக்குச் சென்று ஆறுதல் சொன்னவர் அந்த இளைஞரின் திடீர் மரணம் பற்றி கேட்டறிகிறார். விதவையான அப்பெண்ணுக்கு அவர் மேயராக இருந்த மாநகராட்சியில் பணி உறுதி கொடுக்கிறார். தன்னுடைய உதவியாளரிடம் சொல்லி உடனடி பண உதவியும் தன் சொந்த செலவில் ஏற்பாடு செய்கிறார். இறந்தவர் வீட்டு வாசலில் பறந்து கொண்டிருந்தது எதிர்க்கட்சிக் கொடி.<br /><br /><br /><b><span class="Apple-style-span" style="font-size:large;">க</span></b>டந்த மாதம் செய்தித்தாள்களில் நீங்கள் வாசித்திருக்கலாம். ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்தில் இருந்து 96 பேர் தேர்வு பெற்றிருக்கிறார்கள். இவர்களில் 21 பேர் எஸ்.சி/எஸ்.டி வகுப்பை சேர்ந்தவர்கள். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக இத்தேர்வில் வெல்லுபவர்களில் அதிகமானவர்கள் தமிழர்கள். திடீரென எப்படி இது சாத்தியம்?<br /><br />ஐ.ஏ.எஸ். தேர்வில் வெல்ல இலவசப் பயிற்சி மையம் ஒன்றினை ஒரு அரசியல்வாதி, கட்சி/சாதி/வர்க்க பாகுபாடு எதுவுமின்றி நடத்திவருவதே இதற்கு காரணம். இதே அரசியல்வாதி சென்னை வேளச்சேரி பகுதியில் தன் கட்சித்தலைவி பெயரில் ஒரு தரமான இலவச திருமண மண்டபத்தையும் மக்களுக்காக நடத்தி வருகிறார். இந்த திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமணங்களில் பெரும்பாலும் அவருடைய எதிர்க்கட்சியை சார்ந்தவர்களுடையது. முதல் பத்தியில் நாம் சொன்ன அதே அரசியல்வாதி இவர்தான்.<br /><br /><br /><b><span class="Apple-style-span" style="font-size:large;">ந</span></b>ம் பதிவுகளில் மெசேஜ் இல்லை, மெசேஜ் இல்லையென்று நிறைய பேர் குறைபட்டுக் கொள்கிறார்கள். இந்தப் பதிவு சொல்லவரும் மெசேஜ் : அரசியல் உட்பட எதையுமே கட்டமைக்கப்பட்ட பொதுப்புத்தியின் ஒற்றைப் பார்வையில் மட்டுமே அணுகக் கூடாது.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-5859909568164023854?l=www.luckylookonline.com'/></div>யுவகிருஷ்ணாhttp://www.blogger.com/profile/04524693633714401444yuvakrishna@gmail.com0tag:blogger.com,1999:blog-25593973.post-49205481230689563812009-06-04T02:40:00.000+05:302009-07-18T02:42:03.804+05:30இடாகினிப் பேய்களும், நடைப்பிணங்களும்...இடாகினி என்பது தமிழ் சொல்லா? இடாகினி என்ற வார்த்தைக்கு சத்தியமாக என்ன பொருள் என்பது புரியவில்லை. ஆனாலும் மோகிணி என்று சொல்லுவதைப் போல இடாகினி என்று சொல்லுவதும் கவர்ச்சியாக, நாக்குக்கு இதமாக இருக்கிறது. இடாகினி இடாகினி என்று சொல்லிப் பாருங்கள். கேட்பவர்களின் காதுகளில் நிச்சயம் தேன் ஒழுகும். என்ன ஒரு அழகான வார்த்தை.<br /><br />கோபிகிருஷ்ணனின் வாழ்க்கை அவரது எழுத்தைப் போலில்லாமல் துயரமானதாக இருந்திருக்கக்கூடும். துயரமும், கொண்டாட்டமும் பொருளாதாரத்தை முன்னிறுத்தியே அமைகிறது. ஒரு அரசுசாரா சேவை நிறுவனத்தில் 750 ரூபாய் சம்பளத்தில் கோபிகிருஷ்ணன் என்னத்தை பெரியதாக கொண்டாடியிருக்க முடியும்? சிகரெட்டும், குடிப்பழக்கமும் இல்லாது இருந்திருந்தால் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பாரோவென்று நினைக்கத் தோன்றுகிறது.<br /><br />ஆனால் அவரது எழுத்து கொண்டாட்டம் நிறைந்தது. மற்றவர்களை எந்தளவுக்கு எள்ளல் செய்கிறாரோ, அதே அளவு சுயஎள்ளலும் செய்துகொள்கிறார். அடுத்தவர்களை வெறுக்கும் அளவுக்கு தன்னையும் வெறுத்துக் கொள்கிறார். அடுத்தவர்களை புகழும் அளவுக்கு தன்னையும் புகழ்ந்து கொண்டிருக்கிறார். அடுத்தவர்களை திட்டும் அளவுக்கு தன்னையும்... இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம். கோபிகிருஷ்ணனுக்கு வாய்த்த மனம் எல்லோருக்கும் வாய்ப்பது அரிது.<br /><br />‘இடாகினிப் பேய்களும், நடைப்பிணங்களும், உதிரி இடைத்தரகர்களும்!’ - குறுநாவலில் தலைப்பே ஒருவரி கதை மாதிரிதானிருக்கிறது. தலைப்பைப் பார்த்து மிரளாதே என்று முதல் பத்தியிலேயே நட்போடு ஆலோசனை கூறுகிறார். 28-09-1989 முதல் 24-03-1997 வரையிலான ஒரு மனிதரின் டயரிக்குறிப்புதான் இக்குறுநாவல். நாவலை எழுதுவதற்கான நியாயங்களாக கோபி குறிப்பிடுவதில் முக்கியமானது சமூகப்பணித்துறையில் பல கறுப்பு ஆடுகள் நுழைந்து கொண்டிருப்பது. மற்றொன்று, இந்த... என்ன சொல்வார்கள் அதை.. ஆம் கலாச்சாரம். இந்தக் கலாச்சாரம் என்ற வார்த்தை நெருடலாக இருப்பது மட்டுமின்றி இயல்பான உணர்வுகள் மீது ஒடுக்குமுறையை திணிக்கிறது. இப்படியே எழுதிக் கொண்டு போகிறார். கோபிகிருஷ்ணனின் புகைப்படம் எதையும் பார்த்ததில்லை நான். இந்நாவலை வைத்து அவரது உருவத்துக்கு என் மனதில் ஒரு பிம்பம் வரைந்து வைத்திருக்கிறேன். அனேகமாக அசோகமித்திரன் உடல்வாகோடு கூடிய பிம்பம் அது.<br /><br />நாவல் முழுக்க ஆங்காங்கே இறைந்து கிடக்கும் கோபியின் சுயபிரகடனங்களும் சுவாரஸ்யமானவை. ‘நான் நல்லவனா, கெட்டவனா என்பது பிரச்சினை இல்லை. இந்த அடைகள் தேவை இல்லாதவை. நான் வரம்புகள் அற்றவன். ஆனால் ஒன்றை நிச்சயம் சொல்லியாக வேண்டும். நீங்கள் எனக்கு கொடுக்கும் சுதந்திரங்களை தவிர்த்து வேறு சுதந்திரங்களை நான் என்றைக்கும் எடுத்துக் கொள்ளமாட்டேன்’<br /><br />நந்தன் இதழில் வெளிவந்திருந்த தந்தை பெரியாரின் கூற்று ஒன்றினை வாசித்தபோது இந்நாவலுக்கான அவசியம் கோபிக்கு ஏற்பட்டிருக்கிறது. ’நாட்டில் யோக்கியமான, உண்மையான பொதுத்தொண்டு ஸ்தாபனமே இல்லாமல் போய்விட்டது. எந்த ஸ்தாபனமும் யாரோ குறிப்பிட்ட ஒரு சிலர் பிழைக்க வேண்டும் என்பதல்லாமல் பொது மக்கள் நலனுக்காக ஏற்படவில்லை’. இந்தக் கூற்றை வாசிக்கும்போது அது எல்லா நிறுவனங்களுக்குமே பொருந்துகிறது. இதுவரை மதங்கள் உலகுக்கு தந்த எல்லா தீர்க்கதரிசிகளை விடவும் சிறந்தவர் தந்தை பெரியார்.<br /><br />கோபி பணிபுரிந்த அலுவலகம், அது அமைந்திருந்த சாலை, கட்டிடம், அறைகள், வராண்டா என்று விஸ்தாரமாக அஃறிணைகளில் தொடங்கி அவ்வலுவலகத்தில் பணியாற்றிய ஒவ்வொரு ஊழியரைப் பற்றியுமான அறிமுகத்தை தமிழ் வாசகனுக்கும், வாசகிக்கும் கொடுக்கிறார். ஹாலிவுட் படங்களில் கையாளப்படும் உத்தி இது. ஒரு படத்தின் இரண்டு மணி நேரத்தை மூன்று பாகங்களாகப் பிரித்துக் கொண்டு முதல் பாகத்தில் முழுக்க முழுக்க கேரக்டர் எஸ்டாபிளேஷன். அடுத்த பாகத்தில் கேரக்டர்களுக்கிடையேயான சிக்கலை, பிரச்சினைகளை உருவாக்குவது. மூன்றாவது பாகத்தில் சிக்கு எடுத்து சுபம். இடாகினி இந்த ஃபார்முலாவில் அச்சுபிசகாமல் பயணிக்கிறது. க்ளைமேக்ஸ் மட்டும் ஆண்ட்டி-க்ளைமேக்ஸ்.<br /><br />இன்று இணையத்தில் சாத்தியமாகியிருக்கும் ஹைப்பர்-லிங்க் முறையை ப்ரிண்ட் மீடியத்தில் பரிசோதித்து இந்நாவலில் வெற்றி கண்டிருக்கிறார் கோபி. ‘இணைப்பு-1ல் அந்தப் பரிசோதனை ஓர் அற்புதமான உளவியல் ஆவணம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது, புது எழுத்துவில் வெளியாகி மானிட வாழ்வு தரும் ஆனந்தம் தொகுப்பில் இடம்பெற்றுள்ள இலியும் வழியும் புறப்பாடும் தெறிப்பும் என்ற படைப்பு ஆகும். இதை இணைப்பு 1-அ என்று வைத்துக் கொள்ளலாம்’ என்ற ரேஞ்சுக்கு நாவல் முழுக்க ஒன்பது இணைப்புகள். நல்லவேளையாக அவற்றை புது எழுத்துவிலோ, கணையாழியிலோ, கோபியின் தொகுப்புகளிலோ தேடிப்படிக்கும் அசாதாரமாண வேலையை வைக்காமல் நூலின் பிற்பகுதியிலேயே பதிப்பகத்தார் இணைத்திருக்கிறார்கள்.<br /><br />இதை புனைவு என்றோ, என் சொந்தக்கதை என்றோ எப்படி உனக்குத் தோன்றுகிறதோ அப்படி எடுத்துக்கொள் என வாசகனுக்கு சுதந்திரத்தை அவர் தந்துவிட்டாலும், அந்த சுதந்திரத்தை எடுத்துக்கொள்ள வாசகன் தயாரில்லை. இதைப் புனைவு என்று யாருமே நினைக்கமுடியாத அளவுக்கு அனுபவித்தால் மட்டுமே எழுதியிருக்கக்கூடிய உயிரோட்டமான எழுத்துகள். இப்படைப்பின் நாயகன் கோபி என்றால், நாயகி அவரோடு பணிபுரிந்த விக்டோரியா சமாதானம். மெல்லிய ரொமான்ஸும் உண்டு. சமாதானம் குறித்து எழுதும்போது கோபியின் பேனா நிறைய ஜொள்ளு விடுகிறது. பெண்களுக்கு ஏதாவது பரிசளிக்க வேண்டுமென்றால் பேண்டீஸும், ப்ராவும்தான் கோபியின் சாய்ஸ்.<br /><br />நூலாசிரியரின் பலமே புரியும்படி எழுதுவது. தமிழில் வன்மையான வார்த்தைகள் நிறைய உண்டென்றாலும் வாசிக்கும் எல்லோருக்கும் புரியும் வார்த்தைகளையே பயன்படுத்துகிறார். சிற்றிலக்கியம் என்ற பெயரில் வாசகனுக்கு பூச்சாண்டி காட்டவில்லை. இவ்வகையிலும் கோபியையும், சாருவையும் நிறைய ஒப்பிட முடிகிறது. நண்பர் என்ற அடிப்படையில் சாருவுக்கு கோபியின் இன்ஃப்ளூயன்ஸ் எழுத்தில் நிறைய இருக்கக்கூடும் என யூகிக்கிறேன். கோபியின் இடாகினியும், சாருவின் ராஸலீலாவும் பணிசார்ந்த அனுபவங்கள் என்ற அடிப்படையில் ஒரே தளத்தில் இயங்கும் படைப்புகள். இருவருமே குமாஸ்தாப்பணியை திறம்பட செய்தவர்கள். அப்பணியை வெறுத்தவர்கள். நரகத்தில் இருந்ததைப் போல உணர்ந்தவர்கள் பணியில் இருந்து வெளிவந்ததை விடுதலையாக கொண்டாடியவர்கள். அதே நேரத்தில் இவர்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அந்தரங்க வெளிப்பாடு வாசகனுக்கு கிசுகிசு படிக்கும் போதையையும் ஏற்றுகிறது.<br /><br />நூல் சொல்லும் கதையைப் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. படிக்க விரும்புபவர்களுக்கு அது ஸ்பாய்லர் ஆகிவிடும். ஆனால் மாறுபட்ட சுகமான வாசிப்பனுபவத்துக்கு இடாகினி நிச்சய உத்தரவாதம் அளிக்கிறாள் என்று மட்டும் உத்தரவாதம் அளிக்க இயலும்.<br /><br /><br /><a href="http://1.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SijMaMmmGHI/AAAAAAAACN8/-O6KnFu7Bwk/s1600-h/Idagini.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 282px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SijMaMmmGHI/AAAAAAAACN8/-O6KnFu7Bwk/s400/Idagini.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5343745708306864242" /></a>நூலின் பெயர் :<span style="font-weight:bold;"> இடாகினிப் பேய்களும், நடைப்பிணங்களும், உதிரி இடைத்தரகர்களும்!</span><br /><br />நூல் ஆசிரியர் : <span style="font-weight:bold;">கோபிகிருஷ்ணன்</span><br /><br />விலை : <span style="font-weight:bold;">ரூ.40/-</span><br /><br />பக்கங்கள் : <span style="font-weight:bold;">128</span><br /><br />வெளியீடு : <span style="font-weight:bold;">தமிழினி,</span><br />342, டி.டி.கே. சாலை, சென்னை-14<br /><br /><br /><span style="font-weight:bold;">கோபிகிருஷ்ணனின் பிற படைப்புகள் :</span><br /><br />1) ’ஒவ்வாத உணர்வுகள்’ (சிறுகதைகள்) 1986 - சிட்டாடல் வெளியீடு<br /><br />2) ’உணர்வுகள் உறங்குவதில்லை’ (குறுநாவல்கள்) 1989 - சரவணபாலு பதிப்பகம்<br /><br />3) சஃபி, லதா ராமகிருஷ்ணன் - இவர்களுடன் இணைந்து எழுதிய ’கொஞ்சம் அவர்களைப் பற்றி.. மனோதத்துவம் ஓர் அறிமுகம்’ (கட்டுரைகள்) 1992 - சவுத் ஏஷியன் புக்ஸ்<br /><br />4) சஃபியுடன் இணைந்து எழுதிய ‘சமூகப்பணி, அ-சமூகப்பணி, எதிர்-சமூகப்பணி’ (ஒரு நீண்ட கட்டுரை) 1992 - முன்றில் வெளியீடு<br /><br />5) ‘உள்ளேயிருந்து சில குரல்கள்’ (மனநோய்கள் குறித்த புத்தகம்) 1993 - முன்றில் வெளியீடு<br /><br />6) ’முடியாத சமன்’ (சிறுகதைகள்) 1998 - ஸ்நேகா வெளியீடு<br /><br />7) ‘டேபிள் டென்னிஸ்’ (குறுநாவல்) 1999 - தமிழினி<br /><br />8) ‘தூயோன்’ (சிறுகதைகள்) 2000 - தமிழினி<br /><br />9) ‘மானிட வாழ்வு தரும் ஆனந்தம்’ (சிறுகதைகள்) 2001 - தமிழினி<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-4920548123068956381?l=www.luckylookonline.com'/></div>யுவகிருஷ்ணாhttp://www.blogger.com/profile/04524693633714401444yuvakrishna@gmail.com0tag:blogger.com,1999:blog-25593973.post-82632824202503508222009-05-31T02:46:00.000+05:302009-07-18T02:47:21.184+05:30புதுப்பேட்டை!<a href="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SNJDJMWRKsI/AAAAAAAABSk/0O-8gJgoDas/s1600-h/pudupet1.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SNJDJMWRKsI/AAAAAAAABSk/0O-8gJgoDas/s400/pudupet1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5247330341052558018" /></a><br />செல்வராகவன் இயக்கிய படமல்ல. சென்னையின் டெட்ராய்ட். அண்ணாசாலையிலிருந்து தாராப்பூர் டவர்ஸ் அருகே லெஃப்ட் அடித்து நேராக போனால் சிந்தாதிரிப்பேட்டை. பாலத்தில் இடதுபக்கமாக திரும்பினால் புதுப்பேட்டை. இருசக்கர வாகன நட்டு போல்ட்டிலிருந்து மெர்சிடிஸ் பென்ஸ் காரின் ஸ்பேர் பார்ட்ஸ் வரை கிடைக்குமிடம்.<br /><br />கிட்டத்தட்ட அறுபதாண்டுகள் பழமை வாய்ந்த மோட்டார் மார்க்கெட் இது என்கிறார்கள். ஆயிரம் கடைகள் இருக்கிறது. எல்லாக் கடைகளுமே இரும்புக் குப்பைகளால் நிரப்பப் பட்டிருக்கிறது. இந்த பகுதிக்கு ‘ஆட்டோ நகர்' என்று பெயர் வைக்க வேண்டுமென்பது இப்பகுதி வியாபாரிகளின் நீண்டநாள் கோரிக்கை. கடை வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் ‘பாய்'கள். ஆங்காங்கே ‘இன்ஷா அல்லா' அதிகமாக கேட்கமுடிகிறது.<br /><br />பொதுவாக இந்த இரண்டு பத்திகளையும் வாசிப்பவர்களுக்கு விவகாரமாக எதுவும் தெரிந்திருக்காது. பொல்லாதவன் படத்தில் தனுஷின் பைக் தொலைந்துவிடும் அல்லவா? உடனே தனுஷ் போய் தேடும் இடம் புதுப்பேட்டை. மண்ணில் புதைக்கப்பட்ட பல்சர் ஒன்றை காட்டுவார்களே? அந்த இடம் தான் புதுப்பேட்டை. சென்னையிலும், புறநகரிலும் எந்த பைக் தொலைந்தாலும் எல்லோரும் ஓடிப்போய் தேடுவது புதுப்பேட்டையில் தான். தேடிய எவருக்குமே இதுவரை பைக் திரும்ப கிடைத்ததாக சரித்திரமில்லை. பத்தே நிமிடத்தில் ஒரு பைக்கை பார்ட் பார்ட்டாக பிரித்து போடக்கூடிய வல்லுநர்கள் நிறைந்த இடம் இது.<br /><br />சீப்பாக காருக்கும், டூவீலருக்கும் ஸ்பேர் பார்ட்ஸ் ஏதாவது வேண்டுமென்றால் தாராளமாக புதுப்பேட்டைக்கு போகலாம். செகண்ட் ஹேண்டில் நீங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத விலைக்கு எதுவேண்டுமானாலும் கிடைக்கும். அந்த காலத்து பேபி ஸ்கூட்டருக்கான ஸ்பேர் பார்ட்ஸ் கூட இன்னமும் இங்கே கிடைக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிற்கான கார் ஆடியோ செட்டை நம் நண்பர் ஒருவர் இங்கே இருபதாயிரத்துக்கு முடித்துக்கொண்டு வந்தார் என்றால் நம்ப கடினமாக தானிருக்கும்.<br /><br /><a href="http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SNJDNufU6RI/AAAAAAAABSs/0nAO1NtY9y4/s1600-h/pudupet2.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SNJDNufU6RI/AAAAAAAABSs/0nAO1NtY9y4/s400/pudupet2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5247330418936834322" /></a>இங்கே ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொன்று ஸ்பெஷல். டூவீலர் ஸ்பேர் பார்ட்ஸ் வாங்க வெங்கடாச்சல நாயக்கன் தெரு. லைட், இண்டிகேட்டர், மீட்டர் போன்ற எலக்ட்ரிக்கல் சமாச்சாரங்களுக்கு வெங்கடாச்சல ஆசாரி தெரு. கார், வேன் ஸ்பேர்களுக்கு ஆதித்தனார் சாலை. ஒட்டுமொத்தமாக பாடியே (சேஸிங் வகையறாக்கள்) வேண்டுமானால் கூவம் சாலை.<br /><br />புதுப்பேட்டைக்குள் நுழைந்ததுமே ‘இன்னா சார் வோணும்? சொல்லு சார். எதா இருந்தாலும் கொடுத்துடலாம்' என்று எதிர்படும் எல்லா கடைக்காரர்களுமே சொல்லி வைத்தாற்போல கேட்பார்கள். நான் போன அன்று இன் செய்த சட்டையை எடுத்து விட்டேன், தலையை கலைத்து விட்டுக் கொண்டேன். வாயில் ஒரு மாணிக்சந்த் போட்டு, இல்லாத கடுமையை ஒரு ‘கெத்'துக்காக முகத்தில் வைத்துக்கொண்டேன். மூஞ்சை பார்த்து ஏமாளி என்று முடிவுகட்டிவிடக்கூடாது இல்லையா?<br /><br />“சிடி டான் டேங்க் வேணும்ணா. இருக்கா?”<br /><br />”நேரா போய் ரெண்டாவது ரைட் அடி”<br /><br />ரெண்டாவது ரைட்டு ரொம்ப குறுகலானது. டூவீலர் போவதே கடினம். இருபக்கமும் ஏராளமான வண்டிகள் கடைகள் முன்பாக நிறுத்தப்பட்டிருக்கும். தெரியாத்தனமாக ஒரு ஆட்டோக்காரர் உள்ளே நுழைந்துவிட்டாலும் போதும். செம்மொழியில் அர்ச்சனை கிடைக்கும். “த்தா.. பிஸ்னஸ் அவர்லே எவண்டா மயிரு மாதிரி வண்டியை உள்ளே எட்தாந்தது?” என்பார்கள்.<br /><br />ரெண்டாவது ரைட்டு அடித்தால் இருபுறமும் பெட்ரோல் டேங்குகள் தோரணமாக கட்டிவிடப்பட்டிருந்தன. பல்சர், யூனிகார்ன் என்று லேட்டஸ்ட் ப்ரீமியர் பைக்குகளின் டேங்குகளும் கிடைக்கிறது. அப்படியே புத்தம்புதுசாக ஒரிஜினல் பெயிண்டின் கருக்குலையாமல். ஒவ்வொரு கடையாக ”டாங்க் இருக்கா?” என்று கேட்டால் “எண்ணாண்டே டான் டேங்க் இல்லை, ஆனா ஆறாவது கடையிலே இருக்கும்” என்று தன் சகப்போட்டியாளர்களுக்கே பிஸினஸ் பிடித்துக் கொடுக்கிறார்கள். ஆறாவது கடையில் ஒரு பாய் உட்கார்ந்திருந்தார்.<br /><br />”சிடி டான் டேங்க் வேணும்னா. இருக்கா?”<br /><br />“இருக்குண்ணா”<br /><br />வண்டியை விட்டு இறங்கவே கொஞ்சம் பயமாகதானிருக்கிறது.<br /><br />“டேங்கு காட்டுண்ணா”<br /><br />“எறங்கி வாண்ணா. மேல இருக்கு. மாடிக்கு போ எடுத்து கொடுப்பாங்க”<br /><br />வண்டியை ஓரமாக நிறுத்தி, சைட் லாக் போட்டால், ”சைட் லாக் போடாதே” என்கிறார். கொஞ்சம் தயங்கியதுமே புரிந்துகொண்டவராக “புதுப்பேட்டைலே மட்டும் எவன் வண்டியும் திருடுபோவாது!” என்றார்.<br /><br />தயங்கியபடியே வண்டியை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே மாடிக்கு சென்றேன். தரையே தெரியாத அளவுக்கு வண்டிகளின் ஸ்பேர் பார்ட்ஸ். மேலேயும் ஒரு பாய்.<br /><br />“சிடி டான் டேங்க் வேணும்னே”<br /><br />“இன்னா கலரு”<br /><br />“பிளாக்”<br /><br />ஒரு பையனை அனுப்பி “சாருக்கு ஒரு டாங்க் எடுத்துக் கொடு!” என்றார்.<br /><br />பையன் உள்ளே எங்கேயோ அழைத்துப் போனான். சில படிக்கட்டுகள் ஏறி, சில படிக்கட்டுகள் இறங்கி சந்து மாதிரி போய்க்கொண்டே இருக்கிறது. கீழே விட்ட வண்டி என்னாகுமோ என்ற பயம் வேறு. ஒரு அறைக்கதவை திறந்து லைட் போட்டான். உள்ளே குறைந்தபட்சம் நூறு, நூற்றி ஐம்பது பெட்ரோல் டேங்குகளாவது இருந்திருக்கும். கவரில் சுற்றிவைக்கப்பட்ட ஒரு டாங்கை கொடுத்து “போய் அண்ணன் கிட்டே ரேட் பேசிக்கோ!” என்றான் அந்தப் பையன்.<br /><br />“என் வண்டிலே வயலட் ஸ்டிக்கரு. இது பிரவுனா இருக்கே?”<br /><br />“இங்கல்லாம் அப்படித்தான். கிடைக்கிறதை (?) தான் கொடுக்க முடியும்”<br /><br />வேறு வழியின்றி அண்ணனிடம் போய் ரேட் பேசினேன்.<br /><br />“எவ்ளோண்ணா”<br /><br />“கொடுக்குறதை கொடு”<br /><br />“பரவால்லை ரேட்டு சொல்லிக்கொடுண்ணா” - வெளியே நின்ற வண்டி என்ன கதியோ?<br /><br />“ரெண்டாயிரம் கொடு”<br /><br />“புதுசே அவ்ளோ தாண்ணா”<br /><br />“புதுசு மூவாயிரத்து இருநூறு இன்னிக்கு ரேட்டு. எங்களாண்டியேவா தம்பி?”<br /><br />நான் ஐநூறில் ஆரம்பித்து ஆயிரத்து நூறுக்கு வந்தேன். அவர் நூறு, இருநூறாக குறைத்துக் கொண்டே வர நான் இருபத்தைந்து, ஐம்பதாக ஏறிக்கொண்டே வந்தேன். கடைசியாக ஆயிரத்து இருநூறில் முடிந்தது. அச்சு அசலாக புது டேங்க். ஷோருமில் வாங்கியிருந்தால் எனக்கு இரண்டாயிரம் ரூபாய் கூடுதல் ஆகியிருக்கும்.<br /><br />டேங்கை எடுத்துக்கொண்டு வேகவேகமாக தாவிக்குதித்து என் வண்டிக்கு ஓடினால்.. நல்லவேளை எதுவும் ஆகவில்லை. கீழே கடையில் இருந்த பாய் புன்னகைத்தார்.<br /><br />”வேறு எது வேணும்னாலும் வாங்க. ஊடு எங்கேருக்கு?”<br /><br />“நந்தனம்னே, நன்றி. கெளம்புறேன்”<br /><br />வண்டியை வெளியே எடுத்துக் கொண்டுவரும்போது தெருமுனையில் ஒரு புது ஸ்பெளண்டரை அக்கு அக்காக பிரித்துக் கொண்டிருந்தார்கள். எதிர்காலத்தில் எவனுக்காவது ஸ்பெளண்டர் டேங்க் வேண்டுமென்றால் பாய் கடையில் சகாய விலைக்கு கிடைக்கும்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-8263282420250350822?l=www.luckylookonline.com'/></div>யுவகிருஷ்ணாhttp://www.blogger.com/profile/04524693633714401444yuvakrishna@gmail.com0tag:blogger.com,1999:blog-25593973.post-72766080318834027792009-05-30T02:47:00.000+05:302009-07-18T02:48:22.274+05:30கிம்-கி-டுக்!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SiESrprM2FI/AAAAAAAACL8/Bl50d9N4wH4/s1600-h/kim+ki+duk.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SiESrprM2FI/AAAAAAAACL8/Bl50d9N4wH4/s400/kim+ki+duk.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5341571174168844370" /></a><br />தான் எடுத்த முதல் படத்தை பத்திரிகையாளர்களுக்கு போட்டு காட்ட விரும்பினார் அந்த இயக்குனர். பத்திரிகையாளர் பலரையும் தானே போன் போட்டு அழைத்தார். மூத்தப் பத்திரிகையாளர்கள் சிலரை நேரில் சென்றும் அழைத்தார். சாமானியத் தோற்றம் கொண்ட அந்த இயக்குனரை ஏனோ பத்திரிகையாளர்கள் அவ்வளவாக மதிக்கவில்லை. பத்திரிகையாளர் காட்சிக்கு வந்தவர்களும் கூட படம் பற்றி சுமாராகவே எழுதினார்கள்.<br /><br />ஆனால் அதே படம் பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது, ‘எங்கள் கிம்-கி-டுக்’ என்று கொரிய பத்திரிகைகள் கொண்டாடின. அந்தப்படம் 1996ல் வெளிவந்த க்ரோகோடைல். சியோலின் ஹான் ஆற்றின் கரையில் வாழும் ஒருவன் தற்கொலைக்கு முயற்சிக்கும் பெண்ணை காப்பாற்றுகிறான். அவளோடு வன்புணர்வு கொள்கிறான். மோசமாக நடத்துகிறான். ஒருக்கட்டத்தில் இருவருக்குமிடையே அன்னியோன்யம் ஏற்படுகிறது. உறவுகளுக்கு இடையேயான முரணை இப்படம் வெகு அழுத்தமாக சுட்டிக் காட்டுகிறது.<br /><br />கிம்-கி-டுக்-கின் முதல் படத்துக்கு கிடைத்த சர்வதேச வரவேற்பு, அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகளை வாரி வழங்கியது. வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்களை குறைந்த செலவில் தரமாக எடுக்கத் தொடங்கினார். 2000மாவது ஆண்டு வெளிவந்த அவரது திரைப்படமான ’தி ஐல்’ (The Isle) வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட, ஐரோப்பா கிம்-கி-டுக்கை தத்தெடுத்துக் கொண்டது.<br /><br />யார் இந்த கிம்-கி-டுக்?<br /><br />1960ல் பிறந்த கிம், ஒன்பது வயதாக இருந்தபோது அவரது குடும்பம் தலைநகர் சியோலுக்கு இடம்பெயர்ந்தது. பதினேழு வயதாக இருக்கும்போது பள்ளிப்படிப்பினை நிறுத்திக் கொண்டவர் ஆலைகளில் பணியாற்றத் தொடங்கினார். அதன்பின்னர் வயிற்றுப் பாட்டுக்காக பல வேலைகளை கிம் செய்யவேண்டியிருந்தது. ஒருக்கட்டத்தில் பாதிரியாராகும் எண்ணத்தில் தேவாலயம் ஒன்றில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார்.<br /><br />இலக்கின்றி வாழ்ந்தவர் கிம். திடீரென ஒருநாள் அதுவரை தான் சேமித்து வைத்திருந்த மொத்தப் பணத்தையும் எடுத்துக்கொண்டு பிரான்சுக்கு பறந்தார். சிறந்த ஓவியரான கிம் தான் வரைந்திருந்த ஓவியங்களை பாரிஸ் தெருக்களில் பரப்பி விற்பனைக்கு வைத்தார். சொற்ப வருமானம் வந்தது. அதைவைத்து வயிற்றுப்பசியை தீர்த்துக் கொண்டார். இந்த காலக்கட்டத்தில் தான் வாழ்க்கையிலேயே முதன்முதலாக திரையரங்கம் சென்று படம் பார்த்ததாக பின்நாளில் பேட்டியொன்றில் குறிப்பிடுகிறார். சைலன்ஸ் ஆஃப் தி லேம்ப்ஸ் படம் பார்த்தபிறகு தூக்கமின்றி அவதிப்பட்டாராம்.<br /><br />போன பாராவில் இலக்கின்றி வாழ்ந்தவர் இந்த பாராவில் தனக்கொரு இலக்கினை நிர்ணயித்துக் கொண்டு கொரியாவுக்கு திரும்புகிறார். நாடகங்களுக்கு கதை, வசனம் எழுதினார். ’ஏ பெயிண்டர் அண்ட் க்ரிமினல் கண்டெம்ட் டூ டெத்’ என்ற அவரது படைப்புக்கு 93ஆம் ஆண்டு ’எஜூகேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்க்ரிப்ட் ரைட்டிங்’ நிறுவனத்தின் விருது கிடைத்தது. இதையடுத்து 94ஆம் ஆண்டில் கொரிய தயாரிப்பாளர் கவுன்சிலிடம் ‘டபுள் எக்ஸ்போஷர்’ என்ற படைப்புக்காக மூன்றாவது பரிசும், 95ஆம் ஆண்டில் ’ஜேவாக்கிங்’ என்ற படைப்புக்காக முதல் பரிசும் வென்றார். கிம்-கி-டுக்-குக்கு கொரிய சினிமா கதவினை அகலமாக திறந்து காத்திருந்தது.<br /><br />’தி ஐல்’ படத்துக்குப் பிறகு ஐரோப்பாவில் ஒரு முக்கியமான படைப்பாளியாக கிம் கருதப்பட்டாலும், அவரது தாய்நிலத்தில் விமர்சகர்கள் கிம்மினை குதறிக் கொண்டிருக்கிறார்கள். அவர் ஒரு விலங்கென்றும், சைக்கோவென்றும், தருதலை படத்தயாரிப்பாளர் என்றும் தூற்றப்பட்டார். பத்திரிகையாளர்கள் நேரடியாகவே தங்கள் பத்திரிகைகளில் இதுபோன்ற வார்த்தைகளில் விமர்சிக்க, “இனி எந்த கொரியப் பத்திரிகையாளனுடனும் பேசப்போவதில்லை” என்று காட்டமாக சபதமெடுத்தார் கிம். வெகுவிரைவிலேயே அந்த சபதத்தை வாபஸும் வாங்கிக் கொண்டார்.<br /><br />கலைப்பட லெவலுக்கு எடுத்துக் கொண்டிருந்ததால் கொரிய ரசிகர்கள் கிம்மை கண்டுகொள்ளாமலேயே இருந்தார்கள். 2002ல் வெளிவந்த ’பேட் கை’ திரைப்படம் கிம்மையும் கொரியாவின் வசூல்ராஜா ஆக்கியது. வசூலில் வென்ற படம் என்றாலும் தரத்தில் எந்த குறையையும் வைக்கவில்லை கிம். பெர்லின் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது.<br /><br />அடுத்தடுத்து வெளியான படங்கள் சர்வதேச அங்கீகாரங்களை வென்று குவித்தாலும், ஏனோ ’பேட் கை’ அளவுக்கு கொரியர்களை கவரவில்லை. சமூகத்தின் விளிம்புநிலை மாந்தர்களின் வாழ்க்கையை யதார்த்தம் குன்றாமல் படமாக்குவது கிம்மின் பாணி. அமெரிக்க மோகத்தில் அலையும் கொரியர்கள் எதிர்பார்க்கும் ஃபேண்டஸி அவரிடம் குறைவு. ’ஸ்ப்ரிங், சம்மர், ஃபால், விண்டர்.. அண்ட் ஸ்ப்ரிங்’ என்ற அவரது திரைப்படம் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. 2004ஆம் ஆண்டு ’சமாரிடன் கேர்ள்’ திரைப்படம் பெர்லினிலும், ’3-அயன்’ வெனிஸிலும் சிறந்த இயக்கத்துக்கான விருதுகளை அள்ளியது.<br /><br />மிகக்குறைவான வசனங்களோடு, விஷூவலாகவே படங்களை எடுப்பதை கிம் பாணியாக கொண்டிருக்கிறார். வசனங்கள் குறைவு என்பதாலோ என்னவோ அயல்நாட்டு ரசிகர்களை கிம் மிக சுலபமாக அடைகிறார். சர்வதேசநாடுகளில் கொரியாவின் சிறந்த இயக்குனராக கிம்-கி-டுக் மதிக்கப்பட்டாலும், சொந்தநாட்டில் சர்ச்சைக்குரியவராகவே பார்க்கப்படுகிறார். அடிக்கடி ஏதாவது எடக்குமடக்காக அறிக்கை விட்டு மாட்டிக்கொள்வது கிம்மின் வழக்கம்.<br /><br />“ஏராளமான சர்வதேச விருதுகளை குவித்ததற்குப் பின்னால் கொரிய ரசிகர்களை சர்வதேச ரசனைக்கு மாற்ற முரட்டுத்தனமாக முயன்றேன். மக்கள் இதற்காக என்னை மன்னிக்க வேண்டும்” - கிம் விடுத்த ஸ்டேட்மெண்டுகளில் ஒன்று இது. கிம் இப்போதும் சொல்கிறார். ”என்னுடைய அடுத்தப்படம் கொரியாவில் திரையிடப்படாவிட்டாலும், எனக்கொன்றும் கவலையில்லை!”<br /><br /><i><span class="Apple-style-span" style="color:#666666;">பின்குறிப்பு : உலகப்படங்கள் பற்றியும், உலகப்பட இயக்குனர்கள் பற்றியும் பேச அப்படங்களை பார்த்தவர்களால் மட்டும்தான் எழுதமுடியும், பேசமுடியும் என்ற நிலை இன்றில்லை. தகவல் தொழில்நுட்பப் புரட்சியால் உலகம் சுருங்கிக் கொண்டிருக்கிறது. தகவல்களை பெறுவது இன்றைய தேதியில் டீக்கடைக்கு போய் டீ வாங்கிக் குடிப்பதைப் போல சுலபமானது. உலகப்பட ரசிகர்கள், வெறியர்கள் என்று ஃபிலிம் காட்டிவரும் பலரும் எப்படி எழுதுகிறார்கள் என்ற பரிசோதனையை நானே செய்துப் பார்த்ததின் விளைவுதான் மேற்கண்ட கட்டுரை. நான் கிம்-கி-டுக்-கின் ஒரு படத்தை கூட பார்த்ததில்லை. உலகப்படங்கள் குறித்த அறிமுகத்தை தமிழ்வாசகர்களுக்கு பெருமளவில் தந்துவரும் சாருவின் மூலமாகவே அவர் அறிமுகம். உலகப்படங்களை பார்க்க வேண்டுமென்ற ஆவல் இருந்தாலும் பொறுமையும், சூழலும் அமைவதில்லை.<br /><br />என்னைப்போன்ற அறிவிலிகளுக்காக சென்னைப்பதிவர்கள் மாதம் ஒரு உலகப்படம் திரையிடும் திட்டத்தை கொண்டுவந்திருக்கிறார்கள். முதல் படமாக கிம்-கி-டுக்கின் ’ஸ்பிரிங், சம்மர், பால், விண்டர்... அண்ட் ஸ்பிரிங்’ திரைப்படம் ஜூன் 7, ஞாயிறு அன்று சரியாக மாலை நான்கு மணிக்கு திரையிடப்படுகிறது. இடம் : ஸ்ரீ பார்வதி ஹால், எல்டாம்ஸ் ரோடு, சென்னை.<br /><br />மேலும் விபரங்களுக்கு : </span></i><a href="http://naayakan.blogspot.com/2009/05/blog-post_29.html"><i><b><span class="Apple-style-span" style="color:#FF0000;">பைத்தியக்காரன் அவர்களின் விரிவான பதிவு! </span></b></i></a><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-7276608031883402779?l=www.luckylookonline.com'/></div>யுவகிருஷ்ணாhttp://www.blogger.com/profile/04524693633714401444yuvakrishna@gmail.com0tag:blogger.com,1999:blog-25593973.post-50069087511074315952009-05-28T02:49:00.000+05:302009-07-18T02:50:31.667+05:30ஆன்மீகம்!<a href="http://1.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SEoSeQoD4LI/AAAAAAAAAyA/J-XVvRwJT60/s1600-h/amman.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SEoSeQoD4LI/AAAAAAAAAyA/J-XVvRwJT60/s400/amman.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5208996230075769010" /></a><br />“அண்ணே! 'ஆன்மீகம்'னா என்ன?”<br /><br />“தம்பி! 'ஆன்மீகம்'னா வைப்ரேஷன், அதிர்வுகள்!”<br /><br />“புரியவில்லை. கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?”<br /><br />“நம்மை ஏதாவது ஒரு விஷயம் ஈர்க்கும்போது நம் உடலளவிலும், மனதளவிலும் சில அதிர்வுகள் ஏற்படும்!”<br /><br />“அதுமாதிரி நான் உணர்ந்ததில்லையே?”<br /><br />“கண்டிப்பாக எப்போதாவது உணர்ந்திருப்பாய். உனக்கு தெரிந்திருக்காது. அதீத மகிழ்ச்சியும், அதீத சோகமும் கூட இதுபோன்ற அதிர்வுகளை உன்னில் ஏற்படுத்தும்!”<br /><br />“சரி ஆன்மீக அதிர்வுகளை எப்படி உணர்வது?”<br /><br />“உனக்குள் தான் கடவுள் இருக்கிறார். உனக்கே திருப்தியான அளவில் நீ ஏதாவது பணியை செய்துமுடித்தால் அந்த அதிர்வுகள் ஏற்படலாம்!”<br /><br />“என் திறமையையும், புத்திக்கூர்மையையும் கொண்டு எனக்கான பணிகளை செய்கிறேன். இதில் கடவுள் எங்கு வருகிறார்?”<br /><br />“அந்த பணி செய்ய உன்னை தூண்டும் நெம்புகோல் தான் கடவுள். சில பேருக்கு தியானம் செய்யும்போது அதிர்வுகள் வரலாம், சில பேருக்கு கோயிலில் வழிபடும்போது அதிர்வுகள் ஏற்படலாம். அதிர்வு ஏற்பட்டாலோ அல்லது ஏற்படாவிட்டாலோ அதற்கெல்லாம் என்ன காரணம் என்றெல்லாம் ஆராய்ந்து சொல்லமுடியாது!”<br /><br />“எனக்கு தியானம் செய்யத் தெரியாது. நான் கோயிலுக்கு வந்தால் எனக்குள் அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா?”<br /><br />“யார் கண்டது? ஒருவேளை ஏற்படலாம். இப்போது அம்மன் கோயிலுக்கு போய்க் கொண்டிருக்கிறேன். என்னுடன் வருகிறாயா? உன்னால் உனக்குள் இருக்கும் ஆன்மீகத்தை அங்கே உணரமுடிகிறதா என்று சோதனை செய்து பார்ப்போம்”<br /><br />“சரி”<br /><br /><br />கோயிலில் நல்ல கூட்டம். ஆண், பெண்ணுக்கு தனித்தனி வரிசை. நிரூபிக்கப்படாத ஒரு சக்தியை கண்டு வணங்க இவ்வளவு பேர் வருகிறார்களா என்று அவனுக்கு ஆச்சரியம். தீபராதனை காட்டும்போது அம்மனின் கம்பீரமான எழிலில் அண்ணன் நெக்குறுகிப் போனார். அவரை அறியாமலேயே அவரது கண்களில் கண்ணீர் வழிந்தது. அம்மனை வழிபட்டு குங்குமம் வாங்கி நெற்றியில் இட்டு கோயில் பிரகாரத்தை சுற்றி வருகிறார்கள்.<br /><br />“கோயிலுக்கு வருவதே மன அமைதிக்காகவும், எதிர்காலம் குறித்த நம் கவலையை நம்மை வழிநடத்தும் சக்தியிடம் ஒப்படைப்பதற்காகவும் தான். கோயிலுக்கு வந்தவன் அயர்ச்சியோடு திரும்பக் கூடாது. கோயில் பிரகாரத்தில் சற்று ஓய்வெடுத்து உடலுக்கும், மனதுக்கும் எந்த பாரமுமில்லாமல் நிம்மதியாக திரும்ப வேண்டும் என்பது ஐதீகம். ஓரத்தில் அமரலமா?”<br /><br />கொடிமரம் தாண்டி விசாலமாக இருந்த மண்டபத்தில் இருவரும் அமர்ந்தார்கள்.<br /><br />“சிலிர்ப்போ, அதிர்வோ உனக்குள் வந்ததா?”<br /><br />“ஆம்!”<br /><br />ஆவலோடு, “இதுதான் ஆன்மீகம். முகத்தைப் பார்த்து உனக்கு சிலிர்ப்பு வந்ததா, இல்லை அம்மனின் அலங்காரத்தைப் பார்த்து உனக்கு அதிர்வு வந்ததா?”<br /><br />“பாதங்களை பார்த்து வந்தது”<br /><br />“பாதங்களைப் பார்த்தா? ம்... ஒவ்வொருவருக்கும் ஒரு மனம். எல்லா மனமும் ஒரே மாதிரி இயங்குவதில்லை”<br /><br />“மருதாணியிட்டு சிவந்த பாதங்கள், அப்பாதங்களில் வீற்றிருப்பதால் சற்றே நாணம் கொண்டு தானும் சிவந்துப் போன வெள்ளிக் கொலுசுகள்! கண்டதுமே உடலும், உள்ளமும் பூகம்பம் வந்தது போல அதிர்ந்தது”<br /><br />“என்ன சொல்கிறாய்? அம்மன் சிலைக்கு மருதாணியிட்டு சிவந்த பாதங்களா?”<br /><br />“நீங்கள் அம்மன் சிலையை சொல்கிறீர்களா? நான் எனக்கு எதிரில் இருந்த பச்சைத்தாவணி அணிந்த அம்மனை சொல்கிறேன்”<br /><br />“தம்பி! உனக்குள் அதிர்வை ஏற்படுத்தியிருப்பது ‘ஆன்மீகம்' அல்ல, ‘ஆண்மீகம்'. சுட்டுப் போட்டாலும் உனக்கு 'ஆன்மீகம்' வரவே வராது என்று உறுதியாக நம்புகிறேன்!”<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-5006908751107431595?l=www.luckylookonline.com'/></div>யுவகிருஷ்ணாhttp://www.blogger.com/profile/04524693633714401444yuvakrishna@gmail.com0tag:blogger.com,1999:blog-25593973.post-64371230473896572022009-05-25T02:50:00.000+05:302009-07-18T02:52:17.430+05:30இளையராஜா!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/ShuACoBhPfI/AAAAAAAACLM/wBI4kiPQxIY/s1600-h/ilaiyaraja.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/ShuACoBhPfI/AAAAAAAACLM/wBI4kiPQxIY/s400/ilaiyaraja.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5340002565769739762" /></a><br />வால்மீகி படவிழாவில் இளையராஜா பேசியதை கேட்டு எனக்கும் முதலில் அதிர்ச்சியாக இருந்தது. யாரையும் இவ்வளவு விட்டேத்தியாக மேடையில் அவர் பேசியதாக நினைவில்லை. சில மேடைகளில் சூடாகியிருக்கிறார். ஆனாலும் தனிப்பட்ட முறையில் பெயரையெல்லாம் சொல்லித் திட்டியதில்லை.<br /><br />மிஷ்கினைப் பற்றி பெரிய அபிப்பிராயம் எதுவும் எனக்கு கிடையாது. அவரது முதல் படம் மற்றவர்கள் சொல்லுமளவுக்கு ஆஹா, ஓஹோவென்றெல்லாம் எனக்கு படவில்லை. ’வாளமீனுக்கும்’ பாட்டால் தப்பித்தது. இரண்டாவது படமும் சுமார்தான். ஆனாலும் அவரது பேட்டிகளைப் பார்த்தால் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் மாதிரி பேசுவார்.<br /><br />கிட்டத்தட்ட தொண்ணூறு சதவிகிதம் யோகியாக மாறிவிட்ட இளையராஜா அவர் மீது கோபப்பட என்னதான் காரணம் இருக்கமுடியும்?<br /><br />மிஷ்கினின் நந்தலாலா படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படம் பற்றி பேசும்போதெல்லாம் இளையராஜாவைப் பற்றி தவறாமல் சொல்லிவந்தார் மிஷ்கின். சிலநாட்களாக இளையராஜாவின் பெயரை அவர் உச்சரிக்காதது போல தெரிந்தது. ஏதோ புகைச்சல் என்று அப்போதே யூகிக்க முடிந்தது. விசாரித்துப் பார்த்தால் இளையராஜாவை வற்புறுத்தி ஐந்து பாடல்கள் கேட்டு வாங்கியவர் படத்தில் இரண்டு பாடல்களை மட்டுமே பயன்படுத்திக் கொண்டதாக சொல்கிறார்கள். அதுகூட இயக்குனரின் சுதந்திரம்.<br /><br />இருப்பினும் இளையராஜாவுக்கு தெரியாமலேயே ‘ஏலிலோ’ என்ற நரிக்குறவப் பாடல் ஒன்றினை படத்தில் மிஷ்கின் சேர்த்ததாக சொல்கிறார்கள். அதாவது அப்படத்தின் இசையமைப்பாளருக்கு தெரியாமலேயே ரெகார்டிங் ஸ்டுடியோவில் ஒரு சவுண்ட் என்ஜினியரின் உதவியோடு இப்பாடல் ரெக்கார்ட் செய்யப்பட்டதாம். இப்படி ஒரு பாடல் படத்தில் இருப்பதையே அப்படத்தின் இசையமைப்பாளர் யாரோ சொல்லி கேள்விப்படுவது கொடுமைதானே?<br /><br />‘வால்மீகி’ இசைமேடையில் மிஷ்கினை பார்த்ததுமே இளையராஜா பொங்கிவிட்டதின் பின்னணி இதுதான் என்று சினிமா நண்பர்கள் சொல்கிறார்கள்.<br /><br />இளையராஜா இதுபோல தொழிற்முறை சர்ச்சைகளில் அடிபடுவது இது முதல்முறையல்ல. ‘அஞ்சலி’ திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவின் போது இளையராஜாவின் கால்களில் திரையுலக முக்கியஸ்தர்கள் விழுந்து ஆசிப்பெற்றார்களாம். அக்காலக் கட்டத்தில் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த ராஜ்கிரண் போன்றோர் அம்மாவின் காலில் விழும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மாதிரி இளையராஜாவைக் கண்டதுமே காலில் ‘தொப்பென்று’ விழுவது வழக்கம்.<br /><br />அதே மேடையில் வீற்றிருந்த தமிழ் சினிமாவின் உச்சத்துக்கு அது உறுத்தியதாம். உச்சமும், இளையராஜாவும் அடுத்தப் படத்தில் இணைந்திருந்தார்கள். அப்படத்திலும் இளையராஜாவின் கொடி உச்சத்தின் புகழைவிடவும் அதிகமாக பறந்தது. தமிழின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக இன்றளவும் பட்டியலிடப்படும் அப்படத்தின் இயக்கம், நடிப்பினையும் தாண்டி இளையராஜாவின் இசை சிரஞ்சீவியாக வாழுவதற்கு இன்றும் பி.பி.சி.யின் உலகளவில் பிரபலமான பாடல்கள் பட்டியலே சாட்சி. அதன்பின்னரே இளையராஜா குறிவைத்து முதுகில் குத்தப்பட்டதாக சொல்வார்கள்.<br /><br />இளையராஜாவிடமும் குறை இருக்கிறது. அவரது கர்வம் மற்றவர்களிடமிருந்து அவரை தனிமைப்படுத்தியிருக்கிறது. மற்றவர்களுக்கும் கர்வம் உண்டு. ஆனால் வெளிப்படையாகக் காட்டிக்கொள்வதில்லை. கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்’ நூலை நீங்கள் வாசித்திருக்கலாம். அந்நூலில் இளையராஜா குறித்த கவிஞரின் கருத்துகள் மிக முக்கியமானவை. அவற்றை இளையராஜா ஏற்றுக் கொள்கிறாரோ இல்லையோ, மற்றவர்கள் ஒப்புக்கொள்ளும் வண்ணம் எழுதியிருப்பார் கவிஞர்.<br /><br />இளையராஜா தனது கர்வத்தையும், போராட்டக் குணத்தையும் காட்ட வேண்டிய நேரத்தில் காட்டாததே அவரது பின்னடைவுக்கு காரணமாக அமைந்தது என்பதையும் மறுக்கமுடியாது. திருவண்ணாமலை கோவில் கும்பாபிஷேக விவகாரம் இதற்கு நல்ல சாட்சி. தலித் மக்கள் இளையராஜாவை அம்பேத்கருக்கு இணையாக தங்கள் சுவரொட்டிகளில் வெளிப்படுத்தியப்போது, ‘சாதி அடையாளம் வேண்டாம்’ என்றுகூறி அதைத் தீவிரமாக எதிர்த்தவர் திருவண்ணாமலை கோவில் விவகாரத்தில் மவுனமாக அடங்கியது, அவர்மீதான இமேஜை உடைத்தது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ‘நவீன பார்ப்பனர்’ என்ற அவர்மீதான சொல்லடிகளுக்குப் பின்னால் நியாயமுண்டு என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.<br /><br />‘சிம்பொனி’ சர்ச்சை குறித்து இதுவரை இளையராஜாவிடம் இருந்து தெளிவான பதில் வந்ததே இல்லை. அவர் நிஜமாகவே சிம்பொனிக்கு இசையமைத்தாரா இல்லையா என்பதெல்லாம் பிரச்சினையே இல்லை. அவரது சிம்பொனியை கேட்டுதான் அவரை நேசிக்க வேண்டும் என்ற காரணமெல்லாம் தமிழனுக்கும் இல்லை.<br /><br />இளையராஜாவின் இசை மட்டுமல்ல, அவரது கர்வத்தையும் சேர்த்தே அவரை ஏனோ எனக்குப் பிடித்திருக்கிறது!<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-6437123047389657202?l=www.luckylookonline.com'/></div>யுவகிருஷ்ணாhttp://www.blogger.com/profile/04524693633714401444yuvakrishna@gmail.com0tag:blogger.com,1999:blog-25593973.post-29352356283330560812009-05-25T01:31:00.001+05:302009-07-18T00:09:12.615+05:30எப்போ பூ பூக்கும்?<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/ShpYhSiTYYI/AAAAAAAACK8/XLE0yw_H7UE/s1600-h/rose.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 263px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/ShpYhSiTYYI/AAAAAAAACK8/XLE0yw_H7UE/s400/rose.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5339677637135786370" /></a><br /><br /><span class="Apple-style-span" style="font-weight: bold;"><span class="Apple-style-span" style="font-size: large;">அ</span></span>லுவலகத் தோழி வீட்டிலிருந்து எடுத்து வந்த கிளையை வைத்து பதியன் போட்டுக் கொண்டிருந்தேன். பதினைந்து ரூபாய்க்கு சாலையில் கடை போட்டு விற்கிறான். ஏனோ ரோஜாச்செடியை மட்டும் காசுகொடுத்து வாங்கி வைப்பதில் எனக்கு விருப்பமில்லை. மஞ்சள் ரோஜா என்று சொல்லி விற்பான். பூக்கும்போது சிகப்பாய் பூக்கும். குறைந்தபட்சம் பூக்கவாவது செய்கிறதே என்று மகிழ்ந்தாலும், நாம் எதிர்ப்பார்த்த வண்ணத்தில் பூக்கவில்லையே என்ற ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடிவதில்லை.<br /><br />தொட்டியில் பதியன் போடுவது மாதிரி வெறுப்பான வேலை எதுவுமில்லை. ஒரு தொட்டி வாங்கும் காசுக்கு நாலு பூச்செடிகளை நர்சரியில் வாங்கிவிடலாம். ம்ம்.. சொந்தவீடாக இருந்தால் பூந்தோட்டத்தையே உருவாக்கலாம். இருப்பது வாடகை வீடு. தொட்டியில் வளர்த்தால் தான் உண்டு. இதுபோன்ற நேரங்களில் ஊர்நினைவு வந்துவிடுகிறது.<br /><br />விசாலமான வீடு. வீட்டுக்குப் பின்னால் பூந்தோட்டம். ஜிகினா, சம்பங்கி, சாமந்தி, மைசூர் மல்லி, வாடாமல்லி என்று விருப்பப்பட்ட செடிகளை எல்லாம் வளர்க்க முடிந்தது. அண்ணா, தங்கை, அம்மா, அப்பாவென்று போட்டிப் போட்டு செடிவளர்ப்போம். தாத்தாவுக்கு மட்டும் வீட்டுக்கு முன்பாக இருந்த தென்னைமரத்தின் மீதுதான் பாசம். பாடுபட்டு வளர்க்கும் செடி பெரிய பலனை தரவேண்டுமாம்.<br /><br />சீமந்தப் புத்திரன் ஸ்யாம் பிஸ்லெரி தண்ணீர் பாட்டிலோடு வந்தான். “அப்பா இந்தச் செடிக்கு மினரல் வாட்டர் ஊத்தலாம் இல்லை?” – எனக்கும் ஆசையாகத்தான் இருந்தது. மாநகராட்சி தரும் மருந்தடித்த நீரை செடிகளுக்கு ஊற்றுவதில் எனக்கு விருப்பமில்லை. அமிலத்தை வேரில் ஊற்றுவது மாதிரி உள்ளுக்குள் எரியும். குடிப்பதற்கே தினமும் இருபத்தைந்து ரூபாய் செலவு செய்து கேன் தண்ணீர் வாங்குகிறோம். செடிக்கு எங்கிருந்து நல்ல தண்ணீர் ஊற்றுவது? முதல்நாள் மட்டும் பிஸ்லரி வாட்டர் ஊற்றினேன். பையனுக்கு ரொம்ப மகிழ்ச்சி!<br /><br />இந்தமாதிரியான கான்க்ரீட் காட்டில் மாட்டிக் கொள்வேன் என்று எந்தக் காலத்திலும் நினைத்ததில்லை. சம்பாதிக்கும் பணத்தில் நாற்பது சதவிகிதத்தை வாடகை உள்ளிட்ட விவகாரங்களுக்கு செலவழிக்க வேண்டியிருக்கிறது. சாப்பாடு, உடை, மருத்துவம், கல்வி, எதிர்பாராத செலவு என்று மாதாமாதம் பட்ஜெட்டில் துண்டு. நகரத்துக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிறது. சொந்தவீடு இன்னமும் கனவுதான்.<br /><br />மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வீட்டை மாற்றவேண்டியிருக்கிறது, ஆணி அடிக்க முடிவதில்லை, விரும்பிய வண்ணத்தில் சுவருக்கு சுண்ணாம்பு அடிப்பது மாதிரியான சின்ன சின்ன விஷயங்களை தாண்டி, நினைத்தமாதிரி செடி வளர்க்க முடிவதில்லை. தாத்தா ஆசைப்பட்டது மாதிரி தென்னங்கன்று வைக்க முடிவதில்லை, பூச்செடிகள் வளர்த்து மகிழமுடிவதில்லை போன்ற விஷயங்கள் தான் உறுத்துகிறது. ஊரில் சொந்த வீடிருக்க, பிழைப்புக்கு வாடகை வீட்டில் வசிப்பது மாதிரியான துன்புறுத்தல் சகிக்க முடியாதது.<br /><br />எடுத்து வந்த கிளையின் இருப்பக்கத்தையும் மண்ணில் ஊன்றி தொட்டியை தயார் செய்தேன். செம்மண் கூட இங்கே காசுகொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. தினமும் நீர் ஊற்றி பராமரிக்கும் பொறுப்பை பையனுக்கு தந்தேன். இதற்கு முன்பாக இருந்த வீட்டில் சாமந்தி வளர்த்தேன். வெள்ளை சாமந்தி.<br /><br />“எப்போப்பா பூக்கும்” ஸ்யாம் கேட்டான்.<br /><br />“நீ தினமும் ஒழுங்கா தண்ணி விட்டு வளர்த்தேனா, தினமும் ரெண்டு மணி நேரம் சூரிய ஒளியில் வெச்சேன்னா ஒன்றரை மாசத்துலே பூக்கும்!”<br /><br /><br /><span class="Apple-style-span" style="font-weight: bold;"><span class="Apple-style-span" style="font-size: large;">அ</span></span>க்கவுண்ட்ஸ் மேனேஜர் அபூர்வமாக அழைத்தார்.<br /><br />அனேகமாக வீட்டு லோன் விஷயமாக இருக்கலாம். இரண்டு மூன்று ஆண்டுகளாகவே முயற்சித்து வருகிறேன். வட்டியில்லாக் கடன் ஆயிற்றே? பத்தாண்டுக்கு முன்பாகவே நகருக்கு வெளியே ஒரு அரைகிரவுண்ட் நிலம் வாங்கிப் போட்டிருக்கிறேன். கால்கிரவுண்டில் வீடுகட்டி, மீதியிருக்கும் இடத்தில் தோட்டம் போடவேண்டும். சிறுவயதில் நான் அனுபவித்த மகிழ்ச்சியை என் பையனுக்கும் உருவாக்கித்தர வேண்டும். எவ்வளவு நாளைக்குதான் தொட்டிச்செடி?<br /><br />“வாங்க சார். கங்கிராட்ஸ்” முகம் முழுக்க மகிழ்ச்சி இருந்தது மேனேஜருக்கு.<br /><br />“எதுக்கு சார் கங்கிராட்ஸ்?” யூகித்தமாதிரியே தானிருக்கிறது என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாலும், சும்மா மேலுக்கு கேட்டேன்.<br /><br />“நெஜமாவே தெரியாது. எம்.டி. ரொம்ப ஹேப்பியா இருக்கார் உங்க பெர்பாமன்ஸ் பத்தி” – கவரை நீட்டினார்<br /><br />“மகிழ்ச்சி சார்” – படபடப்போடு பிரித்தேன்.<br /><br />ஆயிரம் ரூபாய் இன்க்ரிமெண்ட். ஒரு வருடம் கழித்து கிடைக்கவேண்டியது. இடையில் ஆறுமாதத்துக்குள்ளாகவே கிடைத்திருக்கிறது.<br /><br />“சார் நான் எதிர்பார்த்தது வேற”<br /><br />“தெரியும் செந்தில். ஹெட் ஆபிஸ்லே லோன் எல்லாம் அவ்வளவு சுளுவா இப்போ அப்ரூவ் பண்ணறதில்லை. இருந்தாலும் நான் உங்களுக்காக பர்சனலா ப்ரெஸ்ஸர் கொடுத்துக்கிட்டு தானிருக்கேன்!”<br /><br />“நன்றி சார். இன்க்ரிமெண்ட் கிடைச்சது சந்தோஷம்தான். ஆனா லோன் கிடைச்சா ரொம்ப சந்தோஷம்” நன்றிகூறி விடைபெற்றேன்.<br /><br />மாதத்துக்கு ஆயிரம் ரூபாய் அதிகமாக கிடைக்கிறது. அப்படியே பேங்கில் சேமிக்கலாமா?<br /><br /><br /><span class="Apple-style-span" style="font-weight: bold;"><span class="Apple-style-span" style="font-size: large;">து</span></span>ள்ளலோடு மல்லிகைப்பூவும், இனிப்புப் பொட்டலமுமாய் வீட்டுக்குள் நுழைந்தேன்.<br /><br />சகதர்மிணி முகத்தில் வாட்டம்.<br /><br />“என்னாச்சுப்பா?”<br /><br />“ஹவுஸ் ஓனர் வந்துட்டுப் போனாரு. வீடு எப்போ காலி பண்ணப் போறீங்கன்னு கேட்டாரு”<br /><br />“இங்கே வந்து ஒன்றரை வருஷம் கூட ஆகலியே? அதுக்குள்ளே ஏனாம்?” இன்க்ரிமெண்ட் கிடைத்த சந்தோஷம் புஸ்.<br /><br />பையன் குதித்துக்கொண்டே ஓடிவந்தான். “அப்பா. ரோஜாச்செடி....”<br /><br />“சும்மாயிர்ரா. அம்மாவோட பேசிக்கிட்டிருக்கேன் இல்ல... அப்புறமா வ்” பையன் வாட்டமாக கிளம்பினான்.<br /><br />ச்சே.. இந்த வாடகைக் கலாச்சாரம் ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியையே ஒட்டுமொத்தமாக கொள்ளை அடித்துவிடுகிறது.<br /><br />“வேற யாரோ அதிக வாடகைக்கு கேட்டிருக்காங்களாம். ரெண்டாயிரம் ரூபா அதிகமா கொடுத்தா நாமளே இருக்கலாமுன்னு சொல்றாரு”<br /><br />“புறாக்கூண்டு மாதிரி இருக்குற இந்த வீட்டுக்கு ஆறாயிரம் கொடுக்கறதே அநியாயம். எட்டாயிரம் கேட்குறானுங்களா? வேற வீடு பார்த்துக்கலாம்”<br /><br />சொல்லிவிட்டேனே தவிர, வேறு வீடு பார்ப்பது அவ்வளவு சுலபமில்லை என்று தெரியும். நகருக்கு மத்தியில் முதன்முதலாக மனைவியோடு குடியேறி, வீடு மாறி, மாறி, நகரத்தின் விளிம்புக்கு வந்துவிட்டேன். ஆபிஸுக்கு போய்வருவது மாதிரியான பிரச்சினை எனக்கும், பையனை பள்ளிக்கு கொண்டுசெல்வது மாதிரியான பிரச்சினை மனைவிக்கும் அலுப்பாக இருக்கிறது.<br /><br /><br /><span class="Apple-style-span" style="font-weight: bold;"><span class="Apple-style-span" style="font-size: large;">ஹ</span></span>வுஸ் ஓனர் கொடுத்த ஒருமாத கெடு முடிவதற்குள், குரோம்பேட்டை தாண்டி ஹஸ்தினாபுரத்தில் ஒரு பிளாட் கிடைத்தது. தனிவீடு பார்த்தால் வாடகை எக்கச்சக்கம். இங்கிருந்ததை விட வாடகை ஆயிரம் ரூபாய் அதிகம். வாங்கிய இங்க்ரிமெண்ட் எனக்கு வழக்கம்போல செரிக்கப் போவதில்லை.<br /><br />செடியை வேர்மண்ணோடு எடுத்து வைப்பது போல சுலபமானது அல்ல வீடு மாறுவது. ஒரு டெம்போ பிடித்து வந்தேன். இரண்டு பேரை கூலிக்கு அமர்த்தியிருந்தேன். முன்பு போல வெயிட்டெல்லாம் தூக்க முடிவதில்லை. மாமனார் வீட்டில் சீதனமாக வந்த கட்டிலும், பீரோவும் நல்ல வெயிட்டு.<br /><br />ஸ்யாமுக்கு புதுவீட்டைப் பார்ப்பதில் ஆர்வம் அதிகமாக இருந்தது. அவனுடைய விளையாட்டுப் பொருட்களை எல்லாம் பத்திரமாக சேகரித்து ஒரு பையில் அடைத்துக் கொண்டிருந்தான். அம்மாவைப் போலவே பையனும் உஷார்.<br /><br />பீரோவைத் தூக்கிக் கொண்டுவர வேலையாட்கள் இருவரும் சிரமப்பட்டார்கள். ஹாலைத் தாண்டி வாசற்படிக்கு வருவதற்குள் ஒருவர் காலில் எதையோ இடித்துக் கொண்டார். பீங்கான் உடைந்ததைப் போல சத்தம். காலில் இடித்துக் கொண்டதைப் பற்றி கவலைப்படாமல் அவர்கள் வேகமாக பீரோவை எடுத்துச் செல்ல, “அய்யோ ரோஜா செடி உடைஞ்சிட்டிச்சி” என்று ஸ்யாம் அரற்றத் தொடங்கினான்.<br /><br />அப்போதுதான் பார்த்தேன். தொட்டி உடைந்து செம்மண் சிதறிக்கிடந்தது. அழகாக மொட்டுவிடத் தொடங்கியிருந்த கிளையும் ஒடிந்திருந்தது. டெம்போவில் கடைசியாக ஏற்ற ஓரமாக தொட்டியை எடுத்து வைத்திருக்கிறான் ஸ்யாம். வெயிட்டை தூக்கிவந்தவர்கள் கீழே பார்க்காமல் காலில் தட்டிவிட்டிருக்கிறார்கள்.<br /><br />ஸ்யாமைப் பார்க்க பாவமாக இருந்தது. அவனுக்கும் என்னைப் போலவே பூச்செடிகள் மீது அதிகப் பிரியம்.<br /><br /><br /><span class="Apple-style-span" style="font-weight: bold;"><span class="Apple-style-span" style="font-size: large;">ஒ</span></span>ருவாரம் கழித்து, ஒரு ஞாயிற்றுக்கிழமை புதுவீட்டில்....<br /><br />அலுவலகத் தோழி வீட்டிலிருந்து எடுத்து வந்த கிளையை வைத்து பதியன் போட்டுக் கொண்டிருந்தேன். பதினைந்து ரூபாய்க்கு சாலையில் கடை போட்டு விற்கிறான். ஏனோ ரோஜாச்செடியை மட்டும் காசுகொடுத்து வாங்கி வைப்பதில் எனக்கு விருப்பமில்லை...........<br /><br /><br /><br /><br />* - * - * - * - * - * - * - *<br /><br /><a href="http://www.luckylookonline.com/2009/05/blog-post_2520.html">சமூக கலை இலக்கிய அமைப்பு சார்பாக வலைப்பதிவர்களுக்கு நடத்தப்படும் சிறுகதைப் போட்டிக்கான ஆக்கம்!</a><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-2935235628333056081?l=www.luckylookonline.com'/></div>யுவகிருஷ்ணாhttp://www.blogger.com/profile/04524693633714401444yuvakrishna@gmail.com0