January 27, 2012

செய்தி, துயரம், மரணம்!

செய்தித்தாள் வாசிப்பது என்பது இயந்திரத்தனமான சம்பிரதாயமாக மாறிவிட்டது. ‘சதக் சதக்’ ‘கதறக் கதற’ மாதிரியான வார்த்தைகள் பழகிவிட்டன. இச்சொற்கள் முன்பு கொடுத்த உணர்வுகளை இப்போது தருவதில்லை. செய்தி என்பது இன்றைய தேதியில் வெறும் தகவலை மட்டும் சுமந்துவரும் வஸ்துவாக மாறிவிட்டது. இது செய்தியை தரும் ஊடகங்களின் கோளாறா அல்லது வாசிப்பவன், எச்செய்தியாக இருந்தாலும், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடிய மனோபாவத்துக்கு மாறிவிட்டானா என்கிற மிகப்பெரிய விவாதத்துக்கான புள்ளி.

அத்திப்பூத்தாற்போல எப்போதாவது ஒரு செய்தி அன்றைய தினத்தையே முழுவதுமாக பாதித்துவிடும். இன்று காலை தினகரன் நாளிதழில் வாசித்த ஒரு செய்தி உடனடியாக கண்களில் நீர் கோர்க்கச் செய்தது.

நீலகிரி மாவட்ட ஆயுதப்படை காவலர் முப்பது வயதான பாண்டியன். ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானத்தில், மாவட்ட ஆட்சியர் பங்குபெற்ற குடியரசுத்தின கொண்டாட்டத்தின் இறுதியில் பாண்டியனின் வீரதீர சாகச நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.

ஒற்றைக்காலில் பைக்கில் நின்றவாறே வந்து மக்களுக்கு சல்யூட் அடிக்கிறார் பாண்டியன்.

அடுத்து பாய்ந்து, பறந்து வந்து கால்களால் ஓடுகளை அனாயசமாக உடைக்கிறார்.

கடைசியாக பதிமூன்று பேரை கடந்து பறந்துவருவது நிகழ்வில் அவரது கடைசி சாதனை. புவியீர்ப்புக்கு சவால் விட்டு அச்சாதனையையும் வெற்றிகரமாக செய்து முடித்தார்.

பாண்டியனின் சாகசங்கள் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தவர்களை மெய்சிலிர்க்க வைக்க, துரதிருஷ்டவசமாக இதுவே அவரது வாழ்வின் இறுதி சாதனையாகவும் முடிந்துவிட்டது. பதிமூன்றாவது ஆளை பறந்து கடக்கும்போது கை தவறுதலாக பட்டு, இவர் விழவேண்டிய மெத்தை நகர்ந்துவிட்டது. கழுத்து எலும்பு உடைந்து, மூளைக்குச் செல்ல வேண்டிய ரத்தநாளம் அறுந்து சில நிமிடங்களிலேயே உயிரிழந்துவிட்டார் பாண்டியன்.

பாண்டியனின் மனைவி பெயர் சந்தியா. இத்தம்பதியினருக்கு நான்கு வயது ஆண் குழந்தையும், பதினோரு மாத பெண் குழந்தையும் உண்டு. பாண்டியனின் சாகசத்தை நேரில் காண அவரது மனைவியும் கைக்குழந்தையோடு வந்திருந்தார். சம்பவம் மொத்தத்தையும் அவர் நேரில் பார்த்தார்.

நொடியில் நடந்துவிடும் இதுபோன்ற விபத்துகள், பலியாகும் அப்பாவி உயிர்கள், விளைவாக வாழ்க்கை முழுக்க பாதிக்கப்படும் குடும்பம், குழந்தைகள்... கடவுள் என்று ஒருவர் இல்லவே இல்லை என்பதற்கு வேறென்ன சாட்சி வேண்டும்?

20 பின்னூட்டங்கள்:

பொன்மலர் said...

சாதனையே சோதனையாகி விட்டது. அவருக்கு எனது இரங்கல்கள். நேரில் பார்த்த மனைவிக்கு எவ்வளவு கொடுமையான நாளாய் இருந்திருக்கும்? ச்சே!

தேசாந்திரி said...

தொலைக்காட்சியில் பார்த்த கணமே, இதயம் ஒரு நிமிடம் நின்று போனது. ஆனால், செய்திகள் முடிந்தவுடன் காஞ்சனா திரைப்படத்தில் மூழ்கி, இதை மறந்துவிட்டேன். ‘கரணம் தப்பினால் மரணம்’ தரும் இது போன்ற நிகழ்ச்சிகள் அரசு விழாக்களில் தேவைதானா?

atchaya said...

அனைத்திற்கும் கடவுள் மீது பழி போடுவது தவறு. பாதுகாப்பில் இன்னமும் கவனம் செலுத்தியிருந்தால், இத்தகைய நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்கும். சரியான திட்டமிடல், கவனக் குறைவு, அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை இவைகளே சோகத்திற்கு காரணம். ஆழ்ந்த இரங்கல் அன்னாரின் குடும்பத்தாருக்கு.
இனியாவது திறமையாளர்கள் பாதுகாப்பில், உரிய கவனம் செலுத்தட்டும். பகிர்விற்கு நன்றித் தோழரே!

அனுஜன்யா said...

//கடவுள் என்று ஒருவர் இல்லவே இல்லை என்பதற்கு வேறென்ன சாட்சி வேண்டும்? //

இதெல்லாம் பூர்வ ஜன்ம பலன், கர்மா, விதி என்றெல்லாம் நிறைய பதில்கள் தொடர்ந்து வருவதில் சலிப்பே மிஞ்சும் யுவா.

நேத்திக்கு சன் நியூஸ் பார்த்த போதே நொந்து போயிட்டேன். இந்த மாதிரி சுதந்திர தின, குடியரசு தின சாகசங்கள் அபாயமில்லாத வரை ஓகே. சில வருடங்கள் முன்பு 'சூர்ய கிரண்' என்று போர் விமான சாகசங்களில் ஒரு விமானம் விழுந்து நொறுங்கி, விமானி இறந்ததும் நெஞ்சை உலுக்கியது. வாழ்வின் அபத்தத் தருணங்கள் தாம் இவை.

எல்லா மரணங்களுமே சோகம் தாம் என்றாலும், சமீப மரணங்களில் உலுக்கியது தில்ஷன் மற்றும் பாண்டியன் தாம்.

குறுக்காலபோவான் said...

போதிய பாதுகாப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதுமின்றி இதை போன்ற சாகச முயற்சிகளை ஒழுங்கு செய்த அதிகாரிகளின் அலட்சியம் கண்டிக்கப் படவேண்டிய விடயம்.
அந்த குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

புருனோ Bruno said...

I may sound rude here

But

What is the need for 13 people to lie

Why can't they measure distance by some other means

It became a fatal accident because he landed half a feet before

If he had landed another feet before, it would have been also fatal for the boy who was lying there

It is high time we stop such "heroics"

perumal karur said...

மனசு ரொம்ப கஷ்ட்டமா இருக்கு

Anonymous said...

கழைக் கூத்தாடி ஸ்டண்ட்டுகள் குடியரசு, சுதந்நிர தின விழாக்களில் தேவையே இல்லை. டெல்லி அணிவகுப்பில் பைக் ஒட்டியபடி போலீசார் செய்த சர்க்கஸ் வித்தைகளைப் பார்த்தபோது நான் சொன்னது இது.

சரவணன்

மோகன் குமார் said...

அவர் இறப்பதற்கு ஒரு சில நொடி முன் எடுத்த படமும் அவர் மனைவி இருக்கும் படமும் மனதை என்னவோ செய்கிறது

நீங்கள் நாத்திகர் என்பதால் இந்த சம்பவம் கேள்விப்பட்டு "கடவுள் இல்லை என்பதற்கு இதை விட சான்று வேண்டுமா?" என்கிறீர்கள். வேறொரு சாரார் ஒரே நொடியில் ஒரு மனிதன் உயிரை பறித்தது விதி அன்றி வேறென்ன? விதி உண்டு என்பதற்கு இதை விட சான்று வேண்டுமா என்பார்கள்.

உண்மையில் சரியான பாதுகாப்பு இன்றி இத்தகைய ஹீரோயிசத்தில் ஈடு பட கூடாது என்பது தான் இதன் மூலம் தெரியும் சேதி.

Vadivel said...

மிகவும் துரதிர்ஷ்டவசமான ஈடு செய்ய முடியாத இழப்பு . நேரில் பார்த்த அதிர்ச்சி கொடியதாக இருக்கும்

nidurali said...

சாதனையே சோதனையாகி விட்டது. அவருக்கு எனது இரங்கல்கள்.
சரியான பாதுகாப்பு இன்றி இத்தகைய ஹீரோயிசத்தில் ஈடு பட கூடாது என்பது தான் இதன் மூலம் தெரியும் சேதி.
இறுதியாக உங்கள் முடிவுரையை இறைவனில்லை என்று எழுதி கட்டுரையை களங்கப் படுத்திருக்க வேண்டாம் . இக்காலத்தில் எல்லா நீதி அரசர்களும் தரும் தங்கள் மனதிற்கு விரும்பிய கருத்து கொடுப்பது போல் இருக்கிறது.

venkat said...

இது போன்ற நிகழ்ச்சிகள் அரசு விழாக்களில் தேவைதானா?

Rathnavel said...

வேதனையாக இருக்கிறது.

bandhu said...

எந்த விதமான பாதுகாப்பு சாதனங்கள் உதவியில்லாமல் அவரை இது போல செய்ய விட்டது பெரிய தவறு. ஒரு ஹெல்மெட் கூட அவர் அணியவில்லை. பத்திரமாக விழுவதற்கு ஒரு மெத்தை , அது நகர்ந்ததால் விபத்து என்பது கொடுமை! நம் உயிரின் மதிப்பு நமக்கே தெரிவதில்லை!

பிரபல பதிவர் said...

final destination

கார்த்திகேயன் said...

இந்நிகழ்ச்சியை நான் நேரில் கண்டது என் துரதிர்ஷ்டம்.
கனத்த இதயத்தோடு வெளியேரினோம்.

ஆகாயமனிதன்.. said...

62 ஆண்டுகள் கழிந்தும் சுதந்திரத்தை கொண்டாடுகிறோம்....
குடியரசு தினத்தையும் கொண்டாட வேண்டுமா ? இப்படி சாகசம் நிகழ்த்துவது வீர சாதனையா ?
போர்வீரர்களின் மரணத்திற்கு பிறகு அவர்களது குடும்பம் சிறக்க, அவர்களின் மனைவிகள் மறுமணம் செய்து கொள்ள முன் வரவேண்டும்...

ஆகாயமனிதன்.. said...

62 ஆண்டுகள் கழிந்தும் சுதந்திரத்தை கொண்டாடுகிறோம்....
குடியரசு தினத்தையும் கொண்டாட வேண்டுமா ? இப்படி சாகசம் நிகழ்த்துவது வீர சாதனையா ?
போர்வீரர்களின் மரணத்திற்கு பிறகு அவர்களது குடும்பம் சிறக்க, அவர்களின் மனைவிகள் மறுமணம் செய்து கொள்ள முன் வரவேண்டும்...

Kutty said...

Will his wife believe the god hereafter ???? just thing, whoever believe the god, dont go to hospitals, pray the god for your illness. anybody dare for this ? also dont give the polio drops to your child. pray the god for not affecting the polio to your child. will anyone ??? 100% nobody... u people not believing the god fully. because u too know that god is not exist. but u are not dare to accept that... whoever say anything about this. ur heart will accept there is no god. :-)

sivabalan said...

செய்தித்தாள் வாசிப்பது என்பது இயந்திரத்தனமான சம்பிரதாயமாக மாறிவிட்டது. ‘சதக் சதக்’ ‘கதறக் கதற’ மாதிரியான வார்த்தைகள் பழகிவிட்டன. இச்சொற்கள் முன்பு கொடுத்த உணர்வுகளை இப்போது தருவதில்லை. செய்தி என்பது இன்றைய தேதியில் வெறும் தகவலை மட்டும் சுமந்துவரும் வஸ்துவாக மாறிவிட்டது. இது செய்தியை தரும் ஊடகங்களின் கோளாறா அல்லது வாசிப்பவன், எச்செய்தியாக இருந்தாலும், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடிய மனோபாவத்துக்கு மாறிவிட்டானா என்கிற மிகப்பெரிய விவாதத்துக்கான புள்ளி.arumaiyana varikal?