January 19, 2011

FLASH NEWS : நித்யானந்தாவின் மானநஷ்ட ஈடு வழக்கு

பிட்டு வீடியோ புகழ் நித்தியானந்தர்,  எழுத்தாளர் ஒருவருக்கும், பத்திரிகை ஒன்றுக்கும் 10 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியிருந்ததாக கேள்விப்பட்டோம். இன்னும் யார் யாருக்கு, எந்தெந்த நிறுவனங்களுக்கு இதுபோன்ற வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டிருக்கிறது என்கிற தகவல் முழுமையாக தெரியவில்லை.

நித்யானந்தாவுக்கு என்ன மானம் இருக்கிறது, அதற்கு இப்போது நஷ்டம் வந்துவிட்டது என்ற குழப்பம் ஏற்படுகிறது.

தொலைக்காட்சிகளில் வெளியான வீடியோ துண்டுப்படம் உண்மையானது என்று தடய அறிவியல் துறையும் கூட உறுதி செய்துவிட்டதாகவே தெரிகிறது. மோசடியை வெளிக்கொணர்ந்தவர்களுக்கு மோசடியாளன் மானநஷ்ட ஈடு கேட்டு நோட்டிஸ் அனுப்பும் கொடூரம் இந்த நாட்டில் மட்டும்தான் நடக்கும்.

சம்பந்தப்பட்ட எழுத்தாளருக்கும், ஊடகங்களுக்கும் தார்மீக ஆதரவு கொடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

நித்யானந்தரின் மோசடிகளை அறிந்துகொள்ள சாருநிவேதிதா எழுதிய 'சரசம், சல்லாபம், சாமியார்' நூலினை வாசிக்க பரிந்துரைக்கிறேன். வெளியீடு உயிர்மை. இணையம் மூலமாக இந்த நூலை இந்தச் சுட்டியை சொடுக்கி வாங்கலாம்.

10 பின்னூட்டங்கள்:

Nataraj said...

I support..இவனுக்கு எல்லாம் மைனர் கு*** ட்ரீட்மென்ட் தான் குடுக்கணும்..

நிமல் said...

அந்த வீடியோ மூலம் குறித்த பத்திரிகை வருவாயை பெற்றும் அதற்கான 'றோயல்டி' தொகையை நித்தியானந்தாவுக்கு கொடுக்காமல் இருப்பது தவறு தானே.

கவிதை காதலன் said...

எங்கள் ஈடு இணையற்ற தலைவனை கேவலப்படுத்தியதற்காக உங்களுக்கு காவலன் பட டிக்கெட்டும், இளைஞன் படத்திற்கான ஒருமாத டிக்கெட்டும் வழங்குமாறு தமிழக அரசிடம் போராடப்போகிறோம்..

விரல்களுக்கும் இதழ்களுக்கும் சண்டை

மணிகண்டன் said...

ஏன் அதுக்கு முன்னாடி சாரு நிவேதிதா அவரை ஆராதித்து பக்கம் பக்கமா எழுதினதையும் ஒரு புக் வேணாம் .pdf ஃபைலா கொடுக்கலாமே !

ஆனாலும் இந்த வழக்கு விஷயத்தில் நாம் சாருவை ஆதரிப்போம். ஆதரிக்கறதுக்கு என்ன பண்ணனும் ? அதையும் சொல்லுங்களேன்.

கானா பிரபா said...

சரியா விசாரிச்சீங்களா, அது மான நஷ்ட வழக்கா அல்லது புத்தக விற்பனையில் பாதி லாபம் கேட்டா ;)

Anonymous said...

http://standupfordharma.blogspot.com/2011/01/january-19-2011.html

ஏவிஎஸ் said...

ரசித்த வரிகள்: "நித்யானந்தாவுக்கு என்ன மானம் இருக்கிறது, அதற்கு இப்போது நஷ்டம் வந்துவிட்டது என்ற குழப்பம் ஏற்படுகிறது."

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

இவன் மட்டும் சாருவின் புக்கை படித்தால் நாக்குபிடுங்கிக்கொண்டு சாவான்.அந்த 29 கேள்விகள் இவனை நடைபிணமாக்கும்

thamizhan said...

தன்னுடைய ரேட்டிங்குர்காக-உங்க வரிகளில் பிட்டு-செய்தி போட்டதால் மக்களுக்கு என்ன நன்மை?யாரும் ஏமாறாமல் இருப்பது என்று சொன்னால்,அங்கு போனவர்கள் எல்லாம்,லக்கியோ,சுகுமாரோ அல்ல.பெரிய புள்ளிகள்.அரசியல்,வர்த்தக பிரமுகர்கள்.இந்த செய்தியை வால்போஸ்டரில் பார்த்துவிட்டு பத்து ரூபா,எட்டு ரூபா கொடுத்து புத்தகம் வாங்கி படித்தவர்கள் இதில் சம்பந்தப்படாத நடுத்தர மக்களே.இப்போது சொல்லுங்கள்,மக்களை ஏமாற்றியது யார்?

aforamma said...

அடியாள் வைத்து கோயிலுக்குள்ளே தீத்துகட்டிய ஜெயந்திரனும், விஜயேந்திரனும் சர்வ அந்தஸ்தும் குறையில்லாமல் வலம் வரலாம், நித்தியாநந்தா வரக்கூடாதா? என்ற ஆதங்கமாக இருக்கலாம்.

நித்தியாநந்தா செய்த ஒரே தவறு பிராமனராக பிறக்காதது மட்டும்தான்னு நல்லா ஒரைக்குறா மாதிரி சொல்லுங்க லக்கி...

- சென்னைத்தமிழன்