March 27, 2010

இணையக் கவிஞன்!


வண்ண வண்ண
சுடிதார்களில்
செல்லம்மாள் கல்லூரி
மாணவிகள்
பட்டாம்பூச்சிகளாய்
சிறகடித்துப் பறக்கிறார்கள்
ஒரு இரட்டைசக்கர ஓட்டுனர்
அவர்களை சைட் அடித்தபடியே
சிக்னலை கவனிக்காமல்
தடுத்த போலிஸ்காரனை
இடித்துவிட்டான்
சத்தம் கேட்டு திரும்பிய
வண்ணத்துப் பூச்சிகள்
சத்தம் வராமல் சிரித்தன
அப்போது நான்
பெட்ரோல் பங்குக்கு
பக்கத்தில் இருந்த
பொட்டிக்கடையில்
சிகரெட்டு
பிடித்துக் கொண்டிருந்தேன்!

22 பின்னூட்டங்கள்:

MANO said...

BOSS, நல்லா இருக்கு....

மனோ

Anonymous said...

இது நக்கலா இல்லை பின் நவீனத்துவமா? lol

பார்வையாளன் said...

அருமையான, உலக இலக்கியம் படைச்சு இருக்கீங்க ... இந்த தமிழர்கள், இதை ரசிக்காம,
டி வீ ல , குடும்பத்தோட ப்ளூ பிலிம் பாக்குறாங்க...
கேரளால இந்த நிலை இல்லை...
ரொம்ப கஷ்டமா இருக்கு...

இதை யாராச்சும், இங்க்லீஷ்ல, மொழி பெயர்த்தா , உங்களுக்கு தான் அடுத்த நோபல் பரிசு

Anonymous said...

என்ன சொல்ல வர்றீக...
- arulmurugan

மாயவரத்தான்.... said...

கவித..!

ச.முத்துவேல் said...

விடுங்க பாஸ். தினத்தந்தி குடும்பமலர்ல எழுதிதான் மேலவரணுமா? அதுக்குத்தான் இப்ப ப்லாக் இருக்குதே?எல்லாருக்குமே ஆரம்பத்துல அப்படித்தானே.

அப்துல் சலாம் said...

அற்புதமான ஹய் கூ (சற்று நீளமான)

mukundhan said...

ennadhu idhu??? really kavidhaya?

D.R.Ashok said...

என் அதிஅற்புத கவிதைகளுக்கு நீங்கள் பின்னூட்டம் அளிக்காததால்.. இந்த கவிதைக்கு(?) பின்னூட்டம் இடமாட்டேன் என்பதை சங்கத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்

இப்படிக்கு
செயலாளர்
தமிழ் ப்ளாகர் சங்கம்

♠ ராஜு ♠ said...

//இணையக் கவிஞன்!
வகை கட்டுரை/

சம்திங் மஸ்ட் பீ ஹியர்..?

Anonymous said...

இது கவிதை இல்லை, பதிகை! இவர் எழுதுவது எழுத்து அல்ல பழுத்து. ஏனென்றால் இவர் எழுத்தாளர் அல்ல பதிவர்!
-கார்த்திக்

ஆதிமூலகிருஷ்ணன் said...

:-)

Muthu said...

ithula enna irukku boss, ellorum panrathuthaane??!!

மணிஜீ...... said...

//வண்ண வண்ண
சுடிதார்களில்
செல்லம்மாள் கல்லூரி ///

நீங்கள் கிண்டியில் இந்த கவிதையை அவதானித்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஏபிடி பங்க்கா? அல்லது அருகில் உள்ள இன்னொரு பங்க்கா? இந்த கவிதையில் உள்ள நுண்ணரசியல் எனக்கு பிடித்திருக்கிறது.கவிதை எழுத தெரியாது என்று அநியாயத்திற்கு பொய் சொன்னீர்களே.

Anonymous said...

this will be read in the next "almost island" dialogues program in delhi..what a kavithai?..superb lucky

ஆசிர் said...

என்னது கம்பர் செத்துடாரா ?

D.R.Ashok said...

உபரி தகவல்:

காலேஜ் படிக்க சொல்லொ நாங்க செல்லமாள் கல்லூரியை ராக்காயி கோயில் என அழைப்போம்.

சுதாகர் said...

இணைய எழுத்தாளர் மாதிரி இணைய கவிஞர்-ஆ? ஏதோ உள்குத்து இருக்கிறமாதிரி இருக்கே?

Azarudeen Batcha said...

neraya paer itha oru hicoo vaaa paakureenga but really ithula oru periya visayam irukum athuvum ovvoru kannotathula..

En paarvail ithu Ilaingar halin porupatra pokkai sutti kaati ullar...

for ex: Bike a otti sight adikurathu..

petrol bunk pakathula cigrate....

Intha maathiri.. just put up in your life, and think, Everything is understandable

Anonymous said...

சுஜாதாவின் லாண்டிரிக் கணக்கும் இலக்கியம் ஆவது போல் போல் உங்கள் டயரிக் குறிப்பும் கவிதையாகி விட்டதா...

Anonymous said...

சரி விடுங்க அவர் என்ன பண்ணுவார்...ஏதோ அவருக்கு தோனறத எழுதறார் ..

கார்க்கி said...

ரிப்பீட்டு தானே சகா இது? கே.ஆர்.எஸ் கொடுத்த ஊக்கத்தால் எழுதியது என்று எப்போதோ சொன்ன ஞாபகம். சரியா?