ராமர் பாலம்!

March 10, 2010

இரண்டு வருடங்களுக்கு முன்பாக எழுதிய பதிவிது. சேதுசமுத்திரத் திட்டம் அப்போதெல்லாம் ஊடகங்களில் பற்றியெறிந்துக் கொண்டிருந்தது. இப்போது அதைப் பற்றி பேச்சு மூச்சே காணோம். ஒருவேளை நிஜமாகவே அங்கு ராமர்பாலம் இருந்ததை மத்திய அரசு கண்டுபிடித்து விட்டதா என்று தெரியவில்லை! :-(

என்ன கொடுமை சார் இது?

இந்தச் செய்தியை படித்ததிலிருந்தே மனசு சரியில்லை. முல்லாக்களும், அண்டோமேனியா தலைமையிலான கிறிஸ்தவ மிஷனரிகளும் நம் புண்ணிய பூமியை சுடுகாடாக்கி விடுவார்களோ என்ற கவலை மேலிடுகிறது.

அம்மாவின் புண்ணியத்தால் ஹைகோர்ட்டில் நம் மகளிர் அணியினரின் சிறப்புத்தரிசனம் பெற்றவர் சுப்பிரமணியசாமி. அதன் மூலமாக அவருக்கு ஞானம் கிடைத்தது. ஹிந்துக்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் சுப்பிரமணியசாமி மூலமாக தீர்த்து வைப்பது அம்மாவின் வாடிக்கை. அம்மாவின் நம்பிக்கைக்குரிய சாணக்கியர் சோ ராமசாமிக்கு ரொம்பவும் நெருங்கியவர் இந்த சுப்பிரமணியசாமி. ராமபிரான் பாலம் குறித்து அவர் தொடுத்த வழக்கு ஒன்றினை கொத்துபரோட்டா போட்டிருக்கிறார்கள் உச்சநீதிமன்றத்தில்.

முன்பெல்லாம் நமக்கு சோதனை என்றால் உச்சநீதிமன்றத்துக்கு தான் ஓடி நல்ல தீர்ப்பு பெறுவோம். திம்மிக்கள் வயிறு பொறுமுவார்கள். இப்போதெல்லாம் உச்சநீதிமன்றத்தை கூட நம்பமுடியவில்லை. இராமர் பாலம் கட்டியதற்கு ஆதாரமெல்லாம் கேட்கிறார்கள். ஆதாரமாக தான் ஹிந்துக்கள் போற்றும் இராமாயணம் இருக்கிறதே? சன் டிவியில் ஞாயிறு தோறும் இராமாயணம் போடுகிறார்களே? இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்? இவற்றுக்கெல்லாம் மேலாக இராமர் பாலம் இருந்தது உண்மை என்று அம்மாவே சொல்லியிருக்கிறாரே? துக்ளக்கில் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறதே?

இராமேஸ்வரம் போனால் கடலில் பிரம்மாண்டமாக இராமர் பாலம் தெரியும். அதன் வழியாக நாம் இலங்கைக்கு கூட போகலாம் என்பது தமிழ்நாட்டின் சிறுபிள்ளைக்கும் தெரியும். திம்மிக்கள் சூழ்ச்சி செய்து டி.ஆர்.பாலு மூலமாக அந்த பாலத்தை கடலில் அமுக்கி வைத்திருக்கிறார்கள். ரவுடி திம்மி கூட்டம் அந்த பாலத்தை சேதப்படுத்த முயற்சித்தால் அவர்களை 295வது பிரிவின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று சுப்பிரமணிசாமி கோர்ட்டில் கேட்டிருக்கிறார். அது வழிபாட்டுத்தலமா? அங்கே யாராவது வழிபடுகிறார்களா? அப்படி ஒரு பாலம் இருக்கிறதா? என்று நீதிபதிகள் கேள்வி கேட்கிறார்களாம். ராமர் பாலத்தை நம்பும் எண்பது கோடி ஹிந்துக்களை முட்டாள் என்று நினைக்கிறதா உச்சநீதிமன்றம்?

இனியும் ராமர்பாலம் இருக்கிறதா என்று உச்சநீதிமன்றம் கேட்டால், அந்த பாலத்தை கட்டிய அணிலை சாட்சிக்கூண்டில் நிறுத்தி சாட்சி சொல்லவைக்க எண்பது கோடி ஹிந்துக்களும் தயாராக இருக்க வேண்டும். இதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய நாம் தயாராக இருப்போம்.

இராமர் பாலம் கட்டப்பட்டபோது எடுத்த வண்ணப்படம். அணில் அப்போது வேலையில் பிஸியாக இருந்ததால் படத்தில் இல்லை.

10 பின்னூட்டங்கள்:

D.R.Ashok 12:14 PM, March 10, 2010  

கற்களில் ’ராம்’ என்று இந்தியில் எழுதியிருக்கிறார்கள். யூவகிருஷணாவின் இந்தி திணிப்பை கண்டிக்கிறேன்... தமிழனுக்கு தமிழ்தானே மூச்சு

P.K.K.BABU 12:50 PM, March 10, 2010  

ENNADHU GANDHIYA SUTTUTTANGHALA??? JUSTICE BALAKRISHNAN.K.G.

Anonymous 1:02 PM, March 10, 2010  

what planet are you really from? PANDOR'A PLANET ???? Part of na've community ?? And, are you not a bit loony to expect us to believe all your stories?


we do have some questions to ask you.

We'll keep on counting,We'll keep on reminding them, UNTILL WE GET AN ANSWER.

Tamil MA 2:58 PM, March 10, 2010  

@Anonymous

First you remove your moronic mask and come up with your real face and face the truth.

You are in ape mentality to ignore the history that apes helped to construct the bridge.

You are not going to get the answer until you come up with your own identity.

ஆர்.கே.சதீஷ்குமார் 5:21 PM, March 10, 2010  

பாவம் அணில்.;-))

damildumil 5:46 PM, March 10, 2010  

யோவ் ! உங்க சண்டையில அந்த அணிலை ஏன்யா இழுக்குறீங்க? அது பாவம்யா

Anonymous 6:00 PM, March 10, 2010  

Sure, you could try to come up with the answers to the questions on your own, possibly get some of them right...

But what about the questions that you don't get right ?

What about when you don't have the answer you need?

இனியா 7:54 PM, March 10, 2010  

Good One Lucky!!! Meelpathiva irunthaalum meendum padikka nallaave irukku.

Bizzarree 9:34 AM, March 12, 2010  

Nalla pathivu ! Namma CJI vara vara moral advise panratha paatha..pora pokkula...yen kanavula raamar vandhu saatchi sonnaaru atha yethukittu theerppu solrennu sonnalum solvar !

Anonymous 7:39 PM, April 30, 2010  

Ramayanam is a epic, instead of critizing it, take the good things from it and be a good human being

Back to TOP