மாரியாத்தா!

December 10, 2009

கே.டி.வியில் ஏதோ படம் ஓடிக்கொண்டிருந்தது.

ஹீரோவுக்கு பிளட் கேன்சர் என்று அறிந்த அவரது காதலி மற்றும் பெற்றோர் துடிதுடித்து ரியாக்ஷன் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஹீரோவின் அப்பா : ஏம்மா. நம்ம அல்லிமுத்து இந்த நிலைமையிலே இருக்கறப்போ மாரியாத்தா கோயிலுக்கு போகணும்னு சொல்றியே?

ஹீரோவின் அம்மா : மருந்தால குணமாகாத என் மவனோட நோயை அந்த மாரியாத்தா குணப்படுத்திடுவாய்யா...

- மாரியாத்தா.. உனக்கு மட்டும் சக்தி இருந்தால் தமிழ் சினிமாவுலே இந்தமாதிரி வசனம் எழுதறவனுங்களை ஊமையா மாத்திடு... இந்தமாதிரி படம் எடுக்கற டைரக்டருங்க கண்ணுலே கொள்ளி வெச்சிடு...

14 பின்னூட்டங்கள்:

சுப.தமிழினியன் 7:08 PM, December 10, 2009  

மொத்த தமிழ் சினிமா உலகத்தையே குருடாக்கிடு மாரியாத்தான்னு கூட சொல்லியிருக்கலாம் (ஒரு சிலரைத் தவிர்த்து)

விஜய் ஆனந்த் 7:31 PM, December 10, 2009  

:-)))...

கல்யாணி சுரேஷ் 8:32 PM, December 10, 2009  

:) Nice post.

ILA(@)இளா 10:25 PM, December 10, 2009  

துப்பாக்கியால சுட்டு, குண்டு அடிபட்டு, தொண்டை புத்துநோய் குணமாகுற மாதிரி கூட காட்டிட்டாங்க. அப்போ மாரியாத்தாவும் குண்டும் ஒன்னுங்களா?

Truth 1:46 AM, December 11, 2009  

லக்கி, நீங்கள் எத்தனை கதை எழுதுகிறீர்கள். ஒரு கதை எழுதும் போது, அந்தக் கதையின் கதாபாத்திரங்களைப் பற்றி எழுதும் போது, அந்த கதாபாத்திரமாக எழுத்தாளர் மாற வேண்டியிருக்கிறது. ஒரு கதையில் ஒரு முட்டாளும், அறிவிஜீவியும் இருக்கும் போது எழுத்தாளர் முட்டாளைப் பற்றி எழுதும் போது முட்டாளாக இருந்து தானே எழுதவேண்டும். அப்ப்டி எழுதும் போது தானே சரியாக வரும். அதேப் போல் இந்தக் கதையிலும் அம்மாவின் கதாப்பாத்திரம் அப்படி இருக்கும் பட்சத்தில் வசனம் எழுதுபவர் அப்படிதானே யோசித்து எழுதவேண்டியிருக்கிறது?

நான் சொல்வது தவறா?

அது சரி 5:01 AM, December 11, 2009  

//
- மாரியாத்தா.. உனக்கு மட்டும் சக்தி இருந்தால் தமிழ் சினிமாவுலே இந்தமாதிரி வசனம் எழுதறவனுங்களை ஊமையா மாத்திடு... இந்தமாதிரி படம் எடுக்கற டைரக்டருங்க கண்ணுலே கொள்ளி வெச்சிடு..
//

That's Lucky touch!

ROTFL :0))))

ஜ்யோவ்ராம் சுந்தர் 10:33 AM, December 11, 2009  

/மாரியாத்தா.. உனக்கு மட்டும் சக்தி இருந்தால் /

கவலைப்பட்டுத்தான் ஆகணும் - மாரியாத்தாவுக்கு சக்தி இருக்கற மாதிரி தெரியல :)

அக்னி பார்வை 12:26 PM, December 11, 2009  

நோ டென்ஷன் ரிலக்ஸ்.. மதுரை வச்சு வர படங்கல பார்தேன் அதுக்கு மாரியம்ம சினிமா தேவல..

யுவகிருஷ்ணா 12:48 PM, December 11, 2009  

சுப.தமிழினியன், விஜய் ஆனந்த், கல்யாணி சுரேஷ், இளா, அதுசரி, ஜ்யோவ்ராம், அக்னிபார்வை எல்லோருக்கும் நன்றி!


ட்ரூத்!

எழுத்தின் அடிப்படையை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். விரைவில் பெரிய எழுத்தாளராக வர வாழ்த்துகள்!

சுவாசிகா 3:50 PM, December 11, 2009  

எங்கோ போற மாரியாத்தா..வந்து இவங்க மேல வந்து ஏறு ஆத்தான்னு சொல்ல வரீங்க..

ரைட்டு..

ஆனா ஒண்ணு..சீரியஸா (அபத்த)காமெடி பண்றது கஷ்டங்க..அத போய் குறை சொல்றீங்களே ;)

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

மகா 5:31 PM, December 11, 2009  

no comments....

வரதராஜலு .பூ 6:08 PM, December 11, 2009  

மாரியாத்தாவுக்கு வேற வேலையே இல்லையா என்ன? காப்பாத்தறது, ஊமையாக்கறது, கொள்ளிவைக்கறது ஏகப்பட்ட ஒர்க் லோடு. முடிவே கெடையாதா இதுக்கு?

ஆதிமூலகிருஷ்ணன் 3:11 PM, December 12, 2009  

:-))

யாசவி 9:24 AM, December 14, 2009  

//லக்கி, நீங்கள் எத்தனை கதை எழுதுகிறீர்கள். ஒரு கதை எழுதும் போது, அந்தக் கதையின் கதாபாத்திரங்களைப் பற்றி எழுதும் போது, அந்த கதாபாத்திரமாக எழுத்தாளர் மாற வேண்டியிருக்கிறது. ஒரு கதையில் ஒரு முட்டாளும், அறிவிஜீவியும் இருக்கும் போது எழுத்தாளர் முட்டாளைப் பற்றி எழுதும் போது முட்டாளாக இருந்து தானே எழுதவேண்டும். அப்ப்டி எழுதும் போது தானே சரியாக வரும். அதேப் போல் இந்தக் கதையிலும் அம்மாவின் கதாப்பாத்திரம் அப்படி இருக்கும் பட்சத்தில் வசனம் எழுதுபவர் அப்படிதானே யோசித்து எழுதவேண்டியிருக்கிறது?//

agree

Back to TOP