அடிக்கடி தொலையும் ‘அந்த’ மேட்டர்!

November 13, 2009


கந்தனுக்கு ரயிலுக்கு நேரம் ஆகிக்கொண்டே போகிறது. தேடிக்கொண்டேயிருக்கிறான். எங்கேதான் போயிருக்கும்? ச்சே.. தம்மாத்தூண்டு மேட்டரு, இதைப் போயி அடிக்கடி தொலைக்கிறோமே என்று அவனை அவனே நொந்துகொண்டான். அவன் குட்டிப்பையனாக இருந்தபோது அடிக்கடி இதை தொலைத்துவிட்டு அம்மாவிடம் அடிவாங்குவானாம். இன்னும் கூட வீட்டுக்கு வரும் சொந்தக்காரர்களிடம் சொல்லி சிரித்து மானத்தை வாங்குகிறார் அம்மா.

”போனமாசம் தான் வாங்கியது. புத்தம்புதுசு. அதைப் போய் தொலைத்துவிட்டேனே? எனக்கு பொறுப்பேயில்லை” மனதுக்குள் பேசியவாறே தேட ஆரம்பித்தான். இது அடிக்கடி தொலைந்து போகிறது என்று நண்பர்களிடம் சொன்னால் வாய்விட்டு சிரிப்பார்கள். “இதைப்போயி ஏண்டா கழட்டுறே? அப்படியே போட்டுக்கிட்டிருக்க வேண்டியது தானே?” என்பார்கள். அவர்களுக்கென்ன தெரியும்?

24 மணி நேரமும் அதை போட்டுக் கொண்டிருந்தால் அரிக்காதா? சொறிந்து சொறிந்து சிவந்து விடுகிறது. சில நேரங்களில் புண்ணும் ஆகிவிடுகிறது. சூரிய வெளிச்சம் படாமல் அந்தப் பகுதியின் நிறமே வெளிர்நிறமாய் மாறிவிடுகிறது. காற்றாவது படட்டும் என்றுதான் இரவுவேளைகளில் மட்டும் கழட்டிவிடுகிறான் கந்தன். அதுபோல கழட்டுவது பிரச்சினையில்லை, காலையில் எழுந்ததுமே அதை எங்கே கழட்டி வைத்தோம் என்பதை மறந்துவிடுவது தான் அவனது பிரச்சினை.

அய்யோ. ரயிலுக்கு நேரம் ஆகிறது. இன்னும் ஐந்து நிமிடத்தில் கிளம்பிவிட வேண்டும். அதற்குள் கிடைத்துவிடாதா?

நேற்று இரவு 12 மணிக்கு அறைக்கு வந்தேன். லைட்டுக்கு ஸ்விட்ச் போட்டேன். சட்டையை கழட்டினேன். பேண்டை கழட்டினேன். லுங்கி எடுத்து மாட்டிக் கொண்டேன். அதன்பிறகு தான் ‘அதை' கழட்டி இருக்க வேண்டும். வழக்கமாக அதுதான் நடக்கும். கழட்டி பொதுவாக எங்கே வைப்பேன்? டேபிள் மேல் வைப்பேன்? இல்லை தம் அடிக்க அந்த வேளையில் பாத்ரூமுக்கு போனால் பாத்ரூமில் சோப்பு பெட்டி வைக்கும் இடத்துக்கு அருகில் ஓரமாக வைத்திருப்பேன். அங்கேயும் காணோமே? எங்குதான் போயிருக்கும். சரி நேரம் ஆகிவிட்டது. ஊருக்கு போகவேண்டியதுதான். ஒரு வாரம் கழித்து வந்து ஓய்வாக தேடிக்கொள்ளலாம். பையை எடுத்துக் கொண்டு கந்தன் கதவை சாத்திக் கொண்டு அவசர அவசரமாக கிளம்பினான்.

கந்தன் தேடிக்கொண்டிருந்த அந்த சிகப்புக்கல் மோதிரம் கட்டிலுக்கு கீழே கிடந்தது.

10 பின்னூட்டங்கள்:

பீர் | Peer 6:00 PM, November 13, 2009  

மீள் பதிவு? முன்பே வாசித்த நினைவிருக்கிறது :)

Anonymous 6:09 PM, November 13, 2009  

I guessed the final twist while reading second paragraph itself.

..One of the regular readers

சூரியன் 6:25 PM, November 13, 2009  

அவ்வ்வ், அப்போ அத சொல்லலியா நீங்க..

சாம்ராஜ்ய ப்ரியன் 6:43 PM, November 13, 2009  

:D

Anonymous 7:52 AM, November 14, 2009  

222222222222 much...

tamilan 2:32 PM, November 14, 2009  

நல்லாத்தான் உசுப்பேத்திறீங்கண்ணா...

உங்கள் பதிவுகளை http://www.nilamuttram.com/ எனும் இணையத்தளத்திலும் பதிவு இட்டு எங்கள் முயற்சிக்கு கைகொடுக்கவும்

கடைக்குட்டி 10:07 PM, November 14, 2009  

கிக்க்கி,,,, :-) நல்லா இருக்கு

Truth 12:14 AM, November 15, 2009  

மேல :-)

விந்தைமனிதன் 11:54 AM, November 15, 2009  

”ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?”
ம்ம்ம்ம்.”அதுவா வருது”.
லக்கி சார்.லக்கி சார்.
கொஞ்சம் நம்ம பக்கமும் வந்துட்டு போங்க

விந்தைமனிதன் 3:29 PM, November 15, 2009  

அய்யன்மீர்! புதிய பதிவனாகிய நான் எழுதியுள்ள “மவனே செத்தீங்கடா...” பதிவின் தொடர்ச்சியை தங்களைப் போன்ற் மூத்த பதிவர்கள் எழுதி எளியேனுக்கு அருளுமாறு.....

Back to TOP